ஒரு வழியாக பழைய நிறுவனத்திலிருந்து விடைபெற்று புதிய நிறுவனத்தில் சேர்ந்து ஒரு வாரமாயிற்று. பணி நன்றாக சென்று கொண்டிருக்கிறது. இனி நிச்சயம் அவ்வப்போது வலைப்பூவில் தலையைக் காட்டுவேன்.
------------------------------------
"தமிழ்ப் பட பாடல்களில் ஆங்கிலம் கலந்து எழுதுவதாக சிலர் குறைபட்டுக் கொண்டனர். அப்படியெல்லாம் வருத்தப்பட வேண்டிய அவசியமில்லை. தமிழை யாராலும் ஒன்றும் செய்துவிட முடியாது. நான் துட்டுக்கு பாட்டு எழுதும் கவிஞன். தமிழை வளர்க்க நான் ஒன்றும் செய்ய வேண்டியதில்லை. அது தன்னாலேயே வளரும் தன்மை கொண்டது..."
எனக் கவிஞர் வாலி வெளிப்படையாகப் பேசியிருக்கிறார்.
------------------------------------
தாயார் திருப்பி அனுப்பப்பட்டது குறித்து ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணிய சுவாமி வெளியிட்டுள்ள அறிக்கை:
"விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதியை இந்தியாவுக்குள் அனுமதிக்க மறுத்த இந்திய அரசின் நடவடிக்கை மிகவும் சரியானது. யார் வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் வந்து, தங்கி செல்ல இந்தியா ஒன்றும் தர்மசாலை அல்ல."
அப்புடிங்களா சுவாமி, அப்ப இங்க ஆட்சியில இருக்குறவங்க எல்லாம் இந்தியர்கள் தானா? அவங்கல்லாம் வந்துத் தங்க அனுமதிப்பீங்க, ஒரு தமிழ் மூதாட்டி வரக்கூடாது. வாழ்க உமது மனித நேயம்.
------------------------------------
நாட்டில் எவ்வளவு பிரச்சினைகள் நடந்து கொண்டிருக்கின்றன. அதையெல்லாம் விடுத்து பதி விரத பிரச்சினை செய்து கொண்டிருக்கிறார் அந்த கொச்சைத்(பச்சை) தமிழன். இவரை முதல்வர் என்கிறோம். இது போன்ற விசயங்களில் இவர்தான் முதல்வர் என்பதை யாரும் மறுக்க முடியாது.
------------------------------------
இந்த வாரப் பதிவர்: சிறகுகள் "பாலவாசகன்"
திடீர் திடீர் என இவர் எழுதும் காதல் கவிதைகள் மிக அழகாகவும், அருமையாகவும் இருக்கும். புகைப்பட விரும்பி. அவ்வப்போது தான் தன் அலைபேசியில் எடுத்தப் படங்களை வெளியிடுவார்.
இவரது வலைப்பூ: சிறகுகள்
------------------------------------
இந்த வார டரியல் நண்பர் அகல் விளக்கு எழுதிய "கடவுளும், நானும்". இவரும் கடவுளைக் காண்பதில் என் வரிசையில் சேர்ந்து விட்டார். படித்துப் பாருங்கள் புரியும் அவர் கடவுளை எங்கே கண்டார் என.
------------------------------------
"தமிழ்ப் பட பாடல்களில் ஆங்கிலம் கலந்து எழுதுவதாக சிலர் குறைபட்டுக் கொண்டனர். அப்படியெல்லாம் வருத்தப்பட வேண்டிய அவசியமில்லை. தமிழை யாராலும் ஒன்றும் செய்துவிட முடியாது. நான் துட்டுக்கு பாட்டு எழுதும் கவிஞன். தமிழை வளர்க்க நான் ஒன்றும் செய்ய வேண்டியதில்லை. அது தன்னாலேயே வளரும் தன்மை கொண்டது..."
எனக் கவிஞர் வாலி வெளிப்படையாகப் பேசியிருக்கிறார்.
------------------------------------
தாயார் திருப்பி அனுப்பப்பட்டது குறித்து ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணிய சுவாமி வெளியிட்டுள்ள அறிக்கை:
"விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதியை இந்தியாவுக்குள் அனுமதிக்க மறுத்த இந்திய அரசின் நடவடிக்கை மிகவும் சரியானது. யார் வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் வந்து, தங்கி செல்ல இந்தியா ஒன்றும் தர்மசாலை அல்ல."
அப்புடிங்களா சுவாமி, அப்ப இங்க ஆட்சியில இருக்குறவங்க எல்லாம் இந்தியர்கள் தானா? அவங்கல்லாம் வந்துத் தங்க அனுமதிப்பீங்க, ஒரு தமிழ் மூதாட்டி வரக்கூடாது. வாழ்க உமது மனித நேயம்.
------------------------------------
நாட்டில் எவ்வளவு பிரச்சினைகள் நடந்து கொண்டிருக்கின்றன. அதையெல்லாம் விடுத்து பதி விரத பிரச்சினை செய்து கொண்டிருக்கிறார் அந்த கொச்சைத்(பச்சை) தமிழன். இவரை முதல்வர் என்கிறோம். இது போன்ற விசயங்களில் இவர்தான் முதல்வர் என்பதை யாரும் மறுக்க முடியாது.
------------------------------------
இந்த வாரப் பதிவர்: சிறகுகள் "பாலவாசகன்"
திடீர் திடீர் என இவர் எழுதும் காதல் கவிதைகள் மிக அழகாகவும், அருமையாகவும் இருக்கும். புகைப்பட விரும்பி. அவ்வப்போது தான் தன் அலைபேசியில் எடுத்தப் படங்களை வெளியிடுவார்.
இவரது வலைப்பூ: சிறகுகள்
------------------------------------
இந்த வார டரியல் நண்பர் அகல் விளக்கு எழுதிய "கடவுளும், நானும்". இவரும் கடவுளைக் காண்பதில் என் வரிசையில் சேர்ந்து விட்டார். படித்துப் பாருங்கள் புரியும் அவர் கடவுளை எங்கே கண்டார் என.