கடவுளை மற..மனிதனை நினை..

09 January 2010

டரியல் (09-சனவரி-2009)

6:05:00 AM Posted by புலவன் புலிகேசி 25 comments

அடுத்த வாரம் பொங்கல் வருது. சொந்த ஊருக்கு போய் அப்பா, அம்மா, அண்ணன், ஊர் நட்புகளை பார்க்க 2 மாதங்களுக்கு பிறகு வாய்ப்பு வந்திருக்கிறது. அது மட்டுமல்லாமல் எங்கள் நண்பர்கள் குழு விழாவை எண்ணியும் மகிழ்ச்சி பெருகும் வாரமாக இருக்கிறது இந்த வாரம்.

------------------------

அஜீத்தின் அசல் பட பாடல்கள் வெளிவந்திருக்கிறது. கேட்டேன் பாடல்கள் சுமார் ரகமாகத்தான் தோன்றுகிறது. படமாவது நல்லா இருந்தா சரி.

நான் எதிர்பார்த்து கொண்டிருக்கும் தாமரையின் வரிகளால் நிரப்பப் பட்ட "வி்ண்ணைத்தாண்டி வருவாயா" பாடல்கள் இன்னும் மூன்று தினங்களில் வெளிவர இருக்கிறது.எனக்கு கிடைத்த ஒரு பாடலில் தாமரையின் இரு வரிகள் இதோ,

ஏன் இதயம் உடைத்தாய் நொறுங்கவே
என் மறு இதயம் கொடுப்பேன்
நீ உடைக்கவே

எப்புடி இருக்குன்னு சொல்லுங்க. கேட்டதும் சட்டென மனதில் ஒட்டிய வரிகள்.
------------------------

ஒரு காலத்தில் மட்டைபந்து வெறியனாக திரிந்த எனக்கு அதிலிருந்த ஆரவம் குறைந்து போய் விட்டது. முத்தரப்பு மட்டைபந்து போட்டியில் இந்திய அணியின் சிறப்பான பந்து வீச்சு (?) பங்களாதேசால் கூட 300ஐ நெருங்க வைத்தது வெறுப்பை ஏற்படுத்தியது. இந்திய மட்டைபந்து குழுமம் அரசியல் பார்க்காமல் சிறந்த வீரர்களை தேர்வு செய்யும் காலம் வருமா?
------------------------

எனது முதல் இடுகை(ஆதங்கம்)யான "பிச்சை காரனின் பிள்ளைகள்......." எத்தனை பேர் படித்திருப்பீர்கள் எனத் தெரியவில்லை. ஒரு நாள் அலுவலக இடைவேளையின் போது பிச்சை எடுத்து கொண்டிருந்த குழந்தைகளை பார்த்ததும் மனதிற்குள் ஏற்பட்ட வலிதான் இந்த பதிவு. இந்த குழந்தைகளின் நிலை அனாதைக் குழந்தைகளை விட கொடியது.
------------------------

இந்த வார டரியல் எங்கள் ப்ளாக்கின் "மனிதம் (சொன்னது பாதி....)". மனிதம் அனிச்சை செயலாக வெளிப்பட்டிருப்பதை சொல்லியிருக்கும் பதிவு. இந்த மனிதம் எத்தனை பேரிடம் மீதமிருக்கிறது எனத் தெரியவில்லை.
------------------------

அடுத்த வார டரியல் முதல் வாரம் ஒரு பதிவரையும் அறிமுகப் படுத்தலாம் என்றிருக்கிறேன். அதில் அந்த பதிவரின் பதிவுகளில் என்னைக் அவர்ந்த சில பதிவுகளையும் சேர்த்து அறிமுகப் படுத்தவிருக்கிறேன்.
------------------------

08 January 2010

3இடியட்சும் சுப்ரமணியபுரமும்

8:48:00 AM Posted by புலவன் புலிகேசி 53 comments
சமீபத்தில்தான் 3இடியட்ஸ் படம் பர்த்தேன். என்ன ஒரு அற்புதமான படம் என வியந்து போனேன். அன்பே சிவத்திற்கு பிறகு எனக்கு முழுமையாக பிடித்த படம் இது. படங்களின் விமர்சனங்கள் எழுதுவதில் அனுபவம் இல்லை, விருப்பமும் இருந்ததில்லை.

இருந்தாலும் நம் தமிழ்நாட்டு சமுதாயத்தில் உள்ள தவறான புரிதலுக்காக இந்த பதிவு. தமிழில் திரைத்துறையில் ஆர்வமிருக்கும் பலர் சொல்வது சுப்ரமணியபுரம் ஒரு யதார்த்த சினிமா என்பதுதான். எனக்கும் சுப்ரமணியபுரம் படம் பிடிக்கும். ஆனால் அடிக்கடி யோசித்து பார்ப்பேன் இந்த படம் சரியான் படம் தானா? என்று.

3இடியட்ஸ் மற்றும் சுப்ரமணியபுரம் இரண்டுமே நண்பர்களை சுற்றி நடக்கும் கதைதான். எடுத்துக் கொண்ட கதைக்களம்தான் வேறு வேறு. ஆனால் சுப்ரமணியபுரம் படத்திலிருந்து என்ன நல்ல விடயம் மக்களுக்கு சொல்லப்பட்டிருக்கிறது என்ற கேள்விக்கு எனக்கு கிடைத்த பதில்கள்

"கத்தியை எடுத்தவன் கத்தியால் சாவான்'

"நண்பனுக்காக கொலைய்ம் செய்யலாம்"

இந்த படம் முழுதும் வன்முறையை நோக்கியே பயனப்பட்டிருக்கிறதே தவிற, மேலே சொன்ன கருத்துகளுக்கு முகியத்துவம் கொடுக்கப் படவில்லை என்பதே என் கருத்து. படத்தின் இறுதியில் கத்தியை எடுக்கும் ஒவ்வொருவனும் கொலை செய்யப் படுவதும் இந்தக் கொலைகள் ஒரு தொடர்கதை போலவே முடிக்கப்ப்ட்டிருக்கின்றன. என்னைப் பொருத்த வரை இது ஒரு வியாபாரப்படம் தான்.

இதனால் மக்கள் தவறானப் பாதைக்குத் திருப்பப்ப்டுகிறார்களே தவிர ஒரு மன்னாங்கட்டி கருத்தும் இல்லை. ஆனால் 3இடியட்ஸை எடுத்துக் கொள்வோம். இதுதான் உண்மையில் ஒரு யதார்த்த சினிமா.

நம் கல்வி முறையின் குறைபாடுகள் என்ன என்பதை எவ்வளவு அழகாக யதார்த்தமாக விளக்கியிருக்கிறார்கள். அது மட்டுமல்ல பெற்றோருக்கு ஒரு அறிவுரையையும் வாழப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல் ஏற்றியிருக்கிறார்கள். இந்த படத்திலிருந்து சொல்லப் பட்டிருக்கும் நல்ல விடயங்கள் என்ன? என்ற கேள்விக்கு கிடைத்த பதில்கள்

"முழுப் படமும் ஒரு நல்ல விடயத்தை நோக்கிதான் பயனப் பட்டிருக்கிறது".

ஏன் தமிழ் நாட்டு இயகுனர்கள், நடிகர்கள் இது போன்று யோசிக்காமல், யதார்த்த சினிமா என்றால் வன்முறை இருக்க வேண்டும் என்ற நோக்கத்திலேயே பயணிக்கிறார்கள்? என்ற கேள்வி என் மனதில் பதில் தெரியாமல் உலவிக் கொண்டிருக்கிறது.

அன்பே சிவத்திற்கு பிறகு எனக்கு தெரிந்து ஒரு நல்லப் படம் தமிழில் நேரிடையாக எடுக்கப் படவில்லை. இப்பொழுது சொல்லுங்கள் இந்த இரண்டில் உங்கள் பார்வையில் யதார்த்தம் எது என்று?

06 January 2010

சோசியக்காரன்

4:50:00 AM Posted by புலவன் புலிகேசி 37 comments

ஆறறிவு வாழ்வின் அதிர்ஷ்டத்தை
ஓரறிவு கிளியிடம் கேட்டவனுக்கு
புரியவில்லை அதிர்ஷ்டம் உழைப்பில்
உள்ளது என்று

திருமணம் நடக்க பரிகாரம்
என்ன சோசியக்காரனை கேட்டவனுக்கு
தெரியவில்லை ஜாதகத்தை தூக்கியெறிந்தால்
நடக்கும் என்று

எதிர்காலம் அறிய் கைரேகை
பார்த்தவன் அறியவில்லை
முயற்சியிருந்தால் ஒளி மயமான
எதிர்காலம் என்று

நாடித் துடிப்பை மருத்துவனிடம்
காட்டாமல் சோசியக்காரனிடம்
காட்டி கேட்டான் ஆயுள்
எப்படி என்று