கடவுளை மற..மனிதனை நினை..

06 November 2009

கண்டேன் கடவுளை....

9:53:00 AM Posted by புலவன் புலிகேசி 23 comments

உழுது விதை விதைத்து
நாற்று நட்டு நீர்ப் பாய்ச்சி
கதிர் அறுக்கும் விவசாயி
உழைப்பில்....

நல்லவன் கெட்டவன்
தெரியாமல் யாரைப் பார்த்தாலும்
புன்னகை செய்யும் பச்சிளம்
குழந்தையின் சிரிப்பில்...

தோல்வியில் துவண்டு
விழும் போது தோள்
கொடுத்துத் தூக்கும்
தோழமையிடம்...

ஆதறவற்றோர் இல்லத்தில்
50 காசு மிட்டாய்க்கு
அழகாய் சிரிக்கும்
சிறுவனிடம்....

விபத்தில் சிக்க நேர்ந்த போது
என் கையைப் பிடித்துக்
காப்பாற்றிய பெயர் தெரியாத
மனிதனிடம்....

கண்டேன் கடவுளை....
கோவிலில் அல்ல....

23 விவாதங்கள்:

வெண்ணிற இரவுகள்....! said...

நல்ல முயற்சி நன்றாய் இருந்தது புலிகேசி ..................................
"கடவுள் இல்லன்னு எல்லாம் நாத்திகம் பேசாதீங்க " கமல் சொன்னது நியாபகம்
வருகிறது

Sathees said...

Realy a nice lyrics.

பிரபாகர் said...

//கண்டேன் கடவுளை....
கோவிலில் அல்ல....
//

மனிதம்தான் தெய்வமென்கிறீர்! அருமை நண்பா...

பிரபாகர்.

கடல் அலைகள்... said...

அன்பு வெறுப்பு
நல்லது கெட்டது
வெற்றி தோல்வி
பிறப்பு இறப்பு

எல்லாம் சிவம்.

//கண்டேன் கடவுளை....
கோவிலில் அல்ல....//

அழகான பதிவு

ஊடகன் said...

புலவனாக இருந்த நீங்கள் கவிஞனாக முயற்சி செய்திருக்கிறீர்கள்...........
நல்ல முயற்சி வாழ்த்துக்கள்.......

இன்று முதல் நீங்கள் புலவன் புலிகேசி அல்ல, கவிஞன் புலிகேசி.........

Thenammai Lakshmanan said...

//விபத்தில் சிக்க நேர்ந்த போது
என் கையைப் பிடித்துக்
காப்பாற்றிய பெயர் தெரியாத
மனிதனிடம்....//

Final Touch Superb PULAVARE

vasu balaji said...

அழகு. கவிதையும் சிந்தனையும்.

சிவாஜி சங்கர் said...

தன்னை போல் பிறரை நேசி-நீ ஆவாய்
இறைவனின் விசுவாசி..
Siva (ji) Sankar

Srikanth said...

இப்படி உங்களை எழுதவைத்த கடவுளை பாராட்டுகிறேன் :)

முனைவர்.இரா.குணசீலன் said...

கவிதை உண்மையை எதிரொலிக்கிறது நண்பரே...

முனைவர்.இரா.குணசீலன் said...

கோயிலில் மட்டுமே கடவுளைத் தேடும் மாக்களுக்குக் கண்ணில் காணும் இக்கடவுள்கள் தெரிவதில்லை....

அவர்களெல்லாம்...
நாத்திகவாதிகள்...!!!!

Srikanth said...

நண்பர் குணசீலனுக்காக:
கோயிலில் மட்டுமே கடவுளைத் தேடும் அன்பர்களுக்கு கடவுளை கண்ணில் காட்டுகிற புலிகேசியும் ஓர் கடவுளே!

ஊடகன் said...

//கோயிலில் மட்டுமே கடவுளைத் தேடும் அன்பர்களுக்கு கடவுளை கண்ணில் காட்டுகிற புலிகேசியும் ஓர் கடவுளே!//

இருவரும் ஒன்றா.........இல்லை..இல்லவே இல்லை..............

விஜய் said...

கவிதையில் தெரியும் யதார்த்தம் நல்லா இருக்கு நண்பா

விஜய்

அனுபவம் said...

கவிதை ரொம்ப அருமை புலவரே!
வாழ்த்துக்கள் புலிகேசி!

இரசிகை said...

oru pazhaiya paattu....babu-padam peyar..,

"itho yenthan theivam munnaale"-antha paattu appadiye ninaivukku vanthathu..:)

yenakkuth therinthu..
ithu aaththikam naaththikam patri pesi vivaathikka vaikkum kavithai illai..

AZHAGU..!!

ஸ்ரீராம். said...

ஆம். உருவமற்ற கடவுள் பல ரூபங்களில், வடிவங்களில் வெளிப் படுகிறார் என்பது உண்மைதான்.

ஹேமா said...

மனிதம் தேடி அதற்குள் இறைவனைத் தேடும் உங்களுக்குப் பாராட்டு.அருமை.

balavasakan said...

நிஜமான வரிகள் புலவரே .....

Thenammai Lakshmanan said...

உங்களை ஒரு தொடர் இடுகைக்கு அழைத்து இருக்கிறேன்
நீங்கள் நன்றாகசெய்வீர்கள்
சிறப்பாக எழுத வாழ்த்துக்கள்

ஈரோடு கதிர் said...

நிறைவான கவிதை

ரதித்தேன் நண்பா

வெற்றி said...

//வெண்ணிற இரவுகள்....! said...

நல்ல முயற்சி நன்றாய் இருந்தது புலிகேசி ..................................
"கடவுள் இல்லன்னு எல்லாம் நாத்திகம் பேசாதீங்க " கமல் சொன்னது நியாபகம் வருகிறது//

ரிப்பீட்டு

//கண்டேன் கடவுளை....
கோவிலில் அல்ல....
//

சத்தியமான வார்த்தைகள்!

மலரகம்(நாகங்குயில்) said...

விபத்தில் சிக்க நேர்ந்த போது
என் கையைப் பிடித்துக்
காப்பாற்றிய பெயர் தெரியாத
மனிதனிடம்....

மனிதநேயம் கூட கடவுள் உருவில்
நல்ல கவிதை .. அருமை