கடவுளை மற..மனிதனை நினை..
30 November 2009
28 November 2009
டரியல் (28-நவம்பர்-09)
வேட்டைக்காரன் படத்தின் பாடல்கள் கேட்பதற்கு கொடுமையாக இருந்ததால் இது நாள் வரை விருப்பமில்லாமல் இருந்தேன். ஆனால் என்னுடன் இருக்கும் நண்பன் ஒருவன் அறையில் அப்படத்தின் பாடல்களை கேட்டுக் கொண்டிருந்த போது அவனை திட்டிவிட்டு அமர்ந்தேன். அப்போது அப்படத்தின் ஒரு பாடலில் வரும் பெண்குரல் என்னைக் கவர்ந்தது. அந்த பாடல் " கரிகால சோழன் போல" என்ற பாடல். பாடல் என்னவோ சுமார் ரகம் தான் என்றாலும் அந்த பெண்குரல் காதில் கேட்டு கொண்டே இருக்கிறது. அந்த குரலுக்கு சொந்தக்காரர் "சங்கீதா ராஜேஷ்வரன்".
------------------------------------------
சமீப்த்திய ஜூனியர் விகடனை படித்த போது கிடைத்த தகவல் மனதிற்கு இன்னும் பலம் சேர்த்தது. ஆம் "பிரபாகரன் உயிரோடிருக்கிறார்" என்ற குறுந்தகடு இப்போது கனடா, ஆஸ்திரேலியா அயர்லாந்து போன்ற நாடுகளில் ரகசியமாக பரவி வருகிறதாம். அந்த தகடில் கூறப்பட்டிருப்பது என்னவென்றால், இறுதிகட்ட போர் நடைபெற்றுகொண்டிருந்த மே 11ம் தேதி புலிகள் நடத்திய மிகப்பெரிய ஊடறுப்பு தாக்குதலில் 900க்கும் அதிகமான சிங்கள படையினர் கொல்லப் பட்டது நாமறிந்ததே. அப்போதுதான் தலைவரின் மகன் "சார்லஸ் ஆண்டனி" தலைவருக்கு விருபமில்ல்லாத போதும் நான் பார்த்து கொள்கிறேன் புறப்படுங்கள் என்று வற்புறுத்தினாராம்.
சிங்கள மருத்துவர் ஒருவர் தான் புலிகளின் ஆஸ்தான மருத்துவராம். தப்பிக்கும் போது தலைவருக்கு ஏற்பட்ட குண்டடி காயத்தை அந்த மருத்துவர் தான் குணபடுத்தியிருக்கிறாராம். தலைவர் அவரை "சிங்கள புலி" என்றுதான் அழைப்பாராம். இப்போது தலைவர், பொட்டு அம்மன்,சூசை மற்றும் அந்த "சிங்கள புலி" மருத்துவர் ஆகியோர் ஆப்பிரிக்க கண்டத்தின் அருகிலுள்ள ஒரு தீவில் இருக்கிறார்களாம். இவைதான் அந்த குறுந்தகடின் செய்திகளாம். நிச்சயம் தலைவர் வருவார்....
--------------
-------------------------------
இன்று "கந்தசாமி" திரைப்படம் 100வது நாளாம். சுவரொட்டியையும், ஒரு ஆங்கில நாளிதழில் வந்த விளம்பரத்தையும், பார்த்ததும் சிரிப்பு வந்து விட்டது.விக்ரமையும் "வீராசாமி" டி.ராஜேந்திரன் ஆக்கி விட்டார்களோ...? என்ன கொடுமை சரவணன் இது......
--------------------------------------------
26/11 நம்மால் மறக்க முடியாத ஒரு நாளாக தீவிரவாதிகளால் மாற்ற பட்டிருக்கிறது. டிஸ்கவரி தொலைகாட்சியில் இது பற்றிய ஒரு தொகுப்பை பார்த்தேன். இந்த தாக்குதலில் தப்பித்த ஒரு வெளிநாட்டு பெண் சொன்னது என்னவென்றால், "அங்கு தாக்குதல் நடத்திய அனைவரும் இளம் வ்யதினர். மேலும் அவர்கள் அனைவரும் மூளைசலவை செய்யப் பட்டவர்கள். பாவம் அவர்கள்" என்றார். அதற்காக அவர்களை சும்மா விட்டு விட முடியுமா? ஆனால் இன்னும் கசாவிற்கு தண்டணை வழங்க படவில்லையே. அவனை ஒரு பெரிய கதாநாயகன் அந்தஸ்த்தில் வைத்து நமது ஊடகங்களும் காசு பார்க்கின்றன. ஒரு வார இதழில் நான் படித்த செய்தி (?) இது. "கசாவிற்கு பிரியாணி என்றால் பிடிக்குமாம். இந்திய உணவு வகைகளில் இட்லிதான் அவருக்கு பிடித்த உணவாம்". இதைத்தான் விசாரிப்பார்களா இந்த பத்திரிகையாளர்கள்???
-------------------------------------------
இந்த வார டரியல் நம்ம "சிறகுகள்" பாலவாசகன்தான். அவரின் ஒரு பதிவில் வந்த கவிதையை படித்தேன்..அடா அடா அடா நண்பர் எங்கேயோ சிக்கிருக்காரு. படிச்சிப் பாருங்க கண்டறியாத காதல். உங்களுக்கே புரியும். வாழ்த்துக்கள் பாலவாசகன்.
-----------------------------
27 November 2009
தமிழினத் தலை(வா)...

தமிழினத் தலைவா உனக்கு
நேற்று பிறந்த நாள்
உன் மீது பாசங்கொண்ட
தமிழர் பலர் நீ
இறந்து விட்டாய் என
நினைத்து
கண்ணீர் விட்டு கதறி
கொண்டிருக்கிறார்கள்
அங்கே நீ இல்லை
என்று எண்ணி
புத்தம் (?) தழுவிய சிங்களத்தான்
நம் சகோதரிகளை தழுவி
சகோதரனை கொன்று
குவிக்கிறான்
நீ இல்லை என்று
எண்ணி தமிழக பெரும்(கரும்)புள்ளி
தமிழன் மீது பாசமிருப்பதாய்
நடிக்கின்றான்
வீறு கொண்டு எழுந்து
வருவாய் என என்னை
போன்ற பல தமிழனுக்கு
தெரியும்.
விரைவில் வா....
