கடவுளை மற..மனிதனை நினை..

17 January 2012

நண்பன் - பதிவுலக மேன்மக்களே!

9:23:00 AM Posted by புலவன் புலிகேசி 7 comments
இது 3 Idiots-ன் அப்பட்டமான காப்பி என்பது அனைவரும் அறிந்ததே. அதற்காக இப்படத்தின் கேவலங்களை அந்த இயக்குனரிடம் தான் கேட்க வேண்டும் என்றால் அதை ஒப்புக் கொள்ள முடியாது. காரணம் அதை ரீமேக் செய்பவர் அப்படத்தை ஏற்று கொண்டு தான் எடுக்கிறார் என்றால் அந்த கருத்தையும் ஏற்றுக் கொண்டார் என்று தான் அர்த்தம்.

நண்பன் குறித்து பதிவுலகில் பல விமரிசனங்கள் வந்த வண்ணம் இருக்கின்றன. இதில் பதிவுலகில் சிலர் தங்களை "மேன்மக்களாக" நினைத்து பார்ப்பனிய கோவணத்தை இறுக்கிக் கட்டிக் கொண்டு திரிவதும் பார்க்க முடிகிறது. மேலும் சிலர் தங்களை பெரியாரின் பேரன் எனும் அளவுக்கு பினாத்தி கொண்டு தட்டிக் கேட்காமல் சந்தர்ப்ப வாதியாகவும் திரிந்து கொண்டிருக்கின்றனர்.

சரி இவர்களை பற்றி பார்ப்பதற்கு முன் நண்பனை பற்றி பார்க்கலாம்.

மூன்று வர்க்கங்களில் இருந்து வரும் மூன்று எஞ்சினியரிங் மாணவர்கள், அவர்களின் பின்னணி, கல்வி ஆகியவற்றை கொண்டு நகர்வது தான் இந்த படம். இதில் பணக்கார வர்க்கத்திலிருந்து வரும் மாணவனாக பாரியாக விஜய். அவர் பிரபு கல்யான் ஜுவல்லரியில் புரட்சி நடத்துவது போல் கல்வியில் புரட்சி நடத்துவதாக நினைத்து ஏதோ செய்திருக்கிறார்.

எதையுமே மனப்பாடம் செய்து படிப்பதை விட புரிந்து படிக்க வேண்டும் என நினைப்பவர் இந்த பாரி. அது போல் விரும்பிய துறையை தேர்ந்தெடுக்க வேண்டும் அதில் ஜெயிக்க வேண்டும் என்கிறார்.

முதலில் தனியார் மயமாகிக் கொண்டிருக்கும் இந்த கல்வித்துறை காசு இருப்பவனுக்கு தான் கல்வி என்ற நிலைக்கு கொண்டு செல்கிறது. கல்வி முறையில் குற்றம் கண்டு பிடித்து அதில் மாற்றம் செய்ய வேண்டும் என சொல்லும் இயக்குனர் அதற்கு முன் அந்த கல்வித் துறையின் தனியார் மயத்தை எதிர்த்து எதுவும் பேச வில்லை. சரி அப்படியே மாற்றம் செய்தாலும் அதனால் என்ன நடந்து விடும்? மனப்பாடம் செய்தாலும், புரிந்து படித்தாலும் படித்து முடித்த பின் அந்தப் படிப்பு ஒரு தனியார் நிறுவனத்துக்கோ அல்லது அந்நிய நாட்டு வளர்சிக்கோ தான் பயன் பட போகிறது.

மேலும் தான் விரும்பும் துறையை தேர்ந்தெடுத்து படிக்கும் அல்லது அதில் கவனம் செலுத்தும் வாய்ப்பு மேல் தட்டு மக்களுக்கு மட்டுமே சாத்தியம். ஒரு துறையை விரும்புவதற்கு கூட நாம் மேல் தட்டில் இருக்க வேண்டும். கேம்பஸ் இன்டர்வியூக்கு புறப்படும் ஸ்ரீகாந்தை தடுத்து அவருக்கு பிடித்த துறையை தேர்ந்தெடுக்குமாறு அறிவுறுத்தும் பின்னணி அதை புரிய வைக்கிறது. அதோடில்லாமல் எந்த ஹங்கேரியில் இருந்தும் எந்த மாத்தேவும் நமக்கு அப்பாயின்ட்மென்ட் கொடுக்க மாட்டான். அது ஸ்ரீகாந்த் போன்ற சங்கர் பட நாயகனுக்கு மட்டும் தான் சாத்தியம். அதுவும் படத்தில் மட்டும் தான்.

ஒரு காட்சியில் "சார் இந்த பர்ஸ்ட் ரேங்க் வாங்குனவங்க மேல் சாதி மாதிரியும், கம்மியா ரேங்க் வாங்குனவங்க கீழ்சாதி மாதிரியும் உக்கார வைக்கிறது நல்லா இல்லை. ரேங்கிங் சிஸ்டமே தப்பு சார்" என சொல்லும காட்சியில் இட ஒதுக்கீட்டை எதிர்த்து இலைமறை காயாய் பேசுவது தெள்ளத் தெளிவாக புரிகிறது. இந்தக் காட்சியில் நடித்த முற்போக்காளர் (!?) சத்யராஜிக்கு இது புரியவில்லையா?

அடுத்து இன்னொரு நண்பர் ஜீவா. ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவர். திருமணமாகாத அக்கா, உடல்நலமில்லாத தந்தை, ஒய்வு பெற்ற தாய் என வறுமையில் வாடும் குடும்பப் பின்னணி. இவர் படித்து தான் அந்தக் குடும்பத்தை காப்பாற்ற வேண்டும். ஒரு வேலை இவருக்கு பெரிய போட்டோ கிராப்பர் ஆக வேண்டும் என்ற ஆசை வந்தால் அவருக்கு இந்த பாரியின் அறிவுரை என்னவாக இருக்கும்?

மேலும் கருப்பான ஜீவாவின் அக்காவை ஸ்ரீகாந்த் திருமணம் செய்து கொள்வது போல் நினைத்துப் பார்க்கும் காட்சியில் அந்த பெண்ணைக் கேவலப் படுத்தும் அக்காட்சியில் நிறவெறி பளிச்சிடுகிறது. இதை வெறுமனே நிறவெறி என்று ஒதுக்கி விட முடியாது. சிவாஜியிலும் கூட அங்கவை சங்கவை என கருப்பின மக்களை கேவலப் படுத்தும் வேலையை இந்த பார்ப்பன இயக்குனர் தவறாமல் செய்திருக்கிறார் என்பதை இங்கு நினைவில் கொள்ள வேண்டும்.

மேலும் தலித்துகளின் வீடுகள் சுத்தமில்லாமல் இருக்கும், அவர்கள் மாட்டுக் கறி உண்பவர்கள், அவர்கள் வீடுகளுக்குள் நுழைந்தால் துர் நாற்றம் வீசும் என்ற பார்ப்பனீய சிந்தனையை மனதில் வைத்து சித்தரிக்கப் பட்ட காட்சியமைப்பு தலித்துகள் மீதான வெறுப்பை உமிழ்ந்திருப்பதை தெளிவு படுத்துகிறது. ஆனால் உண்மையில் அவர்களின் வீடுகள் அப்படி கிடையாது என்பதை உறுதியாக சொல்ல முடியும்.

அதோடில்லாமல் அவர்களின் ஏழ்மையை நகைச்சுவையாய் காட்ட முயலும் கேவலமான சிந்தனையை என்ன சொல்வது. அந்த ஏழ்மை தாய் சப்பாத்தி கட்டையால் நோயாளியின் நெஞ்சை சொரிவதும், தக்காளி எட்டு ரூவா, அரிசி பத்து ரூவான்னு பேசுவதாகவும் காட்டியிருக்கும் காட்சி யாராலும் ஏற்றுக் கொள்ள முடியாது. உண்மையில் பார்த்தால் நாம் பணக்கார வீட்டிற்கு செல்லும் போது கிடைக்கும் மரியாதை, உணவை விட ஏழை வீட்டில் கிடைக்கும் உண்மையான பாசமும், உணவும் அதை நிரூபணம் செய்யும். இது எனது நேரடி அனுபவமும் கூட.

ஆனால் திரையரங்கில் இந்தக் காட்சியில் அனைவரும் கை தட்டி சிரித்தது மனதை வருத்தமடைய செய்தது. நம்மை நம் மக்களை கேவலப் படுத்தும் பார்ப்பன ஆதிக்கம் மிக்க காட்சியை எப்படி ரசித்து கைதட்டி சிரிக்க முடிகிறது எனத் தோன்றியது.

இன்னொரு காட்சியில் நாயகிக் குடித்து விட்டு வந்து பேசும் போது நாயகன் சொல்லும ஒரு வசனம் "ஓவரா குடிச்சிட்ட போல! முனிம்மாலாம் வெளிய வரா" என்பதாக. அதாவது தலித் பெண்களின் பேச்சு வழக்கு கேவலம், அவர்கள் குடிக்கக் கூட செய்வார்கள் என்பதாக இருக்கிறது இந்த வசனம்.

சென்னை தி.நகரில் உள்ள 10 downing street வழியாக வார இறுதி நாட்களின் இரவில் சென்று பாருங்கள் குடித்து விட்டு வெளியில் வருவது முனிம்மாக்களா அல்லது ரியாக்களா என்பது புரியும்.

படத்தில் கவனிக்கப் பட வேண்டிய மற்றுமொரு பாத்திரம் பன்னீர். தான் ஒரு சிறந்த கிரியேட்டிவிட்டி உள்ளவர் என்பதை நிரூபிக்க முயலும் இளைஞர். ஆனால் கல்லூரியில் கொடுக்கப் படும் பிரசர் தாங்காமல் தற்கொலை செய்து கொள்வதாக அமைக்கப் பட்டிருக்கும் பாத்திரம் அது.

இன்று IIT, IIM, AIIMS போன்ற மாபெரும் கல்லூரிகளில் நடைபெறும் தற்கொலைகளின் காரணம் நிச்சயம் இது போன்ற பிரஷர் அல்ல. அவைகளின் பின்னணி கொடூரமானது. இங்கு நடக்கும் பெரும்பாலான தற்கொலைகளுக்கு காரணம் சாதி. நன்கு படிக்கும் ஆசையில் இது போன்ற கல்லூரிகளில் சேரும் தலித்துகள் நடத்தப் படும் விதம் அவர்களை தற்கொலைக்கு தூண்டுகிறது.
இது போன்ற கல்லூரிகளில் முதல் நாள் வகுப்பில் மாணவர்கள் அனைவரும் தங்களை அறிமுகம் செய்யும் பொழுது, அவர்கள் எந்த கோட்டாவில் சேர்ந்தார்கள் என்பதையும் சேர்த்து உரக்க சொல்ல வேண்டும். அவர்கள் எந்த கோட்டா என்பது ஆசிரியர்களுக்கு கொடுக்கப் படும் லிஸ்டில் இருக்கும். ஆனால் இப்படி உரக்க சொல்ல வைக்கக் காரணம் மற்ற மாணவர்களுக்கும் தலித்துகளை அடையாளப் படுத்தும் நோக்கம். அதன் பின் சக மாணவர்களின், ஆசிரியர்களின் கேலி, கிண்டல் அவமானங்களை சகித்துக் கொண்டு அவர்கள் படிக்க வேண்டும். இதையெல்லாம் கடந்து வந்து படிப்பில் சிறந்து விளங்கினால், "ஒரு தலித் எப்படி மேலே வரலாம்" என்ற எண்ணம் ஆசிரியர்கள் மத்தியிலும் பீறிட்டு கிளம்புகிறது. அந்த மாணவர்களிடம் "நீ எப்புடி இந்த செமஸ்டரில் பாஸ் ஆகுரன்னு பாக்குறேன்" என்பதாக சவால் விட்டு அவர்களை பெயிலாக்கி, அதனால் தற்கொலை செய்து கொண்ட கதையும் உண்டு.

இதற்கு மிகச் சிறந்த உதாரணம் சண்டிகரை சேர்ந்த மாணவன் ஜாஸ்ப்ரீத் சிங். மருத்துவப் படிப்பில் நான்கு ஆண்டுகள் நல்ல மதிப்பெண் பெற்ற இவரை வேண்டுமென்றே சாதி வெறியில் இறுதியாண்டில் தோல்வியடைய செய்தான் ஒரு பேராசிரியர். இதைத் தொடர்ந்து மாணவனின் தற்கொலை, வழக்கு பதிய மறுக்கும் போலிஸ், அதன் பின் பழங்குடியினருக்கான ஆணையத்தின் தலையீட்டுக்கு பின் வழக்கு பதியப் பட்டது. அதைத் தொடர்ந்து விடைத் தாள்கள் வேறு மருத்துவக் கல்லூரி ஆசிரியர்களால் திருத்தப் பட்டு அந்த மாணவன் தேர்ச்சியடைந்ததாக அறிவிக்கப் பட்டது.

இது போன்று பல தலித் மாணவர்கள் இந்தியாவின் மாபெரும் உயர்கல்வி நிறுவனங்களில் தற்கொலை இல்லை இல்லை கொலை செய்யப் படுகிறார்கள். தற்கொலைகளின் பின்னணி இங்கு இருக்கிறது. இதை விடுத்து ஒவ்வொரு 90 நிமிடத்திற்கும் ஒரு மாணவன் தற்கொலைக்கு முயல்கிறான், அதற்கு காரணம் வெறும் பிரஷர் மட்டும் தான் என்பதாக சித்தரித்த மேன்மக்களை என்னவென்று சொல்வது.

தலித்துகளை கேவலப் படுத்தும் நோக்கம் இது போன்ற காட்சிகளில் தெளிவாக தெரிகிறது.

அடுத்து படத்தில் கவனிக்கப் பட வேண்டிய பாத்திரம் சைலன்சர் சத்யன். இந்த பாத்திரம் 3 Idiots படத்தில் பாண்டிச்சேரியை சேர்ந்த ஒரு தமிழன் வருவது போல் சித்தரிக்கப் பட்டது. அதாவது தமிழன் என்றால் போட்டுக் கொடுப்பவன், கேவலமானவன் என்பதாக சித்தரித்த அந்தப் பாத்திரம் அச்சு பிசகாமல் இங்கும் வைக்கப் பட்டிருக்கிறது ஆனால் வெளிநாட்டில் செட்டில் ஆன கோயம்பத்தூர் காரனாக.

தமிழனைக் கொச்சைப் படுத்தும் இந்தக் காட்சியையும் தமிழர்களாகிய நம் மக்களால் ரசித்து சிரித்து கை தட்ட முடிகிறது என்றால் (3 Idiots பார்த்தவர்கள்) நாம் சொரணை இலந்தவர்களாகி விட்டோம் என அர்த்தமாகிறதே!

பாரி படித்து பட்டம் பெற்றது தனக்காக அல்ல, இன்னொருவனுக்காக எனத் தெரிந்தும் அதை பொருட்படுத்தாமல் தன் நண்பனை தேடி ஓடும காட்சியில் தெளிவாகத் தெரிகிறது அந்தப் பார்ப்பனீயம். "யார் வம்பு தும்புக்கும் போவாத. அப்பத்தான் நல்ல புள்ள" ன்னு சொல்லுற பார்ப்பநீயக் கருத்து தான் அது.

சரி இப்போது அந்த இரு பதிவர்களின் கதைக்கு வருவோம். முதலாமவர் பதிவுலக பிரபலம் கேபிள் சங்கர். இந்த நண்பன் குறித்து அவர் எழுதிய விமர்சனத்தில் ஏழ்மையிலும் சுவாரஸ்யத்தையும், நகைச்சுவையையும் எதிர் பார்த்த பார்ப்பனீய வஞ்சகம் தெரிகிறது. கீழ் உள்ள வரிகள் அதற்கு சான்று.

//இன்னொரு பக்கம் ஜீவாவின் வழக்கமான பரரலைஸ்ட் அப்பா, கல்யாணத்துக்கு காத்திருக்கும் அக்கா, தனி ஒருத்தியாய் குடும்பத்தைக் காப்பாற்றும் அம்மா என்பதை வழக்கமாய் சொலலாமல் படு காமெடியாய் வெளிப்படுத்தியக் காட்சி,//

வேலாயுதம் போன்ற பல படங்களை ரீமேக்கிய ராஜாவை கிண்டலடிக்கும் இந்த கேபிள் ராஜா சங்கர் ரீமேக்கியத்தை பெருமையாக பேசியதோடு இல்லாமல் "மேன் மக்கள் மேன் மக்களே" என பாராட்டு வேறு. இந்த மேன் மக்கள் பார்ப்பன இயக்குனராக இருந்தால் மட்டும் தான் போல.

வேட்டை, வேலாயுதத்தின் பல லாஜிக் மீறல்களை நக்கலடித்த இவர் கண்களுக்கு இந்த நண்பனின் லாஜிக் மீறல்கள் தெரியவில்லையா? மருத்துவமனைக்குள் பைக் ஓட்டும் விஜய்,குடித்து விட்டு கடசி பென்ச்சில் இருப்பவனுக்கு கூட தெரியாமல் தூங்கும் மூவர், தேர்வு எண் தெரியாத ஆசிரியரிடம் பேப்பரை கலைத்து விட்டு ஓடுவது (ஏன் அவனுங்கள கண்டு புடிக்க முடியாதா என்ன?), மிகைப் படுத்தப் பட்ட ஏழைக் குடும்பத்துக் காட்சிகள் , எந்த சர்டிபிக்கேட்டும் இல்லாமலே சயின்டிஸ்ட் ஆன விஜய் இப்படியாக நீள்கிறது லாஜிக் மீறல்கள்.

அந்த மேன் மக்கள் குரூப்புக்கு இதெல்லாம் தெரியலையா? இந்த மேன்மக்கள் பிரிவின் தலைவர் கேபிள் ராஜாவுக்கு ஆதரவாக பல கருத்து மழைகள் வேறு. அதில் குறிப்பாக ஊடகன் என்ற அஜீத் ரசிகர் வேறு. இவர் எழுதிய கருத்துரை கீழே.

//ஊடகன் said...
இந்தி படம் போலவே இன்ச் பய் இன்ச் அதே சீன் அதே டயலாக், இந்த மாதிரி எடுத்தா சிபி ராஜ், பிரசன்னா, ஸ்ரீகாந்த் நடிச்சா கூட படம் சூப் ஹிட்டாயுடும். இதை சங்கர் இல்ல, எந்த புது டைரக்டர் எடுத்தாலும் சூப்பர் ஹிட் தான்.......! ஆகையால் இந்த வெற்றி ஒரு வெற்றியே அல்ல....!
நண்பன் = Xerox காப்பி//

இது காப்பின்னு எல்லாருக்குமே தெரியும். ஆனா அந்த விமர்சனத்தில் சொல்லப் பட்ட பார்ப்பநீயக் கருத்துக்கள், மேன்மக்கள் குறித்தக் கருத்துகளை எல்லாம் விட்டு விட்டு தான் ஒரு அஜீத் ரசிகன் என்பதை மட்டும் மனதில் வைத்து கருத்து சொன்ன இவரைப் பார்த்தால் ஒரு உண்மை புரிகிறது. இவரை போன்றவர்கள் தான் திரையரங்கில் அந்த ஏழைகள் குறித்த இழிவான காட்சிகளில் கை தட்டி சிரித்தவர்களாக இருக்க முடியும் என்று.

அதே கேபிளின் விமரிசனத்தில் ஒரு நண்பரின் நியாயமான கேள்வி.

----------Jayadev Das said...
எழுத்தாளர் எழுதிய திரைக்கதைக்கு மரியாதை கொடுத்து அவருக்கு கிரெடிட் கொடுக்கும் தன்மையை பார்க்கும் போது மேன் மக்கள் மேன் மக்களே என்று பாராட்டத்தான் தோன்றுகிறது.\\Boys படம் ஏதோ ஆங்கிலப் படத்தில் காபி, அந்தப் படத்திற்கு கிரெடிட் கொடுத்தாரா? மேன் மக்கள் எப்போதும் மேன்மக்களாக இருக்க வேண்டும், அவ்வப்போது மேன்மக்கள் போல வேடம் போடுபவரை மேன் மக்கள் லிஸ்டில் வைக்க முடியாது.--------------------

இந்த நியாயமான கேள்விக்கு கூட கேபிள் ராஜா-விடம் பதில் இல்லை. எந்திரனை காப்பியடித்த போது அதன் ஒரிஜினல் எழுத்தாளருக்கு கிரெடிட் கொடுக்காத இவர் இந்த ஒரு படத்தின் மூலம் மேன்மக்களாகி விட முடியுமென்றால் பார்ப்பனீயம் அவரை தாங்கிப் பிடிக்கிறது என்று தான் அர்த்தம்.
அந்த இரண்டாம் பிரபல பதிவர் யுவகிருஷ்ணாவுக்கு இதெல்லாம் புரியவில்லையா? அவர் தான் மாபெரும் முற்போக்காளர் ஆயிற்றே. எப்படி புரியாமல் இருந்திருக்கும். எஸ்.ரா வை ஜெமோ என எழுதிய என்னைப் போன்ற அரை வேக்காட்டுக்கே புரிகிற இந்த விடயம் அந்த அறிவாளி-க்கு புரியாமலா இருந்திருக்கும்.

ஒரு வேலை தான் எழுதிய "அழிக்க பிறந்தவன்" நாவலை வெளியிட்டது அந்த கேபிளார் என்ற காரணத்தால் இருக்குமோ? அல்லது அவர் நாவலின் கதை "நண்பன் திருட்டு வீ.சி.டி" யை மையப் படுத்தி வருவதால் மேன்மக்களிடம் வாய்ப்பு தேடும் எண்ணமாக இருக்குமோ? இந்த இரண்டில் எது காரனமானாலும் அதற்கு பெயர் சந்தர்ப்ப வாதம் என்றல்லவா ஆகிறது. ஒரு வேலை இந்த சந்தர்ப்பவாதி முற்போக்காளர் போர்வைக்குள் ஒளிந்திருக்கிறாரோ எனத் தோன்றுகிறது. பிட்டு படங்களுக்கே பாய்ந்து பாய்ந்து விமரிசனம் எழுதும் இவரால் சக நண்பரை விமரிசிக்க முடியாதது வியப்பாக இருக்கிறது.

7 விவாதங்கள்:

ஜானகிராமன் said...

Very true & concern full critic. Appreciate your thoughts and opinion.

sasi said...

Looseappa nee

siva said...

thaught provoking. Keep it up

வலிப்போக்கன் said...

கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களப்பா? அப்படித்தான் சொல்லிகிட்டு இருக்காஙகேய....

ஊடகன் said...

நீங்கள் என்னை பத்தி தவறாக சித்தரித்த வரிகள்,
//இது காப்பின்னு எல்லாருக்குமே தெரியும். ஆனா அந்த விமர்சனத்தில் சொல்லப் பட்ட பார்ப்பநீயக் கருத்துக்கள், மேன்மக்கள் குறித்தக் கருத்துகளை எல்லாம் விட்டு விட்டு தான் ஒரு அஜீத் ரசிகன் என்பதை மட்டும் மனதில் வைத்து கருத்து சொன்ன இவரைப் பார்த்தால் ஒரு உண்மை புரிகிறது. இவரை போன்றவர்கள் தான் திரையரங்கில் அந்த ஏழைகள் குறித்த இழிவான காட்சிகளில் கை தட்டி சிரித்தவர்களாக இருக்க முடியும் என்று.//

சமீப காலத்தில் நீங்கள் எழுதிய பதிவுகளிலே மிக அருமையான பதிவு, நண்பன் படத்தை அக்கு வேறு ஆணிவேராக பிரித்து மேய்ந்து இருக்கிறீர்கள்... ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும், இது நான் அஜித் ரசிகனை இருந்து சொல்லவில்லை, ஒரு சாதாரண ஊடகனாக சொல்கிறேன்.. ஏனெனில் நான் வினவின் பதிவுகளை அன்றாடம் படித்து வருபவன், அவர்கள் சொல்லும் கருத்தோடு ஒத்து போகிறவன், இது வெண்ணிற இரவுகள் பதிவாளருக்கும் தெரியும். ஆகையால் நான் கேபிளாரின் வலைத்தளத்தில் குறிப்பிட்டவை அனைத்தும் ஒரு அஜித் ரசிகனாகவே.,அந்த கருத்து உங்கள் வாத படி தப்புதான், ஆகையால் இந்த வாரத்தை வைத்து கொண்டு ஏழையை பத்தி இழிவான காட்சிகளில் கை தட்டுபவன் என்று நீங்கள் கூறுவது, சம்பந்தமே இல்லாமல் தனி மனித தாக்குதலே ஆகும்.. இது இழிவான செயல்... எப்போதும் சம்பந்தம் இல்லாமல் பேசும் உங்களுக்கு, இது ஒன்றும் புதிதல்ல என்பது எனக்கு தெரிந்தாலும், மற்றவர்கள் இதை தப்பை எடுத்துக்க தோன்றும். ஆகையால் எழுதும் பொது சற்று யோசித்து எழுத வேண்டுகிறேன்...

நீங்கள் எழுதிய இந்த பதிவில் என்னை மிகவும் ஈர்ந்த உண்மையான நிகழுவுகள் கீழே,

//இன்னொரு காட்சியில் நாயகிக் குடித்து விட்டு வந்து பேசும் போது நாயகன் சொல்லும ஒரு வசனம் "ஓவரா குடிச்சிட்ட போல! முனிம்மாலாம் வெளிய வரா" என்பதாக. அதாவது தலித் பெண்களின் பேச்சு வழக்கு கேவலம், அவர்கள் குடிக்கக் கூட செய்வார்கள் என்பதாக இருக்கிறது இந்த வசனம்.

சென்னை தி.நகரில் உள்ள 10 downing street வழியாக வார இறுதி நாட்களின் இரவில் சென்று பாருங்கள் குடித்து விட்டு வெளியில் வருவது முனிம்மாக்களா அல்லது ரியாக்களா என்பது புரியும்.//

//மேலும் கருப்பான ஜீவாவின் அக்காவை ஸ்ரீகாந்த் திருமணம் செய்து கொள்வது போல் நினைத்துப் பார்க்கும் காட்சியில் அந்த பெண்ணைக் கேவலப் படுத்தும் அக்காட்சியில் நிறவெறி பளிச்சிடுகிறது. இதை வெறுமனே நிறவெறி என்று ஒதுக்கி விட முடியாது. சிவாஜியிலும் கூட அங்கவை சங்கவை என கருப்பின மக்களை கேவலப் படுத்தும் வேலையை இந்த பார்ப்பன இயக்குனர் தவறாமல் செய்திருக்கிறார் என்பதை இங்கு நினைவில் கொள்ள வேண்டும்.//

குருத்து said...

படத்தைப் பற்றி பேசுவதற்கு பல விசயங்கள் இருக்கின்றன என என் விமர்சனத்தில் குறிப்பிட்டிருந்தேன். சில பகுதிகளை தொட்டு பேசியிருக்கிறீர்கள்.

ஆனால், எழுதுவதில் வேகம் காட்டுகிறீர்கள் என நினைக்கிறேன். கொஞ்சம் விளக்கமாக, நிதானமாக எழுதவேண்டும் என நினைக்கிறேன். ஏன்னா நான் கொஞ்சம் டியூப்லைட். :)

Unknown said...

enna than nalla padangal vandhalum adhil ulla kuraikalai mattum parkira ummai ponra vimarsakargal irukkum varai endha nalla padamum varadhu... by cinima rasigan