கடவுளை மற..மனிதனை நினை..

03 July 2010

சிறுமியை பலாத்காரம் செய்த தமிழ்நாட்டு கிழட்டு நாய்


ராமச்சந்திர நாடார் (சாதிப் பேர் ஒரு கேடு) 52 வயதான ஒரு கிழட்டு நாய். இது தமிழகத்தை சேர்ந்ததாம். மும்பையில் டியூசன் சென்டர் நடத்தி வரும் இது டிஸ்லெக்சியா(Dislexia) குறைபாடுடைய ஒரு 13 வயதுக் குழந்தையை மிருகத்தனமாய் பலாத்காரம் செய்து வந்திருக்கிறது. இது குறித்து பெற்றோர் போலீசில் புகார் கொடுக்க அந்த நாய் தமிழகத்தை நோக்கி தப்பியோடி வந்து ஒளிந்திருந்திருக்கிறது.

அதத் தேடி போலீஸ் இங்க வர அது மறுபடியும் மும்பைக்கு போய் முன்ஜாமீன் வாங்க முயற்சி பண்ணிருக்கு. அந்த நேரத்துல போலீஸ் அந்த நாயைக் கைது செய்து விட்டது.

இந்த செய்தியைப் படித்ததும் பகீர் என்றது. 52 வயதாகும் ஒருவன் தன் பேரப் பிள்ளை வயதிலிருக்கும் ஒரு சிறு குழந்தையை பலத்காரம் செய்யும் அளவிற்கு காமம் கண்ணை மறைத்து விட்டதா? மனிதம் என்ற சொல்லுக்கு அர்த்தம் தெரியாத இத்ற்கு எதற்காக மரியாதை?

சிறு குழந்தைகள் பலர் இப்போதெல்லாம் இது போன்ற பாலியல் வன்முறைகளுக்கு ஆளாகின்றனர். படிக்கும் வயதில் வேலைக்கு போகும் குழந்தைகளைப் பார்த்தாலே கண்கள் கலங்கிப்போகும் நிலையில் பலர் இருக்க இந்த நாய்களுக்கு எந்த இரக்கமும் இல்லாமல் போய் விட்டிருக்கிறதே.

இது போன்ற பாலியல் குற்றங்கள் தீவிரவாத செயல்களாக அறிவிக்கப் பட வேண்டும். அரபு நாடுகளில் பாலியல் பலாத்காரத்திற்கான தண்டனைகள் எவ்வளவு கடுமையானது என அனைவருக்கும் தெரியும். அந்த மாதிரி இந்த நாய்களையும் அறுத்து சாவடிக்கனும்.

வினவின் சமீபத்திய "பிஞ்சுகளைக் குதறிய 90 வயது ஆஸ்திரேலிய வெள்ளைக்காரன்" கட்டுரையில் வந்த செய்தியில் தாய்லாந்து நாட்டில் சிறார் விபச்சாரம் கொடிகட்டிப் பறக்கிறதாம் (தாய்லாந்து மட்டுமல்ல இந்தியாவிலுள்ள சுற்றுலாத்தளங்களிலும் கூட). வயது வந்த சிறார்களுடன் உறவு கொள்ள பல வெளிநாட்டு பன்றிகள் அலைந்து கொண்டிருக்கின்றன.

இதற்கு அதனதன் அரசாங்கங்களும் விளக்கு பிடித்து வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கின்றன. சுற்றுலாத்துறையின் வருமானத்திற்காக இது போன்ற மாமா வேலைகளுக்கு அரசும் உடந்தையாக இருக்கின்றது.

இது போன்ற விடயங்களெல்லாம் நித்யானந்தா-ரஞ்சிதா விடயம் அளவிற்கு நமது ஊடகங்களாலும், மக்களாலும் பாவிக்கப் படுவதில்லை. மக்களுக்கு சுவாரஸ்யங்களையும், மாராட்டங்களையும் செம்மொழி மாநாடு போன்றவற்றையும் கொடுத்து கொடுத்து ஏமாற்றி சிந்திக்க விடாமல் வைத்திருக்க துணை போகும் இத்தகைய ஊடகங்களை தூ எனத் துப்பத் தோன்றுகிறது.

16 விவாதங்கள்:

Anonymous said...

இதல்லாம் பெரிய விசயமே இல்லை. சொந்த பேத்தியையே பலாத்காரம் செய்த தாத்தா பத்தி கூட நியூஸ் வந்திருக்கு. இவங்களுக்கெல்லாம் ஆண்குறியை வெட்டிவிடணும். சை.

Unknown said...

நிச்சயமாய் தண்டனைகள் கடுமையாக்கப்பட வேண்டும். அப்புறம் இந்த கேவல ஜந்துக்களை நாயென்று சொல்லி நாய்களை கேவலப்படுத்தாதீர்.

எண்ணங்கள் 13189034291840215795 said...

மிக கொடுமை.:(((

-----------------
தாய்லாந்து நாட்டில் சிறார் விபச்சாரம் கொடிகட்டிப் பறக்கிறதாம்

------------------------

மிக தவறான தகவல் நண்பரே...விசாரிக்காமல் எழுதாதீர்கள்...

புலவன் புலிகேசி said...

//-----------------
தாய்லாந்து நாட்டில் சிறார் விபச்சாரம் கொடிகட்டிப் பறக்கிறதாம்

------------------------

மிக தவறான தகவல் நண்பரே...விசாரிக்காமல் எழுதாதீர்கள்...//

இதோ உங்களுக்கு இது பற்றி சிலத் தகவல்கள்

http://www.ncbi.nlm.nih.gov/pubmed/18469298

http://en.wikipedia.org/wiki/Prostitution_in_Thailand

விசாரிக்காமல் எழுதியவைகள் அல்ல. படித்துப் பாருங்கள்

வெண்ணிற இரவுகள்....! said...

நல்ல பதிவு உலகமயமாதலே இதற்க்கு காரணம்

விஜய் said...

இவன் மட்டும் இல்ல தோழா இன்னும் நிறையா காமுகன் இருக்காங்க ...அவுனுங்கள நடுரோட்டுல வைச்சு துடிக்க துடிக்க சாகடிக்கனும்...தப்பு செய்ய நினைக்கும் போதே பயம் இருக்குற அளவுக்கு

Prathap Kumar S. said...

//இது போன்ற விடயங்களெல்லாம் நித்யானந்தா-ரஞ்சிதா விடயம் அளவிற்கு நமது ஊடகங்களாலும், மக்களாலும் பாவிக்கப் படுவதில்லை. மக்களுக்கு சுவாரஸ்யங்களையும், மாராட்டங்களையும் செம்மொழி மாநாடு போன்றவற்றையும் கொடுத்து கொடுத்து ஏமாற்றி சிந்திக்க விடாமல் வைத்திருக்க துணை போகும் இத்தகைய ஊடகங்களை தூ எனத் துப்பத் தோன்றுகிறது.//


க்கக்க்க்க்கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர த்தூ........ துப்பனும்னு தோனுச்சுன்னா உடனே துப்பிடனும் தல......

அந்த கிழட்டு நாயை நிக்கவச்சு இழுத்து வச்சு அறுக்கனும்.... அதுவும் பப்ளிளிக்கா... அப்பத்தான்
இதுகுறையும்... ஆனா இவனங்களோட எழவெடுத்த சட்டம் இருக்கே...

கசாப்பையே ஒரு வருஷம் விருந்து போட்டு துக்காத்தவனுங்களாச்சே.... இவனுங்கிட்டப்போய்......

Unknown said...

நம் நடைமுறை வாழ்விலேயே குழந்தைகளை,சிறார்களை கொஞ்சுறேன் பேர்வழின்ற சாக்கில் ஆபாசமாக நடக்கும் பல முதியவர்களையும் பார்த்துக்கொண்டு இருக்கிறோம்.டாப்டென் வக்கிரங்களில் இதுவும் ஒன்று

http://rkguru.blogspot.com/ said...

கிழட்டு நாய்....

ஆறகளூர் பொன்.வெங்கடேசன் said...

மனதின் உள்ளே மறைந்து கிடக்கும்
பாலியல் வக்கிரங்கள்...சமயம் கிடைக்கும் போது தலை தூக்குகிறது..


மனித நேயம் இல்லாத இவனைப் போன்ற மிருகங்களுக்கு கடுமையான தண்டனை தர வேண்டும்..

Anonymous said...

rk guru said கிழட்டு நாய்.
இள நாய் செய்தால் சரியா?
தமிழ் வெங்கட் said. மனித நேயம் இல்லாத இவனைப் போன்ற மிருகங்களுக்கு கடுமையான தண்டனை தர வேண்டும்.
இது தான் சரியான தீர்வு.

புலிகேசி நாடார் said...

எலே,,,,,

புலிகேசி ராசா, வெள்ள நைட்டு கார்த்திய கூட்டிட்டு மங்களூர் சிவா வீட்ல நடக்கிற பஞ்சாயத்துக்கு வாங்கலே..


நீங்கதான்லே புது புரட்சி திலகம்ஸ்லே..

உண்மையான புரச்சிகாரங்கிறது அங்க வந்தும் காட்டுங்கலே...

http://mangalore-siva.blogspot.com/2010/07/blog-post.html

Anonymous said...

//கலாநேசன் said.. அப்புறம் இந்த கேவல ஜந்துக்களை நாயென்று சொல்லி நாய்களை கேவலப்படுத்தாதீர்.//
எனக்கும் இதில் உடன்பாடு.

ராஜவம்சம் said...

சட்டங்கள் கடுமையானால் குற்றங்கள்
குறையும் கண்டிப்பாக.

'பரிவை' சே.குமார் said...

நிச்சயமாய் தண்டனைகள் கடுமையாக்கப்பட வேண்டும்.

சட்டங்கள் கடுமையானால்
குற்றங்கள் குறையும்.

Harinarayanan said...

இதுக்கெல்லாம் சட்டங்கள் கடுமையாக்கப்பட வேண்டும்னு சொல்லிக்கிட்டிருந்தா ஒன்னும் வேலைக்காகாது. நமக்கு தெரிஞ்சி தப்பு நடக்கிற இடத்துல அந்நியன் ரேஞ்சுக்கு நாமளே (பொதுமக்களே) இறங்கி தண்டனைய கொடுத்துடனும்!அப்பத்தான் இவனுங்க எல்லாம் அடங்குவானுங்க. இப்படி ஒரு மானங்கெட்ட பொழப்புக்கு இவனுங்க எல்லாம் தூக்கு மாட்டிக்கிட்டு தொங்கலாம். நாட்டுல ஜனத்தொகையாவது கொறையும். என்ன நான் சொல்றது.....
பத்மஹரி,
http://padmahari.wordpress.com