கவிதை எழுத யோசித்தால்
கண்ணெதிரில் வந்து
நிற்கிறாள்
முத்தமிட எத்தணிக்கையில்
முகந் திருப்பி ஓடிப்
போகிறாள்
எதிர்பாரா சூழலில் இச்
என்று இதழ் பதித்துச்
செல்கிறாள்
எட்ட நின்று எதிர் வீட்டுப்
பெண்ணை ரசிக்கையில் எங்கிருந்தோ
அலைபேசியில் அதட்டுகிறாள்
என்னை முழுதாய் ஆக்கிரமித்த அவளை
காதலி என ஒற்றைச் சொல்லில்
முடித்தல் தகுமோ!?
கண்ணெதிரில் வந்து
நிற்கிறாள்
முத்தமிட எத்தணிக்கையில்
முகந் திருப்பி ஓடிப்
போகிறாள்
எதிர்பாரா சூழலில் இச்
என்று இதழ் பதித்துச்
செல்கிறாள்
எட்ட நின்று எதிர் வீட்டுப்
பெண்ணை ரசிக்கையில் எங்கிருந்தோ
அலைபேசியில் அதட்டுகிறாள்
என்னை முழுதாய் ஆக்கிரமித்த அவளை
காதலி என ஒற்றைச் சொல்லில்
முடித்தல் தகுமோ!?




















