சனிக்கிழமை நடந்த "தமிழ் வலைபதிவர்கள் குழும" விவாதத்திற்கு சில காரணங்களால் என்னால் செல்ல இயலவில்லை. மறுநாள் கேபிளாரிடம் பேசியும், சிலரது வ்லைப்பூ மூலமும் அங்கு நிலவிய குழப்பங்களையும், இறுதியாக எடுக்கப் பட்ட முடிவையும் தெரிந்து கொண்டேன். என்னைப் பொறுத்த வரை இந்தக் குழு மக்களுக்கு பயன்படும் நல்ல விடயங்களையும், உதவிகளையும் தன் பணிகளாக அமைத்துக் கொள்ள வேண்டும். இந்தக் குழுமத்தில் இணைய விருப்பமுள்ளவர்கள்
மின்னஞ்சல் செய்ய வேண்டிய முகவரி: tamilbloggersforum@gmail.com
தமிழ் வலைப்பதிவர்கள் கூகுல் குழுமம் tamizhbloggersforum@googlegroups.com
புகைப்பட உதவி: சுகுமார்
---------------------------
என் நண்பன் ஒருவன் சென்னையின் முக்கியமானப் பகுதியில் போக்குவரத்து காவல் அதிகாரியாக (டிராஃபிக் எஸ்.ஐ) பணியாற்றி வருகிறான். நண்பர்களில் சிலர் அவனது துடிப்பான பணியையும், நேர்மையையும் கவனித்திருக்கிறார்கள். அவன் பணியில் இருந்ததால் பேசாமல் வீடு திரும்பியிருக்கிறார்கள். ஒரு எஸ்.ஐ தனியாக சாலையில் நின்று விதி மீறுபவர்களைப் பிடித்துக் கொண்டிருப்பது ஆச்சர்யமளித்ததாகவும் சொன்னார்கள். அதன் பின் ஒரு நாள் என் அறைக்கு வந்தான். அவனுக்கு லஞ்சம் பெறுவதில் விருப்பமில்லாததால் கான்ஸ்டபிள்கள் மற்றும் ஏட்டுகள் அவனுடன் வருவதில்லையாம். லஞ்சம் இல்லை என்றால் பணி செய்ய அவர்கள் தயாராக இல்லை என்பது புரிந்தது. இவர்கள் எல்லாம் சேர்ந்து என் நண்பணை மாற்றாமல் இருக்க வேண்டும். காவல் துறை என்றாலே லஞ்சத் துறை என்றாகிப் போனதற்கு இது போன்றவர்கள்தான் காரணம்.
---------------------------
மூன்றாண்டுகளுக்குப் பிறகு நான் முன்னர் பணி செய்த நிறுவனத்தை சேர்ந்த ஒரு பெண்ணை சந்திக்க நேர்ந்தது. கையில் குழந்தையுடன் வந்திருந்தார். ஆனால் வேறு ஒரு தோழியின் மூலம் விபரமறிந்தேன், பத்து ஆண்டு காலம் காதலித்து திருமணம் செய்து பிள்ளை பெற்றிருக்கிறார்கள். இப்போது திருமணமாகி மூன்று ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் "விவாகரத்து" செய்ய முடிவெடுத்து வின்னப்பமிட்டிருக்கிறார்கள். இந்தக் காதலின் அர்த்தம் எனக்கு இன்று வரை சரிவரப் புரிந்ததில்லை. உங்களுக்குத் தெரிந்தால் சொல்லுங்கள்.
---------------------------
சென்னையில் பல இடங்களில் பாலங்கள் கட்டப் பட்டு சாலைகள் அமைக்கப் பட்டிருக்கின்றன. ஆனால் சென்னையின் முக்கிய சாலையில் ஐ.ஐ.டி க்கு அருகில் உள்ள சாலையின் நிலை கவலைக்கிடமானது. வகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துடனே கடந்து செல்கின்றனர். புதிய சாலைகள் அமைப்பதில் கிடைக்கும் லஞ்சம் பழையவற்றை புதுப்பிப்பதில் கிடைக்கவில்லையோ?
---------------------------
இந்த வாரப்பதிவர்: திசைக்காட்டி ரோஸ்விக்
இதனை சிலர் தமிழாக்கம் செய்து ரோசாப்பொய்முடி என கலாய்ப்பார்கள். இவரது எழுத்துக்கள் பெரும்பாலும் வாழ்வியல் நிகழ்வுகளின் பிரதிபலிப்பாகவே இருக்கும். உறவுகள் பற்றியும் அழகாக சொல்லியிருப்பார்.
இவரது வலைப்பூ: திசைக்காட்டி
---------------------------
இந்த வார டரியல், இந்த வாரப் பதிவர் ரோஸ்விக் எழுதிய "பனி உருக்கி உலகழிக்கும் நம் பணி (புரட்டும் அபாயம்)...". தேவையானப் பதிவு. உலக அழிவில் நம் பங்கு என்ன என்பதை சொல்லியிருக்கிறார். படித்துப் பாருங்கள்.
---------------------------