கடவுளை மற..மனிதனை நினை..

Showing posts with label புவி வெப்பமாதல். Show all posts
Showing posts with label புவி வெப்பமாதல். Show all posts

20 March 2010

புவி வெப்பமாதலுக்கு எதிராக ஒரு போர் - 3

7:02:00 AM Posted by புலவன் புலிகேசி , 21 comments

அன்றாட பழக்க வழக்கங்களில் சிறு மாற்றம் செய்தல்

- தினசரி நாம் உபயோகிக்கும் மின்சாரம் சார்ந்த பொருட்களை சரியன முறையில் பராமரிக்க வேண்டும்

- முடிந்த வரை வீட்டிலேயே உணவு சமைத்து சாப்பிட பழக வேண்டும். இயலாத நேரங்களில் மட்டும் ஹோட்டல்களுக்கு செல்லலாம். ஹோட்டல்களில் உபயோகிக்கப் படும் கியாஸ் சிலிண்டர்களால் வெளியிடப்படும் கார்பன் - டை- ஆக்சைடு அதிக அளவு காற்று வெளிகளில் கல்ந்து காற்றை மாசு படுத்துவதோடு புவி வெப்பமாதலுக்கும் துணை நிற்கிறது.

- அசைவ உணவுகள் தயாரிப்பதற்கு ஆகும் கியாஸ் அதிகம். அதற்கு செலவிடப் படும் எனர்ஜியை திரும்பத் தயாரிக்க தேவைப்படும் கியாஸ் மூலம் காற்றுவெளி மாசடைந்து இந்த பூமியை வெப்பப்படுத்தும் காரணியாகிறது.

- முடிந்த வரை அசைவ உணவுகள் உண்ணுவதை குறைத்துக் கொள்ளலாம். அதே நேரம் சைவ உணவுகள் தயாரிக்க ஆகும் நேரமும், அதற்கு செலவிடப் படும் எரிபொருளும் மிகக்குறைவே.

- அசைவம் தவிர்க்க நிச்சயம் நம்மில் பலருக்கு மனமிருக்காது. ஆனால் குறைத்துக் கொள்வதில் யாருக்கும் ஆட்சேபனை இருக்காது என்றுதான் நினைக்கிறேன்.

- வீடுகளுக்கு வர்ணம் பூசும் போது செய்ய வேண்டியவை: தட்ப வெட்ப நிலை நல்ல வெயில் எனில் வெளிர் நிறங்களில் வர்ணம் பூசவும்.

- நீங்கள் வசிக்கும் பகுதி குளிர் நிறைந்தது எனில் நல்ல அடர்த்தியான(டார்க்) நிறத்தில் வர்ணம் பூசவும். இதன் மூலம் கார்பன் -டை- ஆக்சைடின் அளவைக் குறைக்க முடியுமாம்.

மரங்களை வளர்த்தல்

இதன் அவசியம் குறித்து தனிப் பதிவே எழுதியிருக்கிறேன் பசுமைக் கொலைகள். ஒரு மரம் வெட்டினால் இரு மரக்கன்றுகள் நடப்பட வேண்டும். மரங்களின் அவசியம் மரத்துப் போன மனிதர்களுக்கு என்றுதான் புரியப் போகிறதோ?

இவற்றை செய்வது நம் கடமை அல்ல. நம் இயல்பாக இருக்க வேண்டும். இத்தகைய சிறு செயல்களினால் பெரும் மாற்றங்கள் நிகழும் என்பது அப்பட்டமான உண்மை. கை கோர்த்து இப்போரில் வெற்றி பெறுவோம் வாருங்கள்.

பி.கு: இனி டரியல் திங்கள் கிழமைகளில் வெளிவரும். மேலும் இந்த புவி வெப்பமாதலைத் தடுக்கும் வழி முறைகள் தெரிய வந்தால் அவ்வப்போது டரியலில் சொல்கிறேன்.

19 March 2010

புவி வெப்பமாதலுக்கு எதிராக ஒரு போர் - 2

5:55:00 AM Posted by புலவன் புலிகேசி , 29 comments

வாகனங்களை பராமரித்தல்


- வாகனங்களை சரியான முறையில் பராமறரிக்க வேண்டும். சரியான கால இடைவெளிகளில் சர்வீஸ் செய்து பயன்படுத்தல் வேண்டும்.

- மிதமான வேகத்திலும் சீராகவும் வாகனத்தை ஓட்டப் பழக வேண்டும். அதிவேகமாக செல்லும் போது அதன் எரிபொருட்கள் அதிக அளவு கார்பன் - டை - ஆக்சைடு வாயுவை வெளியேற்றுகிறது. மிதமான வேகமும் அதற்கேற்ற கியர் முறையும் பயன் படுத்தப் பட்டால் எரிபொருள் சிக்கனமாவதுடன் புவியின் வெப்பத்தையும் குறைக்க முடியும்.

- வாகனங்களை ஒரே இடத்தில் ஆன் செய்து நிறுத்தி வைப்பதைத் தவிர்க்கவும். 30 செகன்ட்சுக்கு மேல் ஆகும் என்றால் அவற்றை அனைத்து வைக்க வேண்டும்.

- வாகனங்களின் டயர் அவ்வப்போது சரி பார்க்கப் பட வேண்டும். எரிபொருள் சிக்கனத்திற்கு உதவும்.

- வாகனங்களில் ஏ.சி பயன் படுத்தும் போது குறிப்பிட்ட அளவு குளிரானதும் அதை நிறுத்தி வைக்கவும். வெயிலின் தாக்கம் அதிகமிருந்தால் மட்டுமே ஏ.சியை உபயோகிக்கவும். பெருமைக்காக உபயோகிக்க வேண்டாம்.

- குறைந்த அருகில் உள்ள இடங்களுக்கு செல்லும் போது மோட்டார் வாகனங்களைத் தவிர்க்க முயற்சி செய்ய வேண்டும். அது பூமிக்கு மட்டுமல்ல நம் உடலுக்கும் நல்லது. வாக்கிங் சென்றது போல் இருக்கும்.

- உங்கள் வாகனம் கேஸ் சிலிண்டரில் இயங்குவதாயின் அதன் மூடியை தினம் சரி பார்க்கவும். வாயுக் கசிவு இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது நம் கடமை.

- அதிக மைலேஜ் கொடுக்கும் வாகனங்களாக பார்த்து வாங்கவும். அதன் மூலம் நம் பணத்துடன் சேர்த்து பூமியையும் காக்க முடியும்.

- வாகனத்தில் ஏ.சி இருப்பின் சர்வீஸ் செய்யும்போது அதன் கூலண்ட் ரீசைக்கிள் செய்யப் பட வேண்டும். இதன் மூலம் கார்பன் - டை- ஆக்ஸைடு வாயுவைக் கட்டுப் படுத்த முடியும்.


யோசித்துப் பார்த்தால் இவை சொல்லி செய்ய வேண்டிய காரியங்கள் அல்ல. இயல்பாக நாம் செய்ய வேண்டியவை. நம்முடைய அலட்சியத்தால் இவ்வளவு நாள் செய்யாமல் இருந்திருக்கிறோம். இனியாவது செய்யலாம் வாருங்கள்.

மீதமுள்ள இரண்டு முறைகளைப் பற்றி அடுத்த பதிவில் சொல்கிறேன். இவை சொல்லுக்காக அல்ல நாம் செயல் படுத்துவதற்காக. இந்தப் போரில் நாடு மொழி, மதம், இனம் பாராமல் நாம் பங்கேற்க வேண்டும். கை கோர்க்கத் தயாராக இருப்பீர்கள் என்ற நம்பிக்கையில்.

பி.கு: இது என் நூறாவது இடுகை. ஒரு நல்ல விடயத்தைப் பற்றி எழுதிக் கொண்டிருக்கிறேன் என்ற திருப்தி இருக்கிறது.

18 March 2010

புவி வெப்பமாதலுக்கு எதிராக ஒரு போர் - 1

8:40:00 AM Posted by புலவன் புலிகேசி , 37 comments

புவி வெப்பமடைவது வருடந்தோறும் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. எந்த நாட்டின் அரசாங்கமும் இதைத் தடுப்பதற்கான முயற்சியில் ஈடுபடவில்லை எனக் குறை கூறுவதில் துளியும் விருப்பமில்லை. இதற்கெல்லாம் முழுக் காரணம் படித்த மக்களின் அறியாமை என்றுதான் சொல்வேன்.

நம்மைப் போன்றவர்கள் ஆடம்பர வாழ்க்கைக்கு பயன் படுத்தத் தொடங்கிய பல பொருட்கள் இன்று நம் அழிவிற்கு துணை நிற்கின்றன.குளிர் காலத்திலும் ஏ.சி போட்டு உறங்குபவர்கள் நம்மில் பலர். இந்த புவி வெப்பமாதல் குறித்து பல ஊடகங்கள் செய்திகளையும் எச்சரிக்கைகளையும் விடுத்திருந்தாலும் நித்யானந்தர் பிரச்சினை அளவிற்கு இது ஒரு பெரும் பிரச்சினையாக எடுத்துக் கொள்ளப் படவில்லை.

இதைத் தடுக்க பல ஊடகங்கள் சொன்ன வழிமுறைகளை நம்மில் எத்தனை பேர் பின் பற்றியிருக்கிறோம்? இரண்டு சதம் கூட இருக்காது. இதைத் தடுக்க நம்முடைய அன்றாட செயல் பாடுகளை நெறிமுறை படுத்தினாலே போதும். சரி இதைத் தடுக்க நாம் செய்ய வேண்டியது என்ன?

மின்சார பயன்பாட்டைக் குறைத்தல்
வாகனங்களை பராமறித்தல்
அன்றாட பழக்க வழக்கங்களில் சிறு மாற்றம் செய்தல்
மரங்களை வளர்த்தல்

இவை பலர் சொன்னதுதான். ஆனால் இவற்றை எப்படி நடைமுறை படுத்தலாம் என்பதற்கு சில வழிமுறைகள்

மின்சார பயன்பாட்டைக் குறைத்தல்

(எனர்ஜி சேவர் பல்ப்)

- நம்மில் பலர் உபயோகிக்கும் "குண்டு பல்ப்" அதிக அளவு மின்சாரம் உறிஞ்சக் கூடியது. இதனைத் தவிர்த்து இன்று மார்க்கெட்டில் கிடைக்கக் கூடிய எனர்ஜி சேவர் பல்புகளை பயன்படுத்த வேண்டும். இத்தகைய குண்டு பல்புகள் அதிக அளவு கார்பன்டை-ஆக்சைடு வாயுவை வெளியிடுகிறது.

- தேவையற்ற நேரங்களில் மின் விளக்குகள், கனினிகளை அனைத்து வைத்தல்

- வீட்டு உபயோகப் பொருட்களான ஏ.சி, ஃப்ரிட்ஜ் போன்றவற்றை தேவையில்லாமல் உபயோகிப்பதைத் தவிர்க்க வேண்டும். உதாரணமாக ஏ.சி என்பது வெப்பமிகு நாட்களில் மட்டுமே உபயோகிக்க வேண்டும். என்னைக் கேட்டால் அதை நாம் முற்றிலும் தவிர்த்து மாற்று ஏற்பாடாக மின்சாரக் காத்தாடிகளை பயன்படுத்தலாம். அதோடில்லாமல் வெப்பமிகு நாட்களில் வீட்டின் மேல் தண்ணீர் தெளித்து வெப்பத்தை தணிக்கலாம்.

- ஏ.சி, ஃப்ரிட்ஜ் போன்றவற்றை வாங்கும் போது அவற்றின் எனர்ஜி சேவர் சதவீதம் பார்த்து வாங்க வேண்டும். இதன் மூலம் கூட கார்பன்டை-ஆக்சைடின் வெளியேற்றத்தைக் குறைக்க முடியும்.

- நாம் உபயோகிக்கும் வாட்டர் ஹீட்டர் என சொல்லக் கூடிய தண்ணீரை சூடுபடுத்தும் கருவிதான் நம் முதல் எதிரி. இவை வெளியிடும் கார்பன்டை-ஆக்சைடு பன்மடங்கு அளவிலானது. இதற்கு மாற்றாக சோலார் வாட்டர் ஹீட்டிங் முறையை பயன்படுத்தலாம்.

யோசித்துப் பாருங்கள் இதைக்கூட செய்ய இயலவில்லை என்றால் நாம் மனிதர்களாக வாழ்வதில் என்ன அர்த்தம் இருக்கிறது?

மீதமுள்ள மூன்று முறைகளைப் பற்றி அடுத்தடுத்த பதிவுகளில் சொல்கிறேன். இவை சொல்லுக்காக அல்ல நாம் செயல் படுத்துவதற்காக. இந்தப் போரில் நாடு மொழி, மதம், இனம் பாராமல் நாம் பங்கேற்க வேண்டும். கை கோர்க்கத் தயாராக இருப்பீர்கள் என்ற நம்பிக்கையில்.

நன்றி http://www.eartheasy.com

பி.கு: கதிர் அண்ணனின் ஆதங்க வெளிப்பாடான "சுடும் வெம்மை" படித்த பிறகு நாம் அறிந்த வழிமுறைகளை அனைவருக்கும் கொண்டு சேர்க்கலாம் என்ற எண்ணத்தில் எழுதியதுதான் இந்த பதிவு. பலரை சென்றடைந்து சிலரையாவது சிந்திக்க வைக்கும் என்ற நம்பிக்கை எனக்கிருக்கிறது.