கடவுளை மற..மனிதனை நினை..

12 February 2010

காதலர் தினமும் மெரீனா கடற்கரையும்

8:28:00 AM Posted by புலவன் புலிகேசி 40 comments

காதல் என்ற வார்த்தையே கொச்சைப்படுத்தப்பட்ட ஒன்றாய் இருக்கிறது இந்நாளில். காதல் என்றால் அன்பு என்பதுதான் பொருள். அது யார் மீது வேண்டுமானாலும் வரலாம். தாய், தந்தை, சகோதரம், நட்பு, சொந்தம் என யாரிடம் வேண்டுமானாலும் வரலாம். ஆனால் காதல் என்ற சொல்லுக்கு சுட்டப்படும் பொருளாக மாறிவிட்டது ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையேயான அன்பு.

இதில் தவறொன்றும் இல்லை. அது இச்சையாக மட்டும் இல்லாத வரை.

காதலென்பது...

நீ வருவாய் என நானும்
நான் வருவேன் என நீயும்
பல மணி காத்திருந்து
இழந்த பல நேரத்தையும்
இன்ன பிற இன்பத்தையும்
சட்டென மீட்டெடுத்தது போல்
இருவரும் சந்தித்து காத்திருப்புக்கு
விடை கொடுத்து அனுப்பினோம்

ஒரு காலத்தில் காதல் என்பது ஒரு தவறான விடயமாகக் கருதப்பட்டுவந்தது. ஆனால் இன்று கள்ளத்தொடர்பைக் கூட பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. மெரினா கடற்கரை ஆசியாவிலேயே பெரியது அளவில் மட்டுமல்ல இன்று அங்கு குவியும் ஜோடிகளிலும் தான். இவர்களில் எத்தனை ஜோடி நிஜக் காதலர்கள்?

கணக்கெடுப்பு நடத்தினால் கிடைப்பதென்னவோ 10 விழுக்காடாகத்தான் இருக்கும். "காமம் இல்லாக் காதல் அதுக் காதல் இல்லை" என்பதை பலர் ஒப்புக்கொண்டிருக்கிறோம். ஆனால் இன்று காமத்திற்கு மறுபெயர் காதலா? என எண்ணத் தோன்றுகிறது மெரினா சென்றால். கடற்கரை என்னவோ அவர்களுக்கு விடுதியில் எடுத்த அறை போலத் தெரிகிறது.

பொது இடத்தில்
இச்சைக் கொண்டு
இறுக்கியணைத்து இதழ்
முத்தமிட்டு சொன்னான்
இதுதான் காதல் என்று
இது காதலா? காமமா?
என்றக் குழப்பத்தில் மீள
முடியாமல் அவள்

இன்று வெறும் முத்தத்துடன் நின்று விடாமல் அங்கு நடக்கும் சில்மிஷங்கள் சுண்டல் விற்கும் சிறு குழந்தைகளைக் கூட முகம் சுழிக்க வைத்து விடுகிறது. இப்படி வய்துக் கோளாரில் வருபவர்களும், வயது முதிர்ந்த கள்ளத்தொடர்புகளும் நிறைந்த இடமாக மாறிப் போயிருக்கிறது மெரினா.

வெளியூரிலிருந்து வரும் பெற்றோர்கள் இவற்றைப் பார்த்த பின்பு எப்ப்டி தங்கள் பெண்களை படிக்கவோ அல்லது வேலைக்கோ அனுப்புவார்கள்? அவர்கள் சுதந்திரம் பறிக்கப்படக் கூடும். மெரினாவிற்கு வரும் குடும்பங்கள் அவர்கள் குழந்தைகளுடன் வருகின்றனர். அந்தக் குழந்தைகள் "அம்மா அவுங்க என்ன செய்றாங்க"ன்னு கேட்கும் போது பதில் சொல்லத் தினறி இனி இங்கு வரக்கூடாது என வெறுத்துப் போனவர்கள் பலர்.

அன்பு பரிமாற்றம் என்ற பெயரில் நடக்கும் அவர்களின் முத்தப் பறிமாற்றம் அவர்களின் இச்சையைத் தூண்டிவிட்டு இன்னபிற தவறுகளுக்கும் துணையாய் நிற்கிறது. இன்று அங்கு காதலர்களாய்(?)த் திரியும் எத்தனை ஜோடி மணமக்களாகப் போகிறார்கள் என்றால் மிஞ்சுவது ஒற்றை இலக்க விழுக்காடாகத்தான் இருக்கும்.



அவர்களின்
இச்சையைத் தீர்த்துக் கொள்ள மெரினா என்ன லாட்ஜா? அங்கு இருக்கும் கலங்கரை விளக்கம் அவர்களுக்குப் பிடித்த விளக்கா?

பி.கு: மெரீனா மட்டுமல்ல இன்ன்னும் பல கடற்கரை, திரையரங்குகள் இச்சைத் தீர்க்கும் இடமாக மாற்றப் பட்டுள்ளது. என் அன்னை, தந்தை, அண்ணன், சொந்தம், நட்பு, மனிதம், உயிரினங்கள், உயிரற்றவைகள் அனைவருக்கும் நான் சொல்ல விரும்புவது "I LOVE YOU".

40 விவாதங்கள்:

Thenammai Lakshmanan said...

//என் அன்னை, தந்தை, அண்ணன், சொந்தம், நட்பு, மனிதம், உயிரினங்கள், உயிரற்றவைகள் அனைவருக்கும் நான் சொல்ல விரும்புவது "I LOVE YOU".//

ரொம்ப அருமையா சொன்னீங்க புலிகேசி

அகல்விளக்கு said...

சரியாச் சொன்னீங்க தல.....

Anonymous said...

நாகரீக வளர்ச்சியின் உச்சம் இந்த கடற்கரை திரையரங்குகளில் இப்படிப்பட்ட நிகழ்வுகள்..

அன்பு கொண்ட அத்தனை மனங்களுக்கும் இனிய காதலர் தின நல்வாழ்த்துக்கள்....

vasu balaji said...

கடற்கரை வகையறா காதலிலேயே சேர்த்தியில்லாத போது அதை குறிப்பதே தவறு. பொதுவிடத்தை திமிருக்கு பயன்படுத்துவது கண்டிக்கத்தக்கது. நல்ல இடுகை புலிகேசி.

ஆர்வா said...

எல்லாம் வயசுக்கோளாறுதான் சார். பாவம் விடுங்க

சைவகொத்துப்பரோட்டா said...

ஐ லவ் யு டூ தல :))

Chitra said...

It is interesting to hear about Marina Beach. Over here in USA, PDA (Public display of affection) is not allowed in all areas. It is not a matter of legal issue but as a decent etiquette.

ஹேமா said...

புலவரே...சில விஷயங்களை வீட்லயும் சரி வெளிலயும் சரி விட்டுக் கொடுக்கணும் கொடுப்போம்.கண்டுக்காதீங்க.

க.பாலாசி said...

//கலங்கரை விளக்கம் அவர்களுக்குப் பிடித்த விளக்கா?//

பிடித்த விளக்கல்ல நண்பா... சிகப்பு விளக்கு...

நல்ல இடுகை...கோபம் தெரிகிறது...

ஜெட்லி... said...

//அவர்களின் இச்சையைத் தீர்த்துக் கொள்ள மெரினா என்ன லாட்ஜா? அங்கு இருக்கும் கலங்கரை விளக்கம் அவர்களுக்குப் பிடித்த விளக்கா?
//


நல்ல கேள்வி...
அவங்க திருந்த மாட்டாங்க...

amagesh said...

Superb.......But parents should watch their sons\daughters activities in a teen-age and condemn immediately, if they are going to wrong way.

புலவன் புலிகேசி said...

//thenammailakshmanan said...

//என் அன்னை, தந்தை, அண்ணன், சொந்தம், நட்பு, மனிதம், உயிரினங்கள், உயிரற்றவைகள் அனைவருக்கும் நான் சொல்ல விரும்புவது "I LOVE YOU".//

ரொம்ப அருமையா சொன்னீங்க புலிகேசி
//

நன்றி தோழி

புலவன் புலிகேசி said...

//Blogger அகல்விளக்கு said...

சரியாச் சொன்னீங்க தல.....//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ராஜா

புலவன் புலிகேசி said...

//தமிழரசி said...

நாகரீக வளர்ச்சியின் உச்சம் இந்த கடற்கரை திரையரங்குகளில் இப்படிப்பட்ட நிகழ்வுகள்..

அன்பு கொண்ட அத்தனை மனங்களுக்கும் இனிய காதலர் தின நல்வாழ்த்துக்கள்....
//

ம் வாழ்த்துக்கள் தோழி..வருகைக்கு நன்றீ

புலவன் புலிகேசி said...

//வானம்பாடிகள் said...

கடற்கரை வகையறா காதலிலேயே சேர்த்தியில்லாத போது அதை குறிப்பதே தவறு. பொதுவிடத்தை திமிருக்கு பயன்படுத்துவது கண்டிக்கத்தக்கது. நல்ல இடுகை புலிகேசி.
//

ஐயாவுக்கு நன்றி...உண்மைதான் என்ன செய்வது கோபத்தை..

புலவன் புலிகேசி said...

//கவிதை காதலன் said...

எல்லாம் வயசுக்கோளாறுதான் சார். பாவம் விடுங்க
//

:)

புலவன் புலிகேசி said...

//சைவகொத்துப்பரோட்டா said...

ஐ லவ் யு டூ தல :))
//

நன்றி தல

புலவன் புலிகேசி said...

//Chitra said...

It is interesting to hear about Marina Beach. Over here in USA, PDA (Public display of affection) is not allowed in all areas. It is not a matter of legal issue but as a decent etiquette.
//

ம் நன்றிங்க சித்ரா

புலவன் புலிகேசி said...

//ஹேமா said...

புலவரே...சில விஷயங்களை வீட்லயும் சரி வெளிலயும் சரி விட்டுக் கொடுக்கணும் கொடுப்போம்.கண்டுக்காதீங்க.
//

:)

புலவன் புலிகேசி said...

//க.பாலாசி said...

//கலங்கரை விளக்கம் அவர்களுக்குப் பிடித்த விளக்கா?//

பிடித்த விளக்கல்ல நண்பா... சிகப்பு விளக்கு...

நல்ல இடுகை...கோபம் தெரிகிறது//

ஆமாம் நண்பா சிவப்பு விளக்குதான்..நன்றி

புலவன் புலிகேசி said...

//ஜெட்லி said...

//அவர்களின் இச்சையைத் தீர்த்துக் கொள்ள மெரினா என்ன லாட்ஜா? அங்கு இருக்கும் கலங்கரை விளக்கம் அவர்களுக்குப் பிடித்த விளக்கா?
//


நல்ல கேள்வி...
அவங்க திருந்த மாட்டாங்க...
//

ஆமாம் தல இதப்படிச்ச ஒருத்தன் சொல்றான். உனக்கு கிடைக்கல அதான் இப்புடி எழுதுறன்னு..

புலவன் புலிகேசி said...

//ஜெட்லி said...

//அவர்களின் இச்சையைத் தீர்த்துக் கொள்ள மெரினா என்ன லாட்ஜா? அங்கு இருக்கும் கலங்கரை விளக்கம் அவர்களுக்குப் பிடித்த விளக்கா?
//


நல்ல கேள்வி...
அவங்க திருந்த மாட்டாங்க...
//

ஆமாம் தல இதப்படிச்ச ஒருத்தன் சொல்றான். உனக்கு கிடைக்கல அதான் இப்புடி எழுதுறன்னு..

புலவன் புலிகேசி said...

//mag said...

Superb.......But parents should watch their sons\daughters activities in a teen-age and condemn immediately, if they are going to wrong way.
//

ஆமாம் பெற்றோருக்கும் பங்கு இருக்கிறது. ஆனால் அவர்களுக்கு நம்பிக்கை துரோகம்தான் மிஞ்சுகிறது...

Paleo God said...

பதிவும், கவிதையும் பக்கா..

அதென்ன போன் நம்பர போட்டுட்டீங்க..:) புலவரே.

முனைவர் இரா.குணசீலன் said...

உண்மைதான் நண்பா..

காலம் ரொம்பத் தான் மாறிப்போச்சு..

புலவன் புலிகேசி said...

//Blogger ஷங்கர்.. said...

பதிவும், கவிதையும் பக்கா..

அதென்ன போன் நம்பர போட்டுட்டீங்க..:) புலவரே.//

நன்றி தல.சில பதிவுலக நண்பர்கள் கேட்டுக் கிட்டிருந்தாங்க..எல்லோருக்கும் தனித்தனியா அனுப்ப முடியல...அதான் போட்டேன்

புலவன் புலிகேசி said...

//Blogger முனைவர்.இரா.குணசீலன் said...

உண்மைதான் நண்பா..

காலம் ரொம்பத் தான் மாறிப்போச்சு..///

ஆம் நண்பா...நன்றி..

சிவப்ரியன் said...

சில வருடங்களுக்கு முன்பு.. நெருங்கிய நண்பரிடம் பேசிக்கொண்டிருந்தபோது,
அவரது பக்கத்து வீட்டுக்காரைப் பற்றி பரிதாபமாய்ச் சொன்னார்,

" கூட்டுக் குடும்பம், அதுவும் புறாக் கூண்டு மாதிரி வீட்டில்...
பாவம் வெளியிலாவது கொஞ்சம் சந்தோசமா இருக்கலாம்னு பீச்சுக்குப் போனா, எதோ அயிட்டத்த தள்ளிக்கிட்டு வந்த மாதிரி எல்லாரும் பாக்குறாங்க... அவ என் பொண்டாட்டிடான்னா ஒவ்வொருத்தருக்கும் சொல்லமுடியும்....? "

' தனிக்குடுத்தனத்துக்கு சமூகம் இடம் கொடுக்கல... கூட்டுக்குடும்பத்துக்கு வருமானம் இடம்கொடுக்கல... '

சில பரிதாபமான கதைகளும் உண்டு.. கொஞ்சம் இதையும் எழுதுங்க புலவரே!!

(பி.கு: எனக்கு இன்னும் கல்யாணம் ஆகல..;-)

சுசி said...

அருமையான பதிவு புலவரே..

இடையிடையே கவிதை சேர்த்த விதம் நல்லாருக்கு.

திருந்துவாங்கன்னு நினைக்கிறீங்க??

புலவன் புலிகேசி said...

//Anonymous சிவப்ரியன் said...

சில வருடங்களுக்கு முன்பு.. நெருங்கிய நண்பரிடம் பேசிக்கொண்டிருந்தபோது,
அவரது பக்கத்து வீட்டுக்காரைப் பற்றி பரிதாபமாய்ச் சொன்னார்,

" கூட்டுக் குடும்பம், அதுவும் புறாக் கூண்டு மாதிரி வீட்டில்...
பாவம் வெளியிலாவது கொஞ்சம் சந்தோசமா இருக்கலாம்னு பீச்சுக்குப் போனா, எதோ அயிட்டத்த தள்ளிக்கிட்டு வந்த மாதிரி எல்லாரும் பாக்குறாங்க... அவ என் பொண்டாட்டிடான்னா ஒவ்வொருத்தருக்கும் சொல்லமுடியும்....? "

' தனிக்குடுத்தனத்துக்கு சமூகம் இடம் கொடுக்கல... கூட்டுக்குடும்பத்துக்கு வருமானம் இடம்கொடுக்கல... '

சில பரிதாபமான கதைகளும் உண்டு.. கொஞ்சம் இதையும் எழுதுங்க புலவரே!!

(பி.கு: எனக்கு இன்னும் கல்யாணம் ஆகல..;-)//

ம் எழுதிருவோம்..வருத்தப்படாதீங்க தல சீக்கிரம் ஆயிரும்

புலவன் புலிகேசி said...

//சுசி said...

அருமையான பதிவு புலவரே..

இடையிடையே கவிதை சேர்த்த விதம் நல்லாருக்கு.

திருந்துவாங்கன்னு நினைக்கிறீங்க??
//

நன்றி தோழி..எனக்கு கொஞ்சம் நம்பிக்கை இருக்கு. பாப்போம்

"உழவன்" "Uzhavan" said...

நல்லாவே சொல்லிருக்கீங்க

T.V.ராதாகிருஷ்ணன் said...

அருமையா சொன்னீங்க

அன்புடன் அருணா said...

மிக நேர்மையான கோபம்.

எட்வின் said...
This comment has been removed by the author.
எட்வின் said...
This comment has been removed by the author.
எட்வின் said...

இந்த பதிவு யூத்ஃபுல் விகடனின் காதல் பக்கத்தில் வெளியாகியுள்ளமைக்கு வாழ்த்துக்கள்.
http://youthful.vikatan.com/youth/Nyouth/feb14/index.asp

Unknown said...

அருமையான இடுகை...
வாழ்துக்கள்

புலவன் புலிகேசி said...

//"உழவன்" "Uzhavan" said...

நல்லாவே சொல்லிருக்கீங்க
February 13, 2010 5:10 PM
T.V.ராதாகிருஷ்ணன் said...

அருமையா சொன்னீங்க
February 13, 2010 5:56 PM
அன்புடன் அருணா said...

மிக நேர்மையான கோபம்.
//

நன்றி நண்பர்களே

புலவன் புலிகேசி said...

/"உழவன்" "Uzhavan" said...

நல்லாவே சொல்லிருக்கீங்க
February 13, 2010 5:10 PM
T.V.ராதாகிருஷ்ணன் said...

அருமையா சொன்னீங்க
February 13, 2010 5:56 PM
அன்புடன் அருணா said...

மிக நேர்மையான கோபம்.
//

நன்றி நண்பர்களே...