கடவுளை மற..மனிதனை நினை..

Showing posts with label கவிதை. Show all posts
Showing posts with label கவிதை. Show all posts

14 November 2010

காதலி எனும் ஒற்றைச் சொல்

8:28:00 AM Posted by புலவன் புலிகேசி , 10 comments



கவிதை எழுத யோசித்தால்
கண்ணெதிரில் வந்து
நிற்கிறாள்

முத்தமிட எத்தணிக்கையில்
முகந் திருப்பி ஓடிப்
போகிறாள்

எதிர்பாரா சூழலில் இச்
என்று இதழ் பதித்துச்
செல்கிறாள்

எட்ட நின்று எதிர் வீட்டுப்
பெண்ணை ரசிக்கையில் எங்கிருந்தோ
அலைபேசியில் அதட்டுகிறாள்

என்னை முழுதாய் ஆக்கிரமித்த அவளை
காதலி என ஒற்றைச் சொல்லில்
முடித்தல் தகுமோ!?

11 October 2010

மொதலாளி

9:11:00 AM Posted by புலவன் புலிகேசி , , , 17 comments

கம்பி மேல் நடந்தாள்
ஒரு சிறுமி

அப்பாவின் காமிராவில் பிடித்தாள்
இன்னொரு சிறுமி

கையில் தட்டேந்தி நடந்தான்
ஒரு சிறுவன்

கையில் ஐஸ்க்ரீமுடன் கடந்தான்
இன்னொரு சிறுவன்

ஏன் இந்த முரண்
என யோசிக்கையில்

கையில் தடேந்திய சிறுவன்
கேட்டான்

"மொதலாளி" காசு போடுங்க.

19 September 2010

கொலுசு

7:58:00 AM Posted by புலவன் புலிகேசி , 11 comments

கொலுசொலி

அவள் பாதங்களால் இசையமைக்கும்
காதல் பாடல்.

புன்னகை

இதழால் சிந்தினால் புரிந்திருப்பேன்
ஆனால் கண்ணால் சி(சீ)ந்துகிறாள்.

தேநீர்

"தேன் போன்ற நீர் என்றாள்"
உண்மைதான் உன்னுடன்
அருந்துகையில் மட்டும்.

போலி

நான் அவளை ரசிக்கையில்
போலியாக முறைத்தாள்
நான் திரும்பிய பின்
எதிர் பார்த்து ஏங்கினாள்.

08 July 2010

மதம் வளர்க்கும் பொருள்!

8:13:00 AM Posted by புலவன் புலிகேசி , 9 comments

மக்களை ஜாதி எனும்
போதைக்குள் மூழ்கடித்த
போதைப் பொருள்

மக்களை மடையர்களாக்கி
வைத்திருக்கும் பழமை நிறைந்த
அரசியல்வியாதி

லஞ்சப் பேர்வழிகளிடமே
லஞ்சம் பெற்று வளரும்
முதலாளி.

மொத்தத்தில்.............

மனிதம் அழித்து மதம்
வளர்க்கப் படைக்கப் பட்ட
ஒரு பொருள்

கடவுள்!

28 June 2010

பெண் என்ற அடிமைச்சொல்

11:38:00 PM Posted by புலவன் புலிகேசி , , 20 comments

பெண்ணை
மலராக
காற்றாக
மேகமாக
உவகைப் படுத்தாதே!

அது அவளை
முள்ளாக
புயலாக
அடை மழையாக
மாற்றி விடும்!

பெண் என்ற அடிமைச் சொல்லையும்
ஆண் என்ற ஆதிக்கச் சொல்லையும்
விட்டொழி!

பெண் என்பவள் ஆளுமைக்குட்
பட்டவள் அல்ல இதை
முதலில் பெண்ணே நீ
புரிந்து கொள்!

உன் மனதில் பதியப்பட்ட
அடிமைத் தனங்களின்
ஆணி வேரைப் பிடுங்கி எறிந்து
விட்டு வா!

உலகம் உனக்கும் சொந்தம் தான்!

21 May 2010

முத்தம் வெட்கம் சப்தம்

7:23:00 AM Posted by புலவன் புலிகேசி 28 comments

முத்தம்

ஆளரவமற்ற அன்றைய மாலையில்
அவள் கொடுத்தது எடுத்து சென்றது
என் உயிரை
நடை பிணமாய்
அலைகிறேன் அவளைத் தேடி
என் உயிரை மீட்க!

வெட்கம்

இதழ் பதித்து இட்ட
போது இச் என்ற சப்தம்
அருகாமை நாய் அதை
அழைத்ததாய் எண்ணி வந்த
போது அவளிடம் ஒரு சிரிப்பு
இதுதான் வெட்கமோ!

சப்தம்

சப்தமிட்டு சொல்லாதே
நீ என் காதலி என்று
பறவைக் கூட்டம் என்னைத்
தேடிக் கொல்ல்க் கூடும்

01 May 2010

மருதாணி, முள், மழை

6:44:00 AM Posted by புலவன் புலிகேசி 25 comments

மருதாணி

நீ தொட்டுப் பறித்து
இட்ட மருதாணி
சிவக்க வில்லை கைகள்.....
சிவந்து போனது மருதாணி....

முள்

நீ கடந்து போகும்
பாதையில் கிடந்து
போன முள் குத்தக்
கூடாது உன்னை என
முறித்துக் கொண்டது தன்னை

மழை

உன்னை நனைக்க வந்த
மழைத்துளி தடுத்து நின்ற
சேலையிடம் கொண்ட கோபத்தால்
மாறியது பெருமழையாய்

17 April 2010

சொந்த பந்தங்கள் - 5

8:04:00 PM Posted by புலவன் புலிகேசி , 19 comments
நண்பன்



சுமந்து பெற்று சீராட்டி
வளர்த்த பெற்றோரை விட
என்னை நன்கறிந்தவ(ள்)ன்

இன்பமோ துன்பமோ இரண்டிலும்
பங்கெடுத்து உறுதுணையாய்
இருப்பவ(ள்)ன்

அடித்துப் பிடித்து சண்டையிட்டாலும்
அடுத்த நிமிடம் அருகில்
நிற்பவ(ள்)ன்

என் பிழைகளைத் தனிமையில்
திருத்தி என் பெருமைகளை
மற்றவரிடம் சொல்பவ(ள்)ன்.......

04 March 2010

சொந்த பந்தங்கள் - 4

6:46:00 AM Posted by புலவன் புலிகேசி , 23 comments


அக்கா

தினம் தினம் சண்டையிட்டாலும்
சிறுவயது முதல் வழிகாட்டி

என்னதான் சண்டையென்றாலும் இளவலை
மற்றவர் முன் விட்டுக்
கொடுக்காத பாசப்பறவை.

தங்கை

அரசு பாடத்திட்டம் எப்போது
மாறும் என்ற ஏக்கத்துடன்
வாழும் ஒரு ஜீவன்

இதுவரை கிடைத்ததெல்லாம்
மூத்தோரின் பழைய புத்தகங்கள்
என்பதால்

பொதுவாய்

திருமண சீர்வரிசை ஏற்றதாழ்வு
பிரச்சினை வந்தது பெற்றோருடன்

பெற்றோரின் இறப்பு செய்தி

மனம் விட்டு ஒன்றுகூடி
அழுத ஜீவன்கள்

23 February 2010

சொந்த பந்தங்கள் - 3

6:23:00 AM Posted by புலவன் புலிகேசி , 24 comments

அண்ணன்

தன் இளவல் கற்க
தன் கல்வி இழந்தான்

தமையாளின் மணம் முடிக்க
தன் மணம் தள்ளினான்

இருவரும் இவன் மறந்து
இன்புற்றிருக்க இவனோ

துன்புற்றிருப்பினும் அவர்கள்
இன்பத்தில் திளைத்திருக்கிறான்

தம்பி

அம்மையப்பனின் செல்லப் பிள்ளை
அதனால் மூத்தவனின் பிள்ளைப்

பருவ எதிரி வளர்பருவத்
தோழன் வளர்ந்த பின்

பங்காளி

14 February 2010

என் காதல் சொல்ல நேரமில்லை

5:15:00 AM Posted by புலவன் புலிகேசி 29 comments


என் காதல் சொல்ல
உண்மையில் நேரமில்லை

இன்றும் சொல்லாமல் காதலித்துக்
கொண்டிருக்கிறேன் இறுதி

வரை என்னால் சொல்லவும்
முடியாது ஆனால்

இது ஒரு தலைக்
காதலும் இல்லை

இது இரு தலைக்
காதலும் இல்லை

எப்படி சொல்வேன்
என் காதலை

அம்மா அப்பா அண்ணன்
நட்பு மனிதம் மிளிரும்

மனிதர்கள் பாசம் மிக்க
விலங்குகள் உணவு தரும்

தாவரங்கள் உயிரற்ற பொருட்கள்
ஒவ்வொன்றாக சென்று

என் காதல்
சொல்ல நேரமில்லை

03 February 2010

இரத்தக் கண்ணீர்

5:48:00 AM Posted by புலவன் புலிகேசி 30 comments
இரத்தக் கண்ணீர்

Justify Full
கால் இடறி கீழே
விழுந்த போது உடன்
விழுந்து உடைந்த கைப்பொம்மையை
மடியில் வைத்து அழுது
கொண்டிருந்தாள் முட்டிக்கால்
குருதியுடன்

பொக்கிஷம்



அடுக்ககத்தில் உடைந்த பொம்மை
குப்பையானது அடுக்ககக் குழந்தைக்கு
குப்பைத் தொட்டி பொம்மை
பொக்கிஷமானது குடிசை குழந்தைக்கு

27 January 2010

சொந்த பந்தங்கள் - 1

6:30:00 AM Posted by புலவன் புலிகேசி , 24 comments

தாத்தா



கைத்தடி தாங்கி நடக்கும்
தள்ளாத வயதிலும்
பேரனை தூக்கி நடந்தார்
பள்ளிக் கூடத்திற்கு

பாட்டி


தள்ளாத வயதிலும் பாடம்
முடித்து வரும் பேரப்பிள்ளைக்காக
பனியில் காத்து கிடக்கும்
இன்னொரு தாய்

19 January 2010

பெற்றோர் சொத்து பிள்ளைக்கு

6:21:00 PM Posted by புலவன் புலிகேசி 36 comments


தட்டு
தண்ணீர் குவளை
படுக்கை
பெற்றோர் விட்டு சென்ற சொத்து
முதியோர் இல்லத்தில்


இரு கைகளற்ற அனாதைக்
குழந்தைக்கு டாட்டா காட்ட
ஓங்கிய வலக்கையை இடக்கை
திட்டியது காலால் டாட்டா
காட்டி தன்னம்பிக்கை காட்டினாள்
அச்சிறுமி


பி.கு: இரண்டாவது கவிதை மட்டுமல்ல. இந்த பொங்கலில் எனக்கு நேர்ந்த நான் கலங்கிய நிஜம்.

13 January 2010

பொங்குமா பொங்கல்

4:19:00 AM Posted by புலவன் புலிகேசி 27 comments

பெற்றோரையும் உற்றோரையும் சந்தித்து
மகிழ்ச்சி பொங்க வீட்டில்
பொங்கலும் பொங்கி நண்பர்களுடன்
அலவளாவி கழிக்கப் போகும்

இந்த தைத்திருநாளை எண்ணி
மகிழ்ந்து கொண்டிருக்கும் நேரம்
வீட்டு வாசலில் வந்து
நிற்க போகும் பிச்சைக்காரனின்

பிள்ளைக்கு என்ன செய்ய
போகிறாய் குழந்தைகளுக்கு பிச்சையிடுவது
தவறு என்ற கொள்கையை
வைத்து கொண்டு

மனம் கேட்ட கேள்விக்கு
பதில் சொல்லாமல் புறப்படுகிறேன்
சொந்த ஊருக்கு

அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள் மக்கா. ஊருக்கு போறதால எல்லார் பதிவையும் உடனடியா படிக்க முடியாதுன்னாலும் அப்பப்ப படிச்சி பின்னூட்டமிடுறேன்.

06 January 2010

சோசியக்காரன்

4:50:00 AM Posted by புலவன் புலிகேசி 37 comments

ஆறறிவு வாழ்வின் அதிர்ஷ்டத்தை
ஓரறிவு கிளியிடம் கேட்டவனுக்கு
புரியவில்லை அதிர்ஷ்டம் உழைப்பில்
உள்ளது என்று

திருமணம் நடக்க பரிகாரம்
என்ன சோசியக்காரனை கேட்டவனுக்கு
தெரியவில்லை ஜாதகத்தை தூக்கியெறிந்தால்
நடக்கும் என்று

எதிர்காலம் அறிய் கைரேகை
பார்த்தவன் அறியவில்லை
முயற்சியிருந்தால் ஒளி மயமான
எதிர்காலம் என்று

நாடித் துடிப்பை மருத்துவனிடம்
காட்டாமல் சோசியக்காரனிடம்
காட்டி கேட்டான் ஆயுள்
எப்படி என்று

01 January 2010

புத்தாண்டில் வெற்றி பெற

7:21:00 AM Posted by புலவன் புலிகேசி 18 comments

வெற்றியை நோக்கி பயணிப்போருக்கு
ஒவ்வொரு நாளும் புத்தாண்டு

சென்ற நாளின் தோல்விகளை
தேடிப் பிடித்து இன்று

மீண்டும் வெற்றியை நோக்கி
பயணிப்போம் புத்தாண்டு

புது நாள் ஆகிவிடும்
புத்துணர்வு பெருகும்

தோல்வி தூரமாகி விடும்
வெற்றி சொந்தமாகி விடும்

இந்த புத்தாண்டு அனைவருக்கும் பற்பல வெற்றிகளை பெற்று தர வாழ்த்துக்கள்..

28 December 2009

காமம்தான் காதலா?

2:39:00 AM Posted by புலவன் புலிகேசி 32 comments

காதல் கொண்டேன் எனை
காதலியுடன் சேர்த்து வை
எனக் கதறிய நண்பனுக்காய்

அப்பெண்ணை பெற்றவன் பிரித்து
உற்றவன் இவன் எனக்
கூறி இணைத்து வைத்தேன்

அறுபதும் முப்பதும் முடித்து
பிரிந்து வந்த அப்பெண்ணை
வேண்டாம் என பெற்றவனும்

இவள் இனி தேவையில்லை
என உற்றவனும் உதறி
தள்ள அனாதையாய் அவள்

காரணம் நானோ என்ற
குழப்பத்தில் நண்பனை கேட்டேன்
காமம்தான் காதலா?

27 December 2009

காதலி(யி)ல்லா நண்பன்

4:33:00 AM Posted by புலவன் புலிகேசி 25 comments

அலுவல் களைப்பில் அயர்ந்து
உறங்கிய அந்த ஞாயிறில்
கால்களை எட்டி மிதித்து
எழுப்பிய நண்பனை பார்த்ததும்
வந்த கோபம் மாறியது
புன்னகையாய்

அதன் பின் சென்ற
உணவகம் மாலை நேர
மெரீனா அரட்டை இரவு
நேர திரையரங்கம் இவை
அனைத்தும் சாத்தியமானது
எங்களுக்கு காதலி இல்லாததால்

22 December 2009

நினைவில் நில்லாமல்

2:13:00 AM Posted by புலவன் புலிகேசி 41 comments

முதன் முதல்

தாய் கொடுத்த முத்தம்
பெயர் சூட்டிய பெருவிழா
தொட்டிலில் கண்ட கனவு
அணிந்த ஆடை

முளைத்த பல்
பார்த்த முகம்
தடுக்கி விழுந்த தளம்
ரசித்த ஒலி

ருசித்த உணவு
தந்தை அடித்த அடி
பள்ளி சென்ற நாள்
படித்த பாடம்

பிடித்த ஆசான்
கிடைத்த நண்பன்
எத்தனை முறை யோசித்தாலும்
நினைவு வராமல்...