கடவுளை மற..மனிதனை நினை..

Showing posts with label Rajini. Show all posts
Showing posts with label Rajini. Show all posts

14 July 2011

மும்பை குண்டுவெடிப்பும் ரஜினி ரசிகனின் ஏமாற்றமும்

12:02:00 AM Posted by புலவன் புலிகேசி , , , 7 comments
இரண்டு நிகழ்வுகள் ஒரே நாளில். ஒன்று மும்பையில் குண்டு வெடித்து பலர் பலி. இன்னொன்று சிகிச்சை முடிந்து ரஜினி சென்னைத் திரும்பினார். இவை தொடர்பாக நான் சந்தித்த இரண்டு சம்பவங்களைப் பகிர்ந்து கொள்கிறேன்.

சம்பவம்-1


அலுவல் முடித்து வீடு வந்துத் தொலைக்காட்சிப் பெட்டியை ஆன் செய்து ஹெட்லைன்ஸ் டுடே சானலுக்கு நகர்ந்தேன். மும்பையில் மூன்று இடங்களில் குண்டு வெடித்து 20க்கும் மேற்பட்டோர் பலி என்ற செய்தியைப் பார்த்ததும் நண்பன் ஒருவனை அலைபேசியில் அழைத்து

"எங்கடா இருக்க?" என்றேன்.

"தலைவரைப் பாக்க ஏர்போர்ட் வந்துருக்கண்டா" என்றான்.

"மும்பையில 3 இடத்துல குண்டு வெடிச்சிருக்குடா" என்றேன்.

"ஓ அப்புடியா! சரிடா ஒரே சத்தமா இருக்கு! தலைவர் வந்துட்டாருன்னு நெனைக்கிறேன். அப்பறமா கால பன்றேண்டா" என்று சொல்லி கட செய்தான்.

சம்பவம்-2



நான் செய்தியைப் பார்த்துக் கொண்டிருக்கையில் என்னுடன் தங்கியிருக்கும் நண்பன் விட்டிற்குள் நுழைந்தான்.

"எங்கடா மும்பைலையா?" என்றான்.

"ஆமாண்டா" என்றேன்.

"சரி சண் நியூஸ் வைடா. தலைவரைக் காமிக்கிறாங்கலாம்" என்றான்.

சன் செய்திகளின் முக்கிய செய்திகளில் முதலிடத்தில் "மும்பை சம்பவமும்" இரண்டாமிடத்தில் "ரஜினி வருகையும்" இடம் பிடித்திருந்தது.

இதைப் பார்த்த நண்பன் சொன்னான் "சே! இன்னைக்கு மட்டும் குண்டு வெடிக்கல எங்க தலைவரு நியூஸ் தான் ஃபஸ்ட். மிஸ் ஆயிருச்சு" என்றான்.