உழுது விதை விதைத்து
நாற்று நட்டு நீர்ப் பாய்ச்சி
கதிர் அறுக்கும் விவசாயி
உழைப்பில்....
நல்லவன் கெட்டவன்
தெரியாமல் யாரைப் பார்த்தாலும்
புன்னகை செய்யும் பச்சிளம்
குழந்தையின் சிரிப்பில்...
தோல்வியில் துவண்டு
விழும் போது தோள்
கொடுத்துத் தூக்கும்
தோழமையிடம்...
ஆதறவற்றோர் இல்லத்தில்
50 காசு மிட்டாய்க்கு
அழகாய் சிரிக்கும்
சிறுவனிடம்....
விபத்தில் சிக்க நேர்ந்த போது
என் கையைப் பிடித்துக்
காப்பாற்றிய பெயர் தெரியாத
மனிதனிடம்....
கண்டேன் கடவுளை....
கோவிலில் அல்ல....





