
முன்னர் ஒரு முறை இதே சூர்யாவுக்கு பரிந்து பேசியவர்களே இதுக்கும் வந்து பதில சொல்லுங்க. அட இவுரு உதவி செய்யறேன், படிக்க வைகிறேன் அப்புடிங்கறதெல்லம் ஒரு பெரிய அரசியல் தந்திரமப்பா. இவருக்கு எதிர்காலத்தில் அரசியலில் ஒரு இடம் உண்டு. "யாரு எக்கேடு கெட்டா எனக்கென்ன என் பொழப்பு நடக்கனும்" - இதையே தனது கொள்கையாக வகுத்து வைத்திருப்பவர்தான் இந்த சூர்யா.
"மிர்ரர்"-னு ஒரு பெங்களூரு பத்திரிகையில இவுரு ஒரு பேட்டிக் குடுத்துருக்காரு.
"ஐஃபா விழா விவகாரமே செத்துப் போன ஒன்று. அதை இனியும் இங்கே பேசிக் கொண்டிருக்கக் கூடாது. அது ஒரு சின்ன விஷயம். அதைப் போய் இன்னும் பெரிதாக்கிக் கொண்டிருக்கிறீர்களே… என்னுடைய ரத்த சரித்திரா வெளியீட்டை அந்த விழா தொடர்பாக விதிக்கப்பட்ட தடைகள் ஒன்றும் செய்து விடாது. சமீபத்தில் ராவணன் ரிலீஸானபோதுகூட யாரும் ஒன்றும் சொல்லவில்லையே"
அப்ப இலங்கைப் பிரச்சினையும் செத்துப் போன ஒன்றா? ஆமாம் ராவணன் படத்தை எதுக்காகத் தடை செஞ்சிருக்கனும்? வேணும்னா மணியோட முதலாளித்துவக் கூட்டனிப் புத்தி அங்கத் தெரியுது. அதுக்காகத் தடை செஞ்சிருக்கலாம்.
"ரத்த சரித்திரம் படப்பிடிப்பின்போது நான் விவேக் ஓபராயோடு பேசினேன். அப்போது யுனிசெப் மற்றும் அந்நாட்டின் உள்ளூர் தமிழர்களுடன் இணைந்து புதிய பள்ளி ஒன்றை அமைத்திருப்பதாகச் சொன்னார். இந்த விஷயத்தில் அவர் என்ன உதவி கேட்டாலும் செய்ய நான் தயாராக உள்ளேன். அவருடன் சேர்ந்து அந்தப் பணியைச் செய்ய விரும்புகிறேன்.
நடிகர்கள் இலங்கை சென்றது வெறும் கேளிக்கைக்காக அல்ல. அங்குள்ள மக்களுக்கு உதவத்தான். இந்தப் பிரச்சனை அன்றோடு முடிந்துவிட்டது. திரும்பத் திரும்ப அதை கிளறுவது ஏன்?"
ஓ அப்புடிங்களா! அப்புடி அந்த விவேக் ஓபராய் அங்குள்ளத் தமிழர்களுக்கு உதவச் சென்றவராக இருந்தால் ஐ.பா விழாவில்தான் செல்ல வேண்டுமா? இல்லையின்னா அங்க உள்ள உட மாட்டாங்களா? நல்லா இருக்குதய்யா உங்க கூத்து. உதவி செய்யும் மனமுள்ள ஒருவன் நிச்சயம் இது போன்று செய்திருக்க மாட்டான். விழாவைப் புறக்கணித்து விட்டு பின்னரோ அல்லது முன்னரோ சென்றிருப்பான்.
அந்த விவேக் ஓபராயும் உங்களைப் போலவே மக்களை ஏமாற்றும் ராஜ தந்திரம் கற்றவராக இருக்கிறார். இந்தப் பேட்டியில் கூட கவனித்தீர்களேயானால் ஐ.பா விழா எதிர்ப்பை அசிங்கப் படுத்தி விட்டு இறுதியில் நல்லவர் போல் "அந்தப் பள்ளி சம்பந்தமாக எல்லா உதவிகளும் செய்வேன்" என ஒரு ராஜ தந்திர வார்த்தை.
இந்த வார்த்தைகளை நம்பும் மக்கள் நிறைய இங்கு இருப்பது அவருக்குத் தெரிந்திருக்கிறது. அப்படி நம்பித்தானே அரசியல் கட்சிகள் அட்டூழியம் செய்தாலும் ஆட்சி அமைக்கிறார்கள். இந்தத் தந்திரம் தெரிந்த நீங்கள் ஏன் உங்கள் அண்ணன் சீமானுடன் சேர்ந்து அரசியலில் குதிக்கக் கூடாது?
இந்த சீமான் இருக்கிறாரே இவர் உண்மையில் தமிழர் உணர்வாளன் தானா? என்றால் நான் நிச்சயம் இல்லை என்றுதான் சொல்வேன். இந்த இலங்கைப் பிரச்சினையை வைத்து அரசியல் நடத்த முயல்பவர் போல் தெரிகிறார். உண்மையில் இவர் கொள்கை வீரனாக இருந்திருந்தால் இந்த ரத்த சரித்திரம் படத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்திருப்பார்.
ஆனால் அதை விடுத்து "சூர்யா என் தம்பி. அவரது படத்தை மட்டும் மன்னிக்கலாம். அவர் ஒரு தமிழ் உணர்வாளன்" அதனால் அவரது படத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கப் போவதில்லை என்று சொல்லியிருந்தார். உண்மையில் ஒரு கொள்கை வீரன் இப்படி செய்ய மாட்டான். இது எப்படி இருக்கிறது என்றால் ராவணன் படத்தில் ஐஸ்வர்யா ராய்க்காக ப்ருத்வியை மன்னிக்கும் விக்ரம் போல் முட்டாள் தனமாய் இருக்கிறது.
இப்படி இப்போது திமிர்த் தணமாகப் பேசும் இந்த சூர்யா ஐ.பா விழா அழைப்பின் போதே இதைப் பேசியிருக்க வேண்டியதுதானே. அப்போதுப் பேசியிருந்தால் இன்று காணாமற் போயிருப்பார். இப்போ மக்கள் அது பற்றி அதிக அக்கரை எடுத்துக் கொள்ள மாட்டார்கள் என்ற அரசியல்வாதி எண்ணம். மக்களும் அப்படித்தான், இவரை போன்றவர்களின் ஏமாற்று தொனிளில் ஏமாந்து கொண்டே இருப்பர்.
இவர்களும் அவர்கள் விழித்துக் கொள்ளாத படி நல்லவன் போலவே நிஜ வாழ்விலும் நடித்துக் கொண்டே இருப்பார்கள். இவர்களுக்கு ஜால்ரா அடிக்கவும் ஒரு கூட்டம் இருந்து கொண்டே இருக்கிறது. அந்த ஜால்ரா கோஷ்டிகளும் மக்களை மடையர்களாக்கும் வேலையைத் தான் பார்த்துக் கொண்டிருக்கிறது.
இந்த தமிழர் உணர்வாளன் எனக் கூறிக் கொண்டு அரசியல் நடத்த முயலும் முட்டாள் மாக்கள் இந்தப் படத்தை எதிர்ப்பின்றி வெளியிட்டாலும் அதைப் பார்க்க மாட்டேன் என்ற உறுதி மொழியை நாம் எடுத்துக் கொண்டு நம் எதிர்ப்பைப் பதிவு செய்வோம். என் உறுதி மொழியுடன் துவக்குகிறேன் "நான் இப்படத்தை எதிர்க்கிறேன்".
