கடவுளை மற..மனிதனை நினை..

30 October 2009

எந்த குப்பனும் சுப்பனும் இதை செய்வான்

8:25:00 AM Posted by புலவன் புலிகேசி 16 comments
குப்பனும் சுப்பனும் பூஞ்சோலை கிராமத்தின் விவசாயிகள். அவர்களைப் போல் உழைப்பதற்கு எவனாலும் முடியாது என்பது அந்த ஊராரின் கருத்து. அதுவே அவனின் முதலாளி வெங்கடாச்சலத்தின் கருத்தும் கூட.... வெங்கடாச்சலம் ஆச்சாரம் என்னும் போர்வையை போர்த்திக்கொண்டிருக்கும் குடும்பத்தை சேர்ந்தவன். குப்பனோ சுப்பனோ வயல் வேலைகளை...

28 October 2009

தெய்வம் முதியோர் இல்லத்தில்........பகுத்தறிவு (பகுதி-2)

9:12:00 AM Posted by புலவன் புலிகேசி 20 comments
*வியாபார உலகில் பெரியவன். அரசாங்கத்திற்கு செலுத்த வேண்டிய வரிப்பணத்தைக் கோவில் உண்டியலில் செலுத்தினான்.பாதிக்கப் பட்டது ஏழை மக்கள்.*தீமிதித் திருவிழாவில் மற்றவனைப் போல் ஓடத் தெரியாதவன் காலில் புண். தெய்வக்குத்தமாம்.....??*பத்தாம் வகுப்புத் தேர்வுக்குப் படிக்காதவன் பிள்ளையார் கோவிலில் சென்று தேர்வு...

26 October 2009

தெய்வக் குத்தமாகிப் போச்சே........??? பகுதி-1

4:00:00 PM Posted by புலவன் புலிகேசி 44 comments
* வண்ணான் தொட்டால் தீட்டு என்றவன் திருநாளில் புது சட்டை அணிந்தான்.சட்டையைத் தானே உருவாக்கினானோ???* சாணியக் கொடுத்து சந்தனம் என்றால் ஒப்புக்கொள்ள மறுத்தவன் கல்லைக் காட்டிக் கடவுள் என்றதும் ஒப்புக்கொண்டான்.* பொங்கல் திருநாளில் பானையில் ஊற்றப்பட்ட கோமியத்தை (மாட்டுக் கழிவு) பார்த்தக் குழந்தை ஏனென்று கேட்டது....

24 October 2009

வணக்கத்திற்குரிய இராணுவவீரன்.!!!!

8:16:00 AM Posted by புலவன் புலிகேசி 26 comments
அவன் பெயர் முருகன். மயிலாடுதுறையில் பிறந்து B.Sc கணிதம் முடித்து தேசத்தின் மீதுள்ளப் பற்றினால் இராணுவ வீரனானான். அவனுக்கு தமிழழகி என்ற பெண்ணுடன் ஒரு வருடத்திற்கு முன் திருமணம் ஆனது.Sep:25 அன்று காலை அவன் கல்கத்தா இராணுவத் தளத்தில் பயிற்சியில் இருந்த போது தான் அந்த தொலைபேசி அழைப்பு வந்தது. அவன் தந்தை...

22 October 2009

ஏழை சிறுவனுக்கு கிடைத்த பிறந்த நாள் பரிசு.....

9:06:00 AM Posted by புலவன் புலிகேசி 25 comments
இன்று (23-அக்-2009) பிறந்த நாள் காணும் எமது நண்பர் "வண்ணத்துப்பூசியாருக்கு" பதிவுலகம் சார்பாக பிறந்த நாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். சென்னை சைதாப்பேட்டைதான் இந்த கதையின் களம்.... இரண்டு சிறுவர்கள் சச்சின், சாமிநாதன், இவர்கள் இருவரும் மட்டைப்பந்து விளையாட்டின் மூலம் நெருங்கிய் நண்பர்கள்....

20 October 2009

பிச்சை எடுத்தாலும் பெருமை கொள்வோம்.......

8:16:00 PM Posted by புலவன் புலிகேசி 25 comments
தெருத்தெருவாய் திரிந்து கத்திக் கூச்சலிட்டுபெற்ற பிச்சையை தான் மட்டும் உண்ணாமல்தன சகாக்களையும் அழைத்து பகிர்ந்துக் கொள்ளும் காக்கை.....  மனிதனிடம் குறைந்து விட்ட குணம். நம்மிடம் இருக்கும் ஒன்றை இல்லாதவனிடம் பகிர்ந்து உண்ண காக்கையிடம் கற்றுக் கொள்வதால் தான் அதை நம் முன்னோர்கள்...

12 October 2009

போக்குவரத்து காவலருக்கு லஞ்சம் கொடுத்து கற்றுக் கொண்டது....!!

12:22:00 PM Posted by புலவன் புலிகேசி 21 comments
ஒரு நாள் தி.நகர் பேருந்து நிலையம் எதிரில் உள்ள பர்கிட் சாலையில் உள்ள ஒரு பேருந்து பயணசீட்டு அலுவலகம் சென்று திரும்பிய போது நடந்த ஒரு நிகழ்வை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்..... அன்று இரவு 10 மணி. நானும் என் நண்பனும் எனது இரு சக்கர வாகனத்தில் பயணசீட்டு முன்பதிவு செய்ய சென்றோம்....

06 October 2009

மதம் பிடித்த மனிதன்...!!! (கடவுள் பகுதி-3 )

9:14:00 AM Posted by புலவன் புலிகேசி 32 comments
கடவுளைப் பற்றிய விவாதத்தின் மூன்றாவது பகுதியில் நான் மதங்களைப் பற்றி விவாதிக்க விரும்புகிறேன்.. முதலில் வைரமுத்துவின் பார்வையில் இந்துக் கடவுளான சிவன் எவ்வாறு உருவாக்கப் பட்டான் எனப் பார்ப்போம். வைரமுத்துவின் "கள்ளிக் காட்டு இதிகாசத்தில்" சிவன் என்பவன் யார் என விளக்கியுள்ளார்."மனிதனின் பரிணாம வளர்ச்சியில்...

01 October 2009

கடவுள் விளம்பரம் விரும்பியா??? - பகுதி-2

9:05:00 AM Posted by புலவன் புலிகேசி 45 comments
இந்த பதிவு விகடனின் நல்ல பதிவில் பரிந்துரைக்கப் பட்டுள்ளது..இது யார் கடவுள்.........??? என்ற என்னுடய முந்தைய பதிவின் தொடர்ச்சி..... ஒவ்வொரு மதத்திலும் பல்வேறு பட்ட வடிவங்களிலும், வடிவங்கள் இல்லாமலும் கடவுள் சித்தரிக்கப் பட்டுள்ளான். இவ்வாறு கடவுள் சித்தரிக்கப் பட்டிருப்பதற்கான காரணங்கள்...