கடவுளை மற..மனிதனை நினை..

08 May 2011

எங்கேயும் காதல் - மேட்டுக்குடி காதல

12:30:00 PM Posted by புலவன் புலிகேசி 4 comments

லண்டனில் வசிக்கும் ஒரு பரம "ஏழை" (!) குடும்பத்துப் பெண் தான் படத்தின் நாயகி. ஒரு பணக்கார வாலிபன் 11 மாசம் பிசினசில் பிசி அப்பறம் ஒரு மாசம் லண்டன் வந்து குட்டி புட்டிகளுடன் குதியாட்டம் போடுறவன்.


அவன் மீது இந்த பரம ஏழை பெண்ணுக்கு காதல் (அப்புடின்னு சொல்றாங்க ஆனா ஏன்னு சொல்லலப்பா). அவன் எப்புடி பட்டவன்னு தெரிஞ்சும் லவ் பண்றா. ஆனா அவன் அவளை அலட்சியப் படுத்துறான். அவன மடக்க அவன் டெக்னிக்கையே யூஸ் பண்றா.

அவளோட அப்பா கேஸ்ல வந்தவங்கள எல்லாம் தன்னோட பாய் பிரண்ட்ஸ்-நு சொல்லி ஹிரோவ ஏமாத்துறா. ஒரு கட்டத்துல இவனும் அவளை லவ் பண்ண ஆரம்பிக்கிறான். அந்த பொண்ணு சொன்ன பாய் பிரண்ட்ஸ் யாருன்னு தெரிஞ்சிக்க அவ அப்பா வச்சிருக்குற டிடக்டிவ் ஏஜன்சி போறான்.

தன் பொண்ணுதான்னு கண்டு புடிச்ச டிடக்டிவ் ஹீரோ கிட்ட போய் தன் குடும்பத்தின் "ஏழ்மை" பத்தி பேசுறாரு. கடைசில ரெண்டு ஏழைகளும் சேருறாங்க. இந்த மொக்கையதான் படம்னு சொல்லி எடுத்துருக்காங்க.

எங்கேயும் காதல் - மேட்டுக்குடி காதல