அடுத்த வாரம் பொங்கல் வருது. சொந்த ஊருக்கு போய் அப்பா, அம்மா, அண்ணன், ஊர் நட்புகளை பார்க்க 2 மாதங்களுக்கு பிறகு வாய்ப்பு வந்திருக்கிறது. அது மட்டுமல்லாமல் எங்கள் நண்பர்கள் குழு விழாவை எண்ணியும் மகிழ்ச்சி பெருகும் வாரமாக இருக்கிறது இந்த வாரம்.
------------------------
அஜீத்தின் அசல் பட பாடல்கள் வெளிவந்திருக்கிறது. கேட்டேன் பாடல்கள் சுமார் ரகமாகத்தான் தோன்றுகிறது. படமாவது நல்லா இருந்தா சரி.

நான் எதிர்பார்த்து கொண்டிருக்கும் தாமரையின் வரிகளால் நிரப்பப் பட்ட "வி்ண்ணைத்தாண்டி வருவாயா" பாடல்கள் இன்னும் மூன்று தினங்களில் வெளிவர இருக்கிறது.எனக்கு கிடைத்த ஒரு பாடலில் தாமரையின் இரு வரிகள் இதோ,
ஏன் இதயம் உடைத்தாய் நொறுங்கவே
என் மறு இதயம் கொடுப்பேன்
நீ உடைக்கவே
எப்புடி இருக்குன்னு சொல்லுங்க. கேட்டதும் சட்டென மனதில் ஒட்டிய வரிகள்.
------------------------
ஒரு காலத்தில் மட்டைபந்து வெறியனாக திரிந்த எனக்கு அதிலிருந்த ஆரவம் குறைந்து போய் விட்டது. முத்தரப்பு மட்டைபந்து போட்டியில் இந்திய அணியின் சிறப்பான பந்து வீச்சு (?) பங்களாதேசால் கூட 300ஐ நெருங்க வைத்தது வெறுப்பை ஏற்படுத்தியது. இந்திய மட்டைபந்து குழுமம் அரசியல் பார்க்காமல் சிறந்த வீரர்களை தேர்வு செய்யும் காலம் வருமா?
------------------------

எனது முதல் இடுகை(ஆதங்கம்)யான "பிச்சை காரனின் பிள்ளைகள்......." எத்தனை பேர் படித்திருப்பீர்கள் எனத் தெரியவில்லை. ஒரு நாள் அலுவலக இடைவேளையின் போது பிச்சை எடுத்து கொண்டிருந்த குழந்தைகளை பார்த்ததும் மனதிற்குள் ஏற்பட்ட வலிதான் இந்த பதிவு. இந்த குழந்தைகளின் நிலை அனாதைக் குழந்தைகளை விட கொடியது.
------------------------
இந்த வார டரியல் எங்கள் ப்ளாக்கின் "மனிதம் (சொன்னது பாதி....)". மனிதம் அனிச்சை செயலாக வெளிப்பட்டிருப்பதை சொல்லியிருக்கும் பதிவு. இந்த மனிதம் எத்தனை பேரிடம் மீதமிருக்கிறது எனத் தெரியவில்லை.
------------------------
அடுத்த வார டரியல் முதல் வாரம் ஒரு பதிவரையும் அறிமுகப் படுத்தலாம் என்றிருக்கிறேன். அதில் அந்த பதிவரின் பதிவுகளில் என்னைக் அவர்ந்த சில பதிவுகளையும் சேர்த்து அறிமுகப் படுத்தவிருக்கிறேன்.
------------------------


