கடவுளை மற..மனிதனை நினை..

10 January 2012

முல்லைப் பெரியாறும் மீனவ பிரச்சினையும்

9:37:00 AM Posted by புலவன் புலிகேசி 1 comment
தமிழக மீனவர் பிரச்சினை:


இதுவரை 500 க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் சிங்கள வெறியர்களால் சுட்டுக் கொல்லப் பட்டிருக்கிறார்கள். இது தொடர்பாக வழக்காடுமன்றத்தில் ஸ்டாலின் என்பவரால் தொடரப் பட்ட வழக்கிற்கு இந்திய கடலோர காவற்படை ஒரு பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்திருந்தது.

அதில் தமிழக மீனவர்கள் எல்லைத் தாண்டி செல்வதால் தான் தாக்கப் படுவதும், கொலை செய்யப் படுவதும் நிகழ்கிறது. இதனை தடுக்க எல்லை தாண்டும் மீனவர்கள் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்ய வேண்டும். மேலும் அவர்கள் கச்சத் தீவை ஒட்டியுள்ள பகுதிகளில் மீன் பிடிக்க தடை செய்ய வேண்டும் எனவும் கூறியது.

பின்னர் தமிழக அரசின் எதிர்பை அடுத்து "கிரிமினல் வழக்கு பதிய வேண்டும்" என்பதை மட்டும் நீக்கி விட்டு கச்சத் தீவு பகுதிகளில் மீன் பிடிக்க தடை விதிக்க வேண்டும் என்பதை மட்டும் விடாப் பிடியாக பிடித்துத் தொங்கிக் கொண்டிருக்கிறது.

1974 - ல் செய்து கொண்ட ஒப்பந்தப் படி கச்சத் தீவு பகுதிகளில் தமிழக மீனவர்கள் மீன் பிடிக்கத் தடை ஏதும் கிடையாது. ஆனால் இவர்கள் அந்த உரிமையை விட்டுக் கொடுக்க சொல்கிறார்கள். மீனவர்களின் வாழ்வாதாரத்தை பிடுங்கி அவர்களை நடுத் தெருவுக்கு கொண்டு வரத்தான் நினைக்கிறது இந்த இந்திய அரசாங்கம்.

மீனவர்கள் எல்லை மீருவதாகவே வைத்துக் கொண்டாலும் அவர்களை பிடித்து கடலோர காவற்படையிடம் ஒப்படைக்காமல் தாக்குவதும், சுட்டுக் கொள்வதும் நியாயமா? இதை நியாயப் படுத்தும் விதமாக பேசும் இந்தியக் காவற்படை தமிழர்கள் மீதான தனது பொறுப்பற்ற, துப்பில்லா தன்மையை வெளிப் படுத்தியிருக்கிறது.

முல்லைப் பெரியாறு:


தமிழகத்தின் ஐந்து மாவட்ட விவசாயிகளின் வாழ்வாதாரத்தை கேள்விக் குறியாக்கும் கேரள கட்சிகளின் போக்கைக் கண்டிக்க துப்பில்லாத தேசியக் கட்சிகள் இங்கு உலாத்திக் கொண்டிருக்கின்றன.

காங்கிரசு, பா.ஜ.க மற்றும் சி.பி.எம் போன்ற கட்சிகள் இந்தியா முழுதும் இருக்கும் தேசியக் கட்சிகள். இவர்கள் பேசுவதெல்லாம் ஒருமித்த இந்தியா, நாம் அனைவரும் இந்தியர்கள் என்பதாக. ஆனால் இந்த உணர்வெல்லாம் இந்தியா உலக கோப்பை வாங்கும் போதும் கார்கில் போர் நடக்கும் போதும் மட்டும் தான்.

கேரளாவில் உள்ள ஓட்டுப் பொறுக்கி தேசியக் கட்சிகள் தூண்டிவிட்ட மலையாள வெறியால் கேரளா வாழ் தமிழக மக்கள் தாக்கப் பட்டு சொந்த நாட்டிலேயே அகதிகள் போல வருகிறார்கள்.

ஆனால் கேரளாவில் இந்த வெறியை தூண்டிவிடும் காங்கிரசு, பா,ஜ,க மற்றும் சி.பி.எம் ஆட்களை தட்டிக் கேட்கவோ, தனது எதிர்ப்பை பதிவு செய்யவோ துப்பில்லாத தமிழக காங்கிரசு, பா.ஜ.க, சி.பி.எம் - கள் தன்னெழுச்சியாக லட்சக் கணக்கில் மக்கள் கூடி நடத்தும் போராட்டத்திற்கு தாங்களும் ஆதரவு என்பது போல் வேசமிடுகின்றன.

இவர்களின் இந்த செயல்கள் மக்களிடம் ஓட்டு வங்கியை பெறும் முயற்சி மட்டுமே என்பது இதன் மூலம் நிரூபணம் ஆகிறது.

ஆனால் மக்கள் திரள் தொடர் போராட்டம் அரசாங்கத்தை ஸ்தம்பிக்க வைத்து தீர்மானம் நிறைவேற்ற செய்து, அணையை காப்பாற்றி வருகிறது.

இரு பிரச்சினைகளின் வேறுபாடுகள்:

இந்த இரு பிரச்சினைகளுக்கும் ஒரு முக்கிய வேறுபாடு இருக்கிறது. மீனவ பிரச்சினையை எடுத்துக் கொண்டால் அவர்கள் முழுதும் நம்பி வருவது தமிழக அரசை தான். சென்ற ஆட்சியில் வெறும் கடிதம் மட்டுமே கைமாறியது நியாயம் கிடைக்கவில்லை என மாற்றி வாக்களித்து புது ஆட்சியைக் கொண்டு வந்தார்கள். ஆனால் இன்றும் அதே நிலை தான் நீடிக்கிறது.

ஆனால் இந்த முல்லை பெரியாறு பிரச்சினையிலும், கூடங்குளம் பிரச்சினையிலும் மக்கள் அப்படி இல்லை. அவர்கள் அரசை மட்டும் நம்பியிராமல் தங்கள் போர்க் குணம் மிக்க போராட்டங்களை தொடர்ந்து வருகின்றனர். அதனால் அரசாங்கம் மிரண்டு போயுள்ளது என்பது நாம் அனைவரும் அறிந்ததே.

மீனவ பிரச்சினையில் அவ்வப போது ஆங்காங்கே நடக்கும் போராட்டங்கள் அரசாங்கங்களைத் திரும்பிப் பார்க்க வைக்க போதுமானதாக இல்லை என்பதே உண்மை.

இதிலிருந்து ஒன்று மட்டும் தெளிவாக நிரூபணமாகி இருக்கிறது. ஆட்சி மாற்றம் என்பது ஒரு போதும் நமக்கு தீர்வை தராது. மக்கள் போராட்டங்களின் மூலம் மட்டுமே தீர்வும், நியாயமும் கிட்டும் என்பது இங்கு நிரூபணமாகி இருக்கிறது.

1 விவாதங்கள்:

Venkat said...

தமிழக ரயில் நிலையங்களைக் கேரள பயணிகளின் வசதிக்கான ரயில்களை நிறுத்தி வைக்கும் இடங்களாக (Rail Parking Stand) இந்திய ரயில்வேத் துறை மாற்றியுள்ளதாக பயணிகள் கருதுகின்றனர்.

http://kkdrua.blogspot.com/2011/07/blog-post.html?showComment=1327221006495#c386608172987358885

தென் மாவட்ட மக்களை ஏமாற்றி கேரளாவுக்கு சாதகமாக செயல்படும் ரயில்வேதுறை