கடவுளை மற..மனிதனை நினை..

Showing posts with label நகைச்சுவை. Show all posts
Showing posts with label நகைச்சுவை. Show all posts

11 December 2010

குடும்பத்தோடு கொள்ளையடிக்க வாங்க!

3:00:00 PM Posted by புலவன் புலிகேசி 11 comments

சன் பிக்சர்ஸ் வழங்கும் "குடும்பத்தோடு கொள்ளையடிக்க வாங்க!"

ஹீரோ: "ஸ்பெக்ட்ரம் புகழ்" ஆ.ராசா
இணை இயக்கம்: மு.க ஸ்டாலின்
ஸ்டண்ட்: மு.க.அழகிரி
காஸ்ட்யூம்: தயாநிதி
மீடியா: கலாநிதி
இயக்கம்: கருணாநிதி
தயாரிப்பு: மக்கள் நிதி (வேற யாரு நாம தான்)

மின்ன்னஞ்சலில் வந்தது.

பி.கு: இது நண்பர் மாணவனுடையது என
ரஹீம் கஸாலி மூலம் தெரிந்தது. மாணவனுக்கு நன்றி.

27 November 2010

2050-ல் தமிழ்மொழி பாடநூல்

5:10:00 PM Posted by புலவன் புலிகேசி , 12 comments
கடவுள் வாழ்த்து
மொழி வளர்த்த ஆசாடபூதியே போற்றி
திருக்குவளை தீய சக்தியே போற்றி
மஞ்சள் துண்டு மடாதிபதியே போற்றி
கனிமொழியின் தந்தையே போற்றி
செம்மொழி மாநாடு தந்த செம்மலே போற்றி
அஞ்சாநெஞ்சனை பெற்ற அண்ணலே போற்றி
தளபதியின் தந்தையே போற்றி
மானாட மயிலாட தந்த மன்னவா போற்றி
குஷ்பூவை கட்சியில் சேர்த்த தலைவா போற்றி
சிங்களவனை வாழவைத்த சிற்பியே போற்றி
ஈழத்தை அழித்த இதயமே போற்றி போற்றி

மொழி வரலாறு.
தமிழ் என்ற மொழி, 20ம் நூற்றாண்டு வரை, எழுத்து வடிவம் பெறாமல் பேச்சு வடிவிலேயே இருந்தது. 20ம் நூற்றாண்டில் திருக்குவளையில் பிறந்த முத்துவேல் கருணாநிதி என்பவர் தான் தமிழ் என்ற மொழிக்கு எழுத்து வடிவத்தை தந்தவர். அவர் பிறந்த பிறகுதான் தமிழே பிறந்தது.
தமிழ் மட்டும் இல்லாமல், இயற்றமிழ், இசைத் தமிழ் மற்றும் நாடகத்தமிழ் ஆகிய அனைத்தையும் கண்டு பிடித்ததால் தான், கருணாநிதியை முத்தமிழ் அறிஞர் என்று அழைக்கின்றனர்.
20ம் நூற்றாண்டு வரை, திருக்குறளை திருவள்ளுவர்தான் கண்டுபிடித்தார் என்று சில ஏடுகள் திரித்து எழுதிக் கொண்டிருந்தன. 2010ல் வாழ்ந்த சிறந்த மொழியறிஞரான வாலி என்பவர் தான், திருக்குறளை எழுதியது கருணாநிதிதான் என்று கண்டு பிடித்தார். திருக்குறள் மட்டுமல்லாமல், கருணாநிதி, சிலப்பதிகாரம், சீவக சிந்தாமணி, கம்பராமாயணம் என்று பல்வேறு இலக்கியங்களை கருணாநிதி எழுதியுள்ளார் என்று வாலி கூறியுள்ளார்.
21ம் நூற்றாண்டில் வாழ்ந்த கவிஞர் வைரமுத்து என்பவர், தமிழை மட்டுமல்ல, பாரசீகம், உருது, வங்காளம், இந்தி, துளு, மலையாளம், கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகளுக்கும் எழுத்து வடிவை தந்தவர் கருணாநிதி தான் என்று ஒரு மொழி ஆய்வு நூலில் குறிப்பிட்டுள்ளார்.
இது மட்டுமல்லாமல், கருணாநிதி தொல்காப்பியம் என்ற தமிழ் இலக்கண நூலையும் எழுதியுள்ளார் என்று வரலாற்று ஏடுகள் தெரிவிக்கின்றன.

கணிதம்.
அடுத்து, ஒன்று இரண்டாக, இரண்டு மூன்றாக, பல்லாயிரக்கணக்கான எண்ணிக்கையில் குடும்பத்தை எப்படி பெருக்குவது என்பது அடுத்த கணக்கு.

பத்துக்கு பத்து என்ற சுற்றளவில் இருந்த ஒரு அறையை எப்படி ஆயிரக்கணக்கான சதுர கிலோ மீட்டர்களாக பெருக்குவது என்பதை மாணவர்கள் பயிற்சி எடுக்கவும்.

1ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு நடந்து அரசுக்கு 7000 கோடி வருமானம் வருகிறது. 2ஜி ஏலம் விடும் போது, 60,000 கோடி வருமானம் அரசுக்கு செல்லாமல், அந்தப்புரத்திற்கு செல்வது எப்படி என்பதை பித்தாகரஸ் தியரத்தை வைத்து மாணவர்கள் கணக்கிட வேண்டும்.

புவியியல்
உதய சூரியனை கோள்கள் அனைத்தும் எப்படி சுற்றி வருகின்றன என்பதைப் பற்றி மாணவர்கள் இந்தப் பாடத்திட்டத்தில் தெரிந்து கொள்ளலாம்.
விஞ்ஞானம் வளர்வதற்கு முன்னால், சூரியன் தான் பூமியை சுற்றி வருகிறது என்று நம்பிக் கொண்டிருந்தனர். முதன் முதலில் கோப்பர்நிக்கஸ் என்ற விஞ்ஞானி, கருணாநிதி என்ற சூரியனைத் தான் அனைவரும் சுற்றி வருகிறார்கள் என்று கண்டு பிடித்து சொன்னார்.

தலைமைச் செயலகத்தில் கருணாநிதி என்ற சூரியனை அமைச்சர்கள் அதிகாரிகள் என்ற பல்வேறு கோள்கள் சுற்றி வருவதே சூரியனைத் தான் மற்ற கோள்கள் சுற்றி வருகின்றன என்பதற்கான சான்று.

வரலாறு
தமிழ்நாட்டை ஆட்சி செய்த திருக்குவளை சாம்ராஜ்யம் தான் இருப்பதிலேயே மிகப் பெரிய சாம்ராஜ்யமாக கருதப் படுகிறது. முதன் முதலில் அண்ணா என்பவர் உருவாக்கிய இந்த சாம்ராஜ்யத்தை, கருணாநிதி என்பவர் கைப்பற்றினார். அவர் கைப்பற்றியவுடன், தமிழகத்தை பல்வேறு குறுநில மாநிலங்களாக பிரித்து தனது குடும்பத்தினர் ஒவ்வொருவரையும் ஆட்சி செய்ய பிரித்துக் கொடுத்தார்.

கருணாநிதிக்கு மூன்று மகன்கள். ஒருவர் இளவரசர் மு.க.முத்து. இவர் தண்ணீர் தேசத்தின் இளவரசனாக ஆக்கப் பட்டார். அடுத்தவர் இளவரசர் அஞ்சா நெஞ்சன்.

திருக்குவளை சாம்ராஜ்யத்திலேயே அஞ்சா நெஞ்சன் தான் மிகச் சிறந்த வீரனாக கருதப் படுகிறார். தனது சாம்ராஜ்யத்தை திருச்சிக்கு தெற்கே விரிவுப் படுத்திக் கொண்டே சென்றர் அஞ்சா நெஞ்சன்.

தினகரன் என்ற ஒரு சிறு குழு, அஞ்சா நெஞ்சனுக்கு எதிராக குரல் கொடுத்த போது, தினகரனை படையெடுத்துச் சென்று தாக்கி தினகரனையும் வெற்றி கண்டவர் இளவரசர் அஞ்சா நெஞ்சன்.

அடுத்த இளவரசரான இளைய தளபதி தனது அண்ணன் அளவுக்கு சுதாரிப்பாக இல்லை என்றாலும், தன்னால் இயன்ற அளவுக்கு தந்தையின் சாம்ராஜ்யத்தை விரிவு படுத்துவதில் உதவிகள் செய்துள்ளார். 21ம் நூற்றாண்டின் இறுதியில் துணை மன்னனாக பதவி ஏற்றார் இளைய தளபதி.

பட்டத்து இளவரசியான தங்கையும் தனது அண்ணன்களுக்கு சிறிதும் சளைத்தவர் இல்லை என்ற வகையில் டெல்லி வரை சென்று வெற்றிக் கொடி நாட்டியவர்....

---மின்னஞ்சலில் வந்தது. சிலவற்றை சென்சார் செய்து வெளியிட்டிருக்கிறேன்.

24 August 2010

யார் நம்பர் ஒன் டுபாக்கூர்?

10:42:00 AM Posted by புலவன் புலிகேசி , , 11 comments

இது முழுக்க முழுக்க கற்பனையே. யாருடைய மனமாவது புண்பட்டால் சேற்றை அள்ளி புண் மீது வைத்து கை வைத்தியம் செய்து கொள்ளவும்.

இந்தப் போட்டியில் மொத்தம் மூன்று பேர் பங்கேற்கின்றனர். ஒருவர் மிகப்பெரும்புள்ளி அவருக்கு தமிழகத்தில் பெரும் செல்வாக்கு. அவரது பெயர் நிதியமான் இவர் மகன் முசோலினி. இன்னொருவர் அவருக்கு பிஸினஸ் எதிரி. இருவரும் செய்வது ஒரே டுபாக்கூர் பிஸினஸ் தான். இவர் பெயர் செல்வி. இன்னொருவர் புதுசா இந்த பிஸினெஸ் ஆரம்பிச்சிருக்காரு. சினிமாவில் புகழ் வாய்ந்தவர். பெயர் விருட்சிககாந்த்.

இந்த மூவரும் ஒருவரையொருவர் தாக்கியே பெரிய ஆளாக பிஸினஸில் இடம் பெற முயற்சிப்பவர்கள். தாங்கள் செய்யும் டுபாக்கூர்களை நியாயப் படுத்தி பிஸினஸ் செய்கிறவர்கள். (இவிங்க என்ன ரகம்னே தெரியலையா???)

செல்வி: தமிழகத்தில் விலையேற்றம் நடந்து கொண்டே இருக்கிறது. நாங்கள் பிஸினெசில் இருந்த போது 15 ரூ விற்ற சாப்பாடு இப்போது 50ரூ விற்கிறது.

நிதியமான்: தமிழ்நாட்டப் பத்தி மட்டும் பேசுறீங்க. ஏன் இந்தியாவப் பத்தி பேச மாட்டேங்கறீங்க. அதையும் பத்தி பேசுங்க எனக்கு கொஞ்சம் டைம் பாஸ் (மன்னிக்கனும் நேரம் போகனும். நான் தான் பச்சை மஞ்ச சிவப்பு தமிழனாச்சே) ஆகனும்.

நிதியமான்: டேய் மவனே முசோலினி! இந்தம்மா நெறைய ஊழல் செஞ்சதத் தான் தமிழ் நாட்டுக்கே போட்டுக் காடிருக்கோம்ல. அதனால் அதுல ஒரு கேசுல தொடர்ந்து வாய்தா வாங்கினுக்கீதே. அதக் கண்டிச்சி ஒரு ஆர்ப்பாட்டம் செஞ்சி நாம தப்பிச்சிக்கனும். என்ன புரியுதா?

முசோலினி: சரிப்பா நான் பாத்துக்குறேன்.

முசோலினி: பல ஆண்டுகளாக நடைபெறும் வழக்கில் தொடர்ந்து வாய்தா வாங்கிக் கொண்டிருக்கும் செல்வியை எதிர்த்து ஒரு ஆர்பாட்டம் செய்வோம். நம் நிறுவன தொழிலாளர்கள் எல்லாம் ஒன்று கூடுங்கள். அந்த வாயாடி ராணிக்கு கண்டனம் தெரிவிப்போம்.

செல்வி: என்னைப் பார்த்து வாயாடி என சொல்லி விட்டார்கள். பொறுத்தது போதும் நிர்வாக ஊழியர்களே. பொங்கி எழுங்கள். அவர்கள் கண்டனம் நடத்திய இடங்களில் எல்லாம் நாளை நாம் கண்டனம் நடத்த வேண்டும். அனைவரும் புறப்படுங்கள்.

வாடிக்கையாளர்கள்: நேத்து அந்தாளு கண்டனம். இனைக்கு இந்தாளு கண்டனம். நாம சோத்துக்கில்லாம திண்டாடிக் கிட்டிருக்கோம். இதுக்கு ஒன்னும் பண்ணக் காணோம். ஆனா இவிங்க ரெண்டு பேரும் நல்லாவே அடிச்சிக்கிறாங்கே.

(அடுத்த பிஸினஸ் கூட்டனி குறித்த விவாதங்கள் வருகின்றன)

செல்வி: தம்பி நீங்க நம்ம கூட சேந்து பிஸினெஸ் செய்யனும். ஏத்துக்குவீங்கன்னு நம்பறேன். அப்பத்தான் அந்த நிதியமானுக்கு ஒரு பாடம் புகட்ட முடியும்.

விருச்சிககாந்த்: அப்புடி வாங்க. போன தடவ நான் தனியா பிஸினஸ் செய்யலாமுன்னு வந்தப்போ உங்க பிஸினஸ் முழுசா பாதிச்சி தோத்து போனீங்க. அந்த பயம் இருக்கட்டும். நான் உங்க கூட பிஸினஸ் செய்யனும்னா ஒரு கண்டிசன். "எனக்கு நீங்க பிஸினஸ்ல துணைத்தலைவர் பதவி கொடுக்கனும்". இதுக்கு சம்மதம்னா மேல பேசலாம்.

வாடிக்கையாளர்கள்: செம காமெடிம்மா!

(பேச்சுவார்த்தை தோல்வியில் முடிகிறது.)

விருச்சிககாந்த்: என்ன நம்மள அந்தாளு கூப்புடவே மாட்டேங்கறாரே? சரி நாமளா ஒரு அறிக்கைய உடுவோம். "செல்வி, நிதியமான் இவர்கள் இருவருமே ஊழல் பெருச்சாளிகள். அதனால் அவர்களுடன் கூட்டு வைத்து சாப்பிட...ச்சீ அவர்களுடன் கூட்டு வைத்து பிஸினெஸ் செய்ய மாட்டேன்."

நிதியமான்: என்னை ஊழல் பெருச்சாளி என சொல்லும் இவர் சினிமாவில் நடித்த போது வாங்கிய சம்பளங்களுக்கு வரி ஏய்ப்பு செய்திருப்பதாக தகவல்கள் சொல்கின்றன. என்னைப் பற்றி பேச இந்த ஊழல்வாதிக்கு என்ன தகுதி இருக்கிறது.

வாடிக்கையாளர்கள்: "பாம்பின் கால் பாம்பறியும்"-னு சொல்லுவாங்களே அது இதுதானோ???

விருச்சிககாந்த்: பொறியல்...அடச்சே! கூட்டு குறித்து எனது இறுதி அறிக்கை இது. "என்னைத் தலைமையாக ஏரற்கும் முதலாளிகளுடந்தான் நான் கூட்டனி வைப்பேன்."

வாடிக்கையாளர்கள்: யம்மா முடியலப்பா. 2010-ட செம காமெடியன் இவுருதான். என்னமா கமெடி செய்யுறாரு...எப்பவுமே மப்புலதாம்பா அறிக்கை உடுறாரு.