கடவுள் இருக்கிறானா? இல்லையா?? இருக்கிறான் என்றால் அவன் யார்???
இது போன்ற கேள்விகள் மனிதர்களிடத்தில் இன்று வரை தெளிவு படாமல் ஓடிக் கொண்டுதான் இருக்கின்றது.
இதைப் பற்றி விவாதிக்க இந்த ஒரு பதிவு போதாது என்பதால் தான் இதை ஒரு "தொடர்கதை" (TV mega Serial அல்ல...) போல் எழுதத் தொடங்கியுள்ளேன். இதன் முதல் பகுதியைப் பார்ப்போம்.
முதலில் கடவுள் எவ்வாறு படைக்கப் பட்டிருப்பான் எனப் பார்ப்போம்..
ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் இரண்டு விதமான நம்பிக்கைகள் உள்ளன. அவை தன்னம்பிக்கை மற்றும் பிறர் மீது கொள்ளும் நம்பிக்கை.
எந்த ஒருவனுக்கு தன்னம்பிக்கை குறையத் தொடங்குகிறதோ அப்போதெல்லாம் அவன் பிறர் மீது நம்பிக்கைக் கொள்ள கட்டாயம் ஏற்படுகிறது. நாம் பிறர் மீது கொள்ளும் நம்பிக்கை பெரும்பாலும் தோற்றுப் போகிறது (உதாரணம்: நமது அரசாங்கம்...).
"தன்னம்பிக்கை குறையும் பொழுது கடவுள் கருவில் வளரத் தொடங்குகிறான். எப்போது பிறர் மீது கொள்ளும் நம்பிக்கை குறையத் தொடங்குகிறதோ அப்போது அவன் வளரத் தொடங்குகிறான். அதே நம்பிக்கை பொய்க்கும் பொழுது பிறந்து விடுகிறான்."
இங்கு பிறப்பது வெறும் நம்பிக்கை மட்டுமே! கடவுள் அல்ல!!!
"மனிதனைப படைத்தது கடவுள் என்பதெல்லாம் சுத்தப் பொய்! உண்மையில் கடவுள் தான் மனிதனால் படைக்கப் படுகிறான். வெறும் நம்பிக்கையாக!!!"
இந்த நம்பிக்கை சிறிது சிறிதாக தவறான முறையில் வளர்ந்து இப்போது நம் மக்களிடம் மூடநம்பிக்கையாக உருவெடுத்துள்ளது.
"தன்னம்பிக்கை இழப்பவன் உண்மையில் ஒரு ஊனமுற்றவன். அவன் நடப்பதற்கு ஒரு ஊன்றுகோல் தேவைப்படுகிறது. அந்த ஊன்றுகோல் சிலருக்கு மனிதர்களிடம் கிடைக்கிறது. மனிதர்களால் புறக்கணிக்கப் படுபவர்களுக்கு இல்லாத ஒரு ஊன்றுகோலாக கடவுள் தேவைப் படுகிறான்."
இந்த கடவுள் நம்பிக்கையையும் மூடநம்பிக்கையையும் பற்றி இனி வரும் பகுதிகளில் தெளிவாக விவாதிக்க விரும்புகிறேன்...
உங்கள் கருத்துக்களுக்காகவும் வாக்குகளுக்காகவும் காத்துக் கொண்டிருக்கும் கடவுள் அல்லாத ஒரு மனிதன்...............