அது மட்டுமல்ல இது சம்பந்தமாக எனக்கு எந்த மின்னஞ்சலும் அனுப்பி அனுமதி பெற வில்லை. அந்தப் பதிவுகள் அனைத்தும் அந்த நாம் தமிழர் இயக்கத்தால் எழுதப் பட்டது போலவே பதிவிடப் பட்டிருந்தது. என்னுடையப் பதிவு மட்டுமல்ல வினவில் வெளி வந்த "செம மொழி செம்மொழி ! கேலிச்சித்திரங்கள் !!" பதிவின் கெலிச் சித்திரங்களும் அதே தலைப்பில் அப்படியே வெளியிடப் பட்டிருக்கிறது.
அதற்கும் அனுமதி வாங்கினார்களா எனத் தெரியவில்லை. அந்த பதிவின் மூலத் தொடுப்பும் அங்குக் கொடுக்கப் படவில்லை. அதற்கு பதில் இறுதியில் சிறியதாக நன்றி: வினவு எனப் போட்டிருக்கிறார்கள்.
இது நேற்றைய என் பதிவின் தொடுப்பு: "செம்மொழி மாநாடும், தலைவர் குடும்ப ஆங்கிலமும்"
இது இதே பதிவு நாம் தமிழர் இணையத்தில்: "செம்மொழி மாநாடும், தலைவர் குடும்ப ஆங்கிலமும்"
இது வினவின் பதிவு: "செம மொழி செம்மொழி ! கேலிச்சித்திரங்கள் !!"
இது அதே பதிவு நாம் தமிழர் இணையத்தில்: "செம மொழி செம்மொழி ! கேலிச்சித்திரங்கள் !!"
இதை சுட்டுப் போட்டவர்கள், என்னுடைய சூர்யா குறித்தப் பதிவையும் போட்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும். வாழ்க நாம் தமிழர் அரசியல் கட்சி. என்னத்த சொல்றது இவுங்களையெல்லாம்???
பி.கு: நாம் தமிழர் இயக்கத்திலிருந்து இந்த விடயம் சம்பந்தமாக இந்தப் பதிவுக்கு பின் எனக்கு ஒரு மின்னஞ்சல் வந்திருக்கிறது "தவறைச் சுட்டிக்காட்டியமைக்கு நன்றி.தங்களின் பக்கத்திற்கு இணைப்பு கொடுக்கப்படும்." என்பதாக.
