கடவுளை மற..மனிதனை நினை..

Showing posts with label எந்திரன். Show all posts
Showing posts with label எந்திரன். Show all posts

06 October 2010

எந்திரன் என்றோர் ஏகாதிபத்தியன்! - தினமணிக்கு என் பாராட்டுக்கள்

6:38:00 AM Posted by புலவன் புலிகேசி , , 13 comments

பொதுவாக எந்திரன் குறித்த எதிர்ப்புகள் வலைப்பதிவர்களால் மட்டுமே எழுதப் பட்டுக் கொண்டிருந்தது. பிரபல செய்தி ஊடகங்கள் அனைத்தும் எந்திரனுக்கு சொம்பு தூக்கிகளாகவே செயல் பட்டு வந்து கொண்டிருக்கின்றன. அதிலும் டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் தினம் ஒரு செய்தி எந்திரன் குறித்து வெளியாகிக் கொண்டிருக்கிறது.

இந்த எந்திரன் ரிலீஸின் அட்டகாசங்களை யார் தைரியமாக வெளியில் சொல்வது என அனைத்துப் பத்திரிகைகளும் ஊமைகளாகவே செயல் பட்டுக் கொண்டிருக்கின்றன. அமெரிக்க பாக்ஸ் ஆஃபீஸில் முதலிடம், இந்தியாவில் வேறெந்த படமும் ரிலீசாக முடியாத நிலை, சன் தொலைக்காட்சியின் எரிச்சலூட்டும் தொடர் விளம்பரங்கள் என எந்திரன் குறித்த சிந்தனைக்குள் மக்கள் முடங்கிப் போய்க் கொண்டிருக்கின்றனர்.

இந்த எந்திரனின் ஏகாதிபத்திய கொள்கைகள் குறித்து நேற்றைய தினமணி இணையதளத்தில் ஒரு கட்டுரை படித்தேன். உண்மையில் பாராட்டுதலுக்குரிய ஒரு கட்டுரை அது.

அதில் குறிப்பிட்டுள்ள ஒரு முக்கியமான செய்தி

"மொத்தம் 3,000-க்கும் மேற்பட்ட திரையரங்குகள். முதல் நாளன்று சராசரியாக ஒரு திரையரங்குக்கு 500 இருக்கைகள்; 4 காட்சிகள்; டிக்கெட் விலை ரூ. 250 எனக் கொண்டால்கூட முதல் நாள் வசூல் மட்டும் ரூ. 150 கோடி. "சன் குழும' ஊடகங்கள் பறைசாற்றும் தகவல்களின்படி, தமிழகம் மட்டும் இன்றி ஐரோப்பாவின் மிகப் பெரிய திரையரங்கமான "கோலோஸியம்' உள்பட எல்லா இடங்களிலும் முன்பதிவில் புதிய சாதனைகளை "எந்திரன்' உருவாக்கி இருக்கிறது. ஆக, எப்படிப் பார்த்தாலும் ஒரு வாரத்துக்குள் மட்டும் குறைந்தது ரூ. 1,000 கோடி வருமானம்! எனில், மொத்த வருமானம்?"

என் நண்பர்களிடம் அவர்கள் கொள்ளை லாபம் சம்பாதிக்க நாம் ஏன் துணை போக வேண்டும் என கேட்டதற்கு, காசு போட்டவன் இப்புடித்தான் சம்பாதிப்பான் என மிகச் சாதாரணமான பதில் கிடைத்தது. மக்கள் இன்னும் முதலாளித்துவத்தின் அடிமைகளாகத்தான் இருந்து வருகிறார்கள்.

அவர்கள் அனைவரையும் அதற்குள் முடக்கி வைக்கும் வேலைகளை மும்முரமாக செய்து கொண்டிருக்கும் அனைத்து மீடியாக்களுக்கு மத்தியில் தைரியமாக இந்தக் கட்டுரைய எழுதிய தினமணி கட்டுரையாளருக்கும், தினமணிக்கும் என் வாழ்த்துக்கள் மற்றும் நன்றிகள்.

22 August 2010

என்ன கைய புடிச்சி இழுத்தியா?

11:14:00 AM Posted by புலவன் புலிகேசி , , 12 comments

ஒரு விவாதத்தை முன்னிருத்தி பதிவெழுதும் போது அதற்கெதிரான விவாதங்கள் வருவது முற்றிலும் ஏற்றுக் கொள்ளக் கூடியது மற்றும் வரவேற்கத் தக்கது. அந்த விவாதங்களின் மூலம் பதிவெழுதியவரும், விவாதம் செய்பவர்களும் அவரவர் கருத்துக்களை தெரிவித்து தெளிவு பெற முடியும்.

ஆனால் இன்று ஒரு விவாதம் துவங்கினால் அதை முற்றிலும் திசைத் திருப்பும் நோக்கில் பல்ர் செயல்படுகின்றனர். அந்த விவாதத்தையே சீர்குலைத்து விடுகின்றன அவர்களின் கருத்துக்கள். நீ முன்னாடி இப்புடி எழுதுன. இந்த மாதிரி கிரிக்கெட் பத்தி எழுதுன. அப்பறம் உன் கூட சண்டை போட்ட ஒரு பதிவரை திட்டுன என தற்போதைய விவாதத்தை விட்டு விட்டு முழுக்க முழுக்க திசைத் திருப்பி விட்டு ஆரோக்யமான விவாதத்தை சீர் குலைத்து விடுகின்றனர்.

15 வருடங்களுக்கு முன்னர் என்னிடம் உன் வயது என்ன என கேட்டவர்களிடம் 11 என சொல்லிக் கொண்டிருந்தேன்.

இபோதும் 11 என சொல்ல முடியுமா?
பிறந்த பொழுது உங்கள் அனைவருக்கும் அரசியல் தெரிந்து விட்டதா?
வேலை கிடைத்து விட்டதா?
நீங்கள் எழுதும் பதிவுலகம் புரிந்து விட்டதா?

இவையனைத்துடும் மாற்றங்களால் மட்டுமே நிகழ்ந்திருக்கின்றன. அந்த மாற்றங்கள் வேண்டாம் என நினைத்திருந்தால் என்ன நடந்திருக்கும்.

இந்த உலகில் மாற்றம் ஒன்றுதான் மாறாமலிருப்பது. அதை மறுப்பதற்கு யாராவது தயாரா? நீங்கள் சொல்வதைப் பார்த்தால் நீ மாற்றமடைந்து ஒரு மாதம்தான் ஆகிறது. இப்பல்லாம் எழுதாத ஒரு வருசம் கழித்து எழுது. அப்புடி எழுதுனாக் கூட நாங்க ஒரு வருசத்துக்கு முன்னாடி நீ எழுதுனத சுட்டிக் காட்டுவோம். விவாதிக்க வேண்டிய விடயத்திற்குள் வரவே மாட்டோம் என்பது ஆரோக்யமான விவாதமா?

அடுத்து தோழர்கள் அல்லது யாருடனாவது பிரச்சினை என வைத்துக் கொள்வோம். அவர்களை போல் சில ஒத்தக் கருத்துக்களுடன் இன்னொருவர் பதிவெழுதும் போது அவர்களையும் அந்த தோழர் லிஸ்ட்டில் சேர்த்து வைத்துக் கொண்டு எழுதிய கருத்தை விட்டு விட்டு "தோழர் தோழர்" என கூச்சலிட்டுக் கொண்டிருக்கின்றனர். இது எப்படி இருக்கிறது என்றால் வடிவேல் ஒரு படத்தில் பஞ்சாயத்தில் நின்று "என்ன கைய புடிச்சி இழுத்தியா?" என கூறி அனைவரையும் கிறுக்கு பிடிக்க வைப்பது போல் உள்ளது.

நேரடி விவாதத்திற்கு கைடைசி வரை இவர்கள் வரப்போவதில்லை. அப்புறம் இவர்களில் பெரும்பாலானவர்கள் தமிழ் வலைப்பதிவர் குழுமத்தின் ஃபோரத்தில் மட்டுமே கும்மியடிப்பார்கள். கவனிக்க அப்போது கூட விவாதம் செய்ய மாட்டார்கள். அதை விட பெரிய பொதுவெளியான வலைப்பூவிற்கு அழைத்தால் பலர் காணாமற் போய் விடுகிறார்கள்.

அப்படியே விவாதத்திற்கு வந்தாலும் அது வெறும் வெட்டி விவாதமாகவே இருக்கிறது. பதிவின் கருத்து சம்மந்தமான ஆரோக்யமான விவாதமாக இருப்பதில்லை. இது போன்ற வெட்டி விவாதங்கள் தேவையா?

பன்னாடை பிரச்சினையில் அவர் மன்னிப்பு கேட்டு விட்டார், மாறி விட்டார் என சொல்லிக் கொண்டிருக்கும் இவர்கள் ஏன் என்னுடைய ஆரோக்யமான மாற்றத்தை ஏற்றுக் கொள்வதில்லை. காரணம் அவர்களால் என் கருத்து சரி என்றாலும் ஏற்றுக் கொள்ளும் மனபாவம் இல்லாததாகவே தெரிகிறது.

இப்படியே கும்மி மட்டும் அடித்துக் கொண்டிருங்கள். பதிவுலகம் முழுக்க நீங்கள் கொட்டும் குப்பைகள் மட்டுமே நிறைந்திருக்கும்.

நன்றி!


20 August 2010

எந்திரனால் திரை விலகும் இரும்புத்திரை


"எலே எப்புடிடா நீ எந்திரனைப் பத்தி பேசலாம்?" என வறிந்து கட்டிக் கொண்டு நிற்கும் அரவிந்த், முகிலன் பதிவுகளை ம்னசாட்சியுடன் படித்துப் பாருங்கள். அவர்களின் போலி முகங்கள் அங்கே தெரியும். இவர்களின் பதிவுகளுக்கும் அரசியல் தொலைக்காட்சிகளின் செய்திகளுக்கும் யாதொரு வித்யாசமும் இல்லை.

நான் ஒன்றும் புரட்சியாளர் இல்லை என சென்ற பதிவில் தெளிவாக விளக்கியிருக்கிறேன். விளக்கம் கொடுத்தப் பதிவில் விவாதிக்க இவர்கள் யாரும் வரவில்லை. அதன் கருத்துக்களோடு மோதும் பயமோ என்னவோ?

அரவிந்த் அவர் வலைப்பூவில் என்னைப் பற்றி எழுதியவை மற்றும் என் பதில்கள் இங்கே.

//"அதனால் நர்சிம் பிரச்சனை நடந்து பதினாறு நாட்கள் ஆனப்பின் பன்னாடை என்று சொன்னார்."//

நான் அந்தப் பதிவிலேயே சொல்லியிருக்கிறேன். வேலை பளு காரணமாக என்னால் பதிவுலகில் நடந்த பிரச்சினையை தெரிந்து கொள்ள இயலவில்லை. தாமதமாக படித்தாலும் அதை எதிர்த்து எழுதக் கூடாதா என்ன? நீங்கள் தான் தாமதமான பின் எல்லாவற்றையும் பழைய செய்தியாக்கி விடுகிறீர்களே. அது போலவே இதயும்.

//"அப்துல்லா என்ற பதிவர் அவருக்கு இழைக்கப்பட்ட கொடுமைக்கு நியாயம் கேட்கிறார்.நீங்கள் தான் பன்னாடை என்று பதினாறு நாள் கழித்து திட்டுவீர்களே இதற்கும் திட்டுங்கள் என்று சொன்னால் அது அப்துல்லாவுடைய தனிப்பட்ட பிரச்சனையாம்."//

நர்சிம் பிரச்சினை நாம் உபயோகிக்கும் பதிவுலகில் பொதுவில் உமிழப்பட்ட ஒரு கேவலம்.

ஆனால் அப்துல்லாவிற்கோ அது பதிவுலகப் பெண்ணாக இருந்தாலும் (அவர் சொல்வது உண்மையாக இருந்தால்) வெளியில் செய்யப்படும் சதிவேலை. அந்தப் பெண் பதிவுலகில் அல்லது பொதுவெளியில் இதை செய்து அவர் சொல்லும் அவரை புரிந்து கொண்ட பெண்ணும் பதிவுலகில் சொல்லியிருப்பின் அது பற்றி குரல் எழுப்புவதில் எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை.

அரவிந்த் நீங்கள் தோழராகவோ, தோலராகவோ அல்லது தோளராகவோ இருந்து விட்டுப் போங்கள். அது குறித்து எனக்கு எந்தக் கவலையும் இல்லை. நான் மனிதனாக மட்டுமே இருக்க விரும்புகிறேன்.அதற்கான முயற்சியில் தான் இன்றும் இயங்கிக் கொண்டிருக்கிறேன்.

இவ்வளவு பிதற்றும் உங்களைப் போன்றவர்கள் நான் கேட்ட போபால் பதிவுக்கு ஏன் வரவில்லை? ஏன் குரல் கொடுக்கவில்லை? என்ற கேள்விகளுக்கு பதிலில்லையே! அது எனது சொந்த நோக்கில் ஹிட்ஸ் வாங்கும் நோக்கில் தொடங்கப் பட்டதல்ல. அது ஒரு தனி வலைப்பூ. அதில் பதிவர்களின் குரல்கள் பதிய வேண்டும் என்ற ஒரேயொரு நோக்கம் மட்டுமே இருக்கிறது. எனது சொந்த வலைப்பூவில் ஹிட்சுக்காக யாரையும் எழுத அழைக்கவில்லை.

நானும் சினிமா, கிரிக்கெட் போன்ற பொழுதுபோக்கு அம்சங்களில் மூழ்கி முட்டாளாய் இருந்தவந்தான். சச்சின் இருநூறு அடித்த போது அதை எதிர்த்த கார்த்தியைத் திட்டிப் பதிவிட்டிருந்தவன் தான். நாட்டில் நடக்கும் அவலங்களையும், அரசியலையும் புரியாத எனக்கு அவை பெரிய விடயங்களாகத் தெரிந்தன.

ஆனால் நிறைய படிக்கும் போதுதான் நாம் மேன்மையடைவோம், பக்குவமடைவோம் என்பது என் விடயத்தில் நிஜமாகியிருக்கிறது. ஏன் நாம் இப்படி இருக்கிறோம் என்ற சுய சிந்தனையும், நம் சமூகம் ஏன் இப்படியே இருக்கிறது என்ற கேள்வியும் எழுந்த பின் அதற்கான காரணிகளாக எனக்குக் கிடைத்தவைகளில் ஒன்றுதான் இந்த சினிமா.

விருந்தாளியோ, திட்டக்குடியோ எந்திரன் அளவுக்கு எதிர் பார்ப்பையும், காசு விரயங்களையும் ஏற்படுத்துவதில்லை. விருந்தாளிக்கு கட்டவுட் வைத்து பாலாபிசேகம் செய்யும் முட்டாள்கள் இல்லை. அது வெறும் படமாக வந்து போகிறது. அதனால்தான் எந்திரனின் விமர்சனம் அவசியமாகிறது. இதுவும் விருந்தாளி போன்று என்றால் எதுவும் தேவையில்லை.

நான் எழுதி வரும் அனைத்தும் எனக்கு சரியெனப் பட்ட விடயங்கள். இதற்காக என்னை நீங்கள் கம்யூனிஸ்ட் அல்லது புரட்சிக்காரன் என நினைத்தால் நிச்சயம் நீங்கள் எல்லாம் முட்டாள்களாகத்தான் இருக்க முடியும்.

நான் ஒன்றும் புரட்சிக்காரன் அல்ல!


நண்பர்களுக்கு வணக்கம்!

புரட்சி! இது வெறும் சொல் அல்ல. இது பல முறை பல துறைகளிலும், மனிதர்களிலும் நடந்ததால் தான் நாம் இன்று இப்படி இருக்கிறோம். புரட்சி என்பது நடக்கவில்லை என்றால் நாம் எல்லோரும் குரங்காகவே இருந்திருப்போம். புரட்சி என்பது ஒன்று இன்னொன்றாக மாறுவதுதான். குரங்கிலிருந்து மனிதன் தோன்றிய பரிணாமம் கூட ஒரு புரட்சியால் நடந்ததுதான்.

ஆனால் இந்த புரட்சிகள் எதுவும் உடனுக்குடன் நடந்து விடும் ஒரு சாதாரண விடயமல்ல. இதற்கு பல ஆண்டுகள் ஏன் பல நூறு, பல ஆயிரம் ஆண்டுகள் கூட ஆகலாம். அதற்காக புரட்சி பிரயோசனமற்றது என நினைப்பது முட்டாள்த்தனம். நாம் அனைவரும் பிறந்தவுடன் சம்பாதித்து திருமனம் செய்து பிள்ளை பெற்று விட முடியுமா?

அதற்கென நாம் குறைந்த படசம் பதினெட்டு ஆண்டுகளாவது காத்திருக்க வேண்டும். ஒரு தனி மனிதனின் வாழ்வியல் புரட்சிக்கே இத்தனை ஆண்டுகள் தேவைப்படும் போது சமூகத்தின் புரட்சிக்கு? ஆனால் இத்தகைய புரட்சிகள் ஒரு துறையிலோ அல்லது சமூகத்திலோ நடை பெறுவது அதை சார்ந்திருப்பவர்களின் ஒருமித்த புரிதலின் போதுதான் சாத்தியம். அதன் காலநிலையை நிர்ணயிப்பதும் அதுவே.

நமக்கு ஒரு அமைப்பு பிடிக்காவிட்டாலும் நாம் அதிலிருந்து கொண்டுதான் அதனை வெறுத்தொதுக்க முடியும். காரணம் நமது வாழ்வாதாரம் அந்த அமைப்பிற்குள் முடக்கப் பட்டிருக்கிறது. உதாரணமாக சொன்னால் நம்மை ஆட்சி செய்யும் ஆட்சியாளர்களை நம்மில் எத்தனை பேருக்கு பிடிக்கும்? இல்லை என்றாலும் அதற்குள் இருந்து கொண்டு தானே அதனை எதிர்க்கிறோம்.

அதை விடுத்து இதனை விமர்சனம் செய்ய நீ இந்த பணியில் இருக்க கூடாது, நடிகனை விமர்சணம் செய்யக் கூடாது என்றால் மக்கள் அந்த அரசியலை நிச்சயம் எதிர்த்து கேள்வி கேட்க போவதில்லை. பொழுதுபோக்கு ஊடகங்களின் பிடியில் சிக்கிக் கொண்டு நாட்டின் விலைவாசி ஏற்றத்தை பற்றிக்கூட கேள்வி எழுப்பாமல் மனதிற்குள் புழுங்கி விட்டு அடுத்த படத்திற்கு டிக்கெட் எடுக்க செல்லும் முட்டாள்களாகத்தான் நாம் இருக்கிறோம் என்பதை மறுக்க முடியாது.

மானாட மயிலாட மாராட்டமும், மட்டைபந்து விளையாட்டும், எந்திரன் போன்ற படங்களும் முக்கியமாக படும் அளவிற்கு இந்த விலைவாசி ஏற்றமும், காமன்வெல்த் சுரண்டல்களும், அரசியல் ஊழல்களும், போபாலும் பெரிதாகப் படுவதில்லை நமக்கு. இவற்றைப் பற்றி எழுதியவர்கள் எத்தனை பேர்? இது போன்ற செயலகளை எதிர்த்து பதிவிட்டால் அவனுக்கு பெயர் புரட்சியாளன் அல்லது கம்யூனிஸ்ட்.

புரட்சி என்பது அவ்வளவு எளிதான வார்த்தையாகிப் போய் விட்டது. அதன் உள் அர்த்தம் சென்று பார்த்தால் அது எவ்வளவு பெரிய விடயம் என்பது புரியும். அதனால் நான் புரட்சி பேசுகிறேன் என யாரும் சொல்லி விடாதீர்கள். அதற்கு நான் தகுதியற்றவன். நான் எழுதுவதெல்லாம் என்னை சுற்றி நடக்கும் நிகழ்வுகளின் வெளிப்பாடு. நான் புரிந்து கொண்ட சிலவற்றை சிலருக்காவது எடுத்து செல்ல வேண்டும் என்ற எண்ணம். அவ்வளவே!

இதற்கு பெயர்தன் புரட்சி என நீங்கள் கருதினால் அது முழுக்க முழுக்க உங்கள் முட்டாள்தனமே. அப்புறம் சிலர் கூறியது எழை கஷ்டபட்டு உழைத்து வந்து களைப்பை நீக்க எந்திரன் படம் பார்க்கின்றான். அந்த உரிமை கூட அவனுக்கில்லையா? என்று.

நிச்சயம் இருக்கிறது. ஆனால் அந்த பொழுது போக்கில் அவன் மூழ்கி விடாமலிருக்க வேண்டும். அவனது களைப்பிற்கு அது ஒரு தற்காலிக ஆறுதல் தரலாம். அந்த தற்காலிக ஆறுதலானது அவனது நிரந்தர ஆறுதலைத் தடை செய்கிறது.

அந்த பொழுதுபோக்கை விடுத்து தனது இந்த நிலைக்கு என்ன காரணம் என அவன் சிந்திக்கத் தொடங்கினால் அது ஒரு வித புரட்சியாக மாறும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஒரு நிரந்தரத் தீர்வும் கிட்டுவது நிச்சயம். ஆனால் அவற்றிற்கு தடைக்கல்லாக இருக்கும் பல விடயங்களில் இந்த சினிமாவும் ஒன்று என்பதை விட முக்கியமான் ஒன்று என சொல்லலாம்.

அப்புறம் "திரையுலகை எதிர்த்து கோசமிடும் நீங்கள் கேட்க வேண்டிய கேள்விகளெல்லாம் நீங்கள் ஓட்டுப்போட்ட அரசியல்வாதிகளிடம்" என சில கருத்துரைகள் வந்திருந்தன.

"நீங்கள் ஓட்டு போட்ட" என்பதே சமூகத்தைதான் குறிக்கிறது. அந்த சமூகத்தில் சம்மந்தப்பட்ட கட்சிக்கு ஓட்டு போடவில்லையென்றாலும் நாமும் இருக்கிறோம். அது ஏன் "நீங்கள் ஏன் இதை பற்றி எழுதவில்லை?" என கேட்கிறீர்கள். நீங்களே எழுதலாமே!. ஊழல்களுக்கெதிராக கேள்வி கேட்க வேண்டியது பொது மக்களாகிய நாம் எனும் போது அது ஏன் இன்னொருவரைக் கேர்ட்கிறீர்கள்? நீங்களே செய்யலாமே.

காரணம் புரிகிறதா? உங்களையெல்லாம் கட்டிப்போட்டு வைத்திருப்பது இது போன்ற பொழுதுபோக்கு அம்சங்கள் தான். அலுவலில் அதிக நேரப் பணியா? யோகா செய் ஏன் அதிக நேரப்பணி என யோசிக்காதே! விலைவாசி ஏற்றமா? ஏன் என யோசிக்காதே மானாட மயிலாட பார். இத்தகைய கொள்கைகள் தான் நம் அனைவரையும் சிந்திக்க விடாமல் தடுத்து வைத்திருக்கிறது.

என்னை கம்யூனிஸ்ட் என்றோ புரட்சிக்காரன் என்றோ யாரும் சொல்ல வேண்டாம். அந்த வார்த்தைகளுக்கு இன்னும் கூட எனக்கு முழு அர்த்தம் தெரியாது. அப்படியெல்லாம் அழைப்பதற்கு நான் தகுதியற்றவன். என்னுடைய புரிதல்களும், நான் பிறந்த இந்த சமுதாயத்தின் அவலங்கள் குறித்தவை மட்டுமே என்னுடைய பதிவுகள்.

அனைவருக்கும் நன்றி!

19 August 2010

எந்திரன் - திட்டறவங்க திட்டலாம்

9:03:00 AM Posted by புலவன் புலிகேசி , , 31 comments

நண்பர்களுக்கு வணக்கம்!

நேற்று எந்திரன் குறித்து ஒரு பதிவிட்டிருந்தேன். பலர் வறிந்து கட்டிக் கொண்டு சண்டையிட வந்தனர். முகிலன் எதிர்வினை எழுதி எதிர்ப்பைத் தெரிவித்திருந்தார்.

அப்படி அந்த பதிவில் நான் என்ன தேச விரோதமாகவா எழுதி விட்டேன்? இவர்களுக்கு ஏன் அந்த ஒரு நடிகன் மீது இவ்வளவு பாசம்?

நடிகனுக்காக வறிந்து கட்டிக் கொண்டு வந்த இவர்களில் யாரும் போபால் குறித்து பதிவெழுத அழைத்திருந்த போது வரவில்லை. இதிலேயே புரிகிறது இவர்கள் என்ன ரகம் என்று.

நல்ல விடயங்கள், மக்களுக்கான விடயங்களுக்கு நாங்கள் ஒன்று கூட மாட்டோம். ஆனால் நடிகனைப் பற்றி விமர்சித்தால் கண்டனம் தெரிவிக்க ஒன்று கூடுவோம் என்கின்றனர்.

முதலில் நான் ஒன்றை சொல்லிக் கொள்கிறேன். நான் ஒன்றும் புரட்சிகர எழுத்தாளன் அல்ல. சொல்லப் போனால் நான் ஒரு எழுத்தாளனே அல்ல. எனக்கு தவறென பட்டால் அதை பதிவிட்டு பலருக்கு சொல்லி வருகிறேன்.

என்னை ஏன் இவர்கள் புரட்சிக்காரன் என சொல்கிறார்கள் எனப் புரியவில்லை. அந்த புரட்சிக்காரன் என்னும் சொல்லைக் கேவலப் படுத்தாதீர்கள். அது அவ்வளவு எளிதில் அடையக் கூடிய இலக்கு அல்ல.

அதில் சிலர் ஒருவரை விமர்சனம் செய்ய நமக்கு என்ன தகுதி இருக்கிறது? என பார்க்க வேண்டும் என எழுதியிருந்தார். அதாவது ஏழ்மையை ஒழிக்க நீ என்ன செய்தாய்? ரஜினியை கேள்வி கேட்கிறாய் என்றார்.

என்னால் எதுவும் செய்ய முடியாது. ஏனெனில் நான் ஒரு சாதாரண பொதுமக்களில் ஒருவன். ஆனால் நீங்கள் தான் உங்கள் ரஜினியை கடவுளாகப் பார்க்கிறீர்களே! அவரால் ஒன்றும் முடியாதா? அவரை விமர்சனம் செய்ய எனக்கு பொதுமக்களில் ஒருவன் என்ற தகுதி இருக்கிறது.

சிலர் கேட்டிருந்தனர் "நீங்கள் சொல்லும் விடயங்கள் ஏழை ரசிகனுக்கு என்றால் அதை ப்ளாகில் எழுதி என்ன பயன்?".

நண்பர்களே நீங்கள் இது போன்ற வெறும் சினிமா ரசிகனாக இருந்து விடக் கூடாது. சமுதாயத்தில் நமக்கு நிறைய கடமைகள் இருக்கிறது அவற்றை விட இது ஒன்றும் பெரிய விடயமல்ல. சொல்லப் போனால் பைசா பிரயோசனமில்லாத விடயம். இதை ப்ளாகில் எழுதுவதில் எந்த தவறும் இல்லை. ஏழைகளை விட இந்த விடயங்கள் நடுத்தர வர்க்க மக்களுக்கு புரிய வேண்டும்.

நேற்று பதிவுலகில் நான் மிகுந்த மரியாதை வைத்திருந்த ஒரு நபரின் குட்டும் உடை பட்டு போய் விட்டது. அவர் என்ன செய்தார் என்றால் என்னுடைய நேற்றைய பதிவிற்கு தமிழ்மணம், இண்டலி என இரண்டிலும் வாக்களித்து விட்டு முகிலன் எழுதிய எதிர்வினைக்கும் சென்று வாக்களித்து கருத்திட்டிருக்கிறார். இவர்கள் என்ன ரகம் என்பதை என்னால் புரிந்து கொள்ள இயலவில்லை.

எந்திரனால் பயன் ஆளும் வர்க்கத்திற்கும், மேட்டுக்குடி வர்க்கத்திற்கும் மட்டுமே. இது புரியவில்லை என்றால் திட்டி விட்டு போங்கள்.

18 August 2010

எந்திரன் - ஏழைப் பங்காளன்!

12:11:00 AM Posted by புலவன் புலிகேசி , , 48 comments

60 ஆனாலும் ஸ்டைல்தான்
அதனால் நாட்டுக்கு என்ன பயன்?

37 என்றாலும் கவர்ச்சிதான்
அதனால் ஏழைகளுக்கு என்ன பயன்?

கட்அவுட் வைத்து பாலாபிசேகம்
செய்து உழைத்த காசை
ஒரு நாளில் தீர்த்துவிட்டு

அடுத்த வேலை சோற்றுக்கு
அடுத்தவனிடம் கையேந்தும் நிலை

ஒவ்வொரு பட வெளியீட்டின் போதும்
இயல்பு தான்

அதற்காக தலைவர் வந்து உனக்கு
சோறு போட்டாரா?

நாட்டின் வறுமையை படங்களில்
ஒழிக்கும் தலைவன்

உண்மையில் அது பற்றி
யோசித்தாவது இருப்பாரா?

180 கோடியில் அவர்கள்
படத்தில் ஒழிப்பது ஏழ்மையை
நிஜத்தில் உருவாக்குவது ஏழையை!