கடவுளை மற..மனிதனை நினை..

18 July 2010

மனிதம் இருந்தால் படியுங்கள்(யார் இந்த டௌ கெமிக்கல்ஸ்?)-5

10:26:00 AM Posted by புலவன் புலிகேசி , 9 comments

பல்லாயிரம் பேரைக் கொன்றுக் குவித்த யூனியன் கார்பைடு நிறுவனத்தைக் கையகப் படுத்தியிருக்கும் இந்த டௌ கெமிக்கல்ஸ் யார்? என்ற வரலாற்றைப் பார்ப்போம்.

### வியத்நாம் மீது நடத்திய ஆக்கிரமிப்புப் போரில் கம்யூனிஸ்ட் கொரில்லாப் படையை எதிர்கொள்ள இயலாமல் "ஏஜந்த் ஆரஞ்சு" என்ற கொடிய ரசாயனத்தை 210லட்சம் காலன் அளவுக்கு விமானப்படை மூலம் காடுகளில் பொழிந்தது அமெரிக்க இராணுவம். இந்த ஏஜண்ட் ஆரஞ்சுடன் டையாக்ஸின் என்ற கொடிய நஞ்சையும் கலந்து அமெரிக்க இராணுவத்திற்கு வழங்கிய நிறுவனங்களுள் முக்கியமானது இந்த டௌ கெமிக்கல்ஸ்.

48 லட்சம் வியத்நாம் மக்கள் பாதிக்கப் பட்டனர். 5 லட்சம் குழந்தைகள் ஊணத்துடன் பிறந்தன. அதோடில்லாமல் இதை தெளித்த அமெரிக்க சிப்பாய்களும் கடுமையான நோய்க்கு ஆளாயினர். 1984ம் ஆண்டு இவர்களுக்கு 18கோடி டாலர் இழப்பீடு வழங்க உத்தரவிட்டது. அதே நேரத்தில் இந்த ஏஜெண்ட் ஆரஞ்சு மூலம் பாதிக்கப் பட்ட மக்கள் அமெரிக்க நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கை எதிர்த்து நிவாரணம் தர முடியாது என மறுத்துக் கொண்டிருக்கிறது இந்த டௌ.

### ஜெல்லியைப் போல கொழகொழப்பானதும் தோலில் பட்டவுடன் தீயாய் எரியக் கூடியதுமான நாபாம் குண்டுகளும் இந்த டௌ கெமிக்கல்ஸின் தயாரிப்புதான்.

வியத்நாமில் இந்த குண்டுகளை வீசிய அமெரிக்க இராணுவ அதிகாரி "இந்த டௌ கெமிக்கல்ஸ் பசங்க கில்லாடிங்க முதல்ல அந்த குண்டுல பாலைஸ்டரின் கலந்து அனுப்பினாங்க. ஆனா அவனுங்க(வியத்நாம் மக்கள்) தண்ணில குதிச்சித் தப்பிச்சிட்டானுங்க. அப்பறம் பாஸ்பரஸ் கலந்து அனிப்பி விட்டாங்க. த்ண்ணிலயும் இது எரியும். ஒரு சொட்டுப் பட்டா எலும்பு வரைக்கும் போயி சாவு நிச்சயம்." என டௌ கெமிக்கல்ஸை சிலாகித்து பேசியிருக்கிறார்.

### முதல் உலகப் போரின் போதே விசவாயுக் குண்டுக்குத் தேவையான இரசாயணப் பொருட்களை டௌ தயாரித்து விற்றது. டௌ கெமிக்கல்ஸின் ஜெர்மன் கூட்டாளியான ஐ,ஜி. பார்பென் நிறுவனம் ஆஸ்விட்ஸ் கொலைக்கூட்டத்துக்குத் தேவையான ஹைட்ரஜன் சயனைடு என்ற விசவாயுவைத் தயாரித்து ஹிட்லருக்கு கொடுத்தது. "போபால் மக்களின் உடலில் கண்டு பிடிக்கப் பட்டதும் இந்த ஹைட்ரஜன் சயனைடு தான் என்பது குறிப்பிடத் தக்கது."

இதனைத் தயாரித்தக் குற்றத்துக்காகஓட்டோ அம்புரோஸ் என்ற அதிகாரி 8 ஆண்டுகள் சிறை வைக்கப் பட்டான். தண்டனைக் காலம் முடிந்ததும் தன் நிறுவனத்தில் பணியாற்ற அவனை அழைத்ஹ்டுக் கொண்டது இந்த டௌ.

### இன்று உலகெங்கும் தடை செய்யப் பட்டிருக்கும் டி.டி.டி எனும் பூச்சிக் கொல்லி மருந்தை "மனிதர்களுக்கு எவ்விதத்திலும் தீங்கல்ல" என்று விளம்பரம் செய்து விற்பனை செய்தது டௌ.

### டர்ஸ்பன் என்ற பெயரில் பயன் படுத்தப் ப்டும் வீட்டு உபயோக பூச்சிக் கொல்லி மருந்தும் டௌவின் தயாரிப்புதான். இது குழந்தைகளுக்கு நரம்பியல் நோய்கள், பார்வையிழப்பு, மனநோய், புற்றுநோய் ஏற்படுத்தும் என கண்டறியப் பட்டு 1999-ல் அமெரிக்காவில் தடை செய்யப் பட்டது.

1998-ல் இந்த மருந்தை அமெரிக்க மாணவர்களுக்கு பணம் கொடுத்து அவர்கள் மீது சோதனை செய்து "இது பாது காப்பானது" எனப் பொய்யாக விளம்பரம் செய்தது. இந்தக் குற்றத்திற்காக 2003-ம் ஆண்டு நியூயார்க் மாநில அரசுக்கு 2 மில்லியன் டாலர் அபராதம் கட்டியது.

ஆனால் இதே மருந்து பாதுகாப்பானது என விளம்பரம் செய்து இன்றும் இந்தியாவில் விற்பனை செய்யப் பட்டு வருகிறது.

### 1979-ல் அமெரிக்காவில் தடை செய்யப் பட்ட டி.பி.சி.பி என்ற அபாயகரமான பூச்சிக் கொல்லி மருந்தை நெமகான், ப்யூமோசோன் என்ற பெயர்களில் மத்திய அமெரிக்க நாடுகளில் விவசாயிகளுக்கு டௌ விற்பனை செய்தது. இதனால் பல்லாயிரம் பேருக்கு ஆண்மையிழப்பு ஏற்பட்டது. இதை எதிர்த்து வழக்குத் தொடுத்தவர்கள் மீது பொய்யான வழக்கு என கூறி மானநஷ்ட வழக்கைத் தொடுத்து 1700 கோடி டாலர் கேட்டது இந்த டௌ

ஆனால் ஜூலை 23, 1958 என்ற தேதியிட்ட டௌ கெமிக்கல்ஸின் ரகசிய ஆவணத்திலேயே "இந்த மருந்து விரை வீக்கத்தையும், ஆண்மைக்குறைவையும் ஏற்படுத்தும்" எனக் குறிப்பிடப்பட்டது அம்பலமாகியிருக்கிறது.

### அபாயகரமான இரசாயண, அணுக் கழிவுகளை 136 இடங்களில் கொட்டி வைத்திருப்பதற்காக 40 கோடி டாலர் அபராதத் தொகையை அமெரிக்காவிடம் கடனாக வைத்திருக்கிறது இந்த டௌ.

### 1996-ல் டௌ கெமிக்கல்ஸ் இந்திய அதிகாரிகளுக்கு 2 லட்சம் டாலர் லஞ்சம் கொடுத்திருப்பதை அமெரிக்க அரசின் கடனீட்டு பரிமாற்றக் கழகம் கண்டு பிடித்தது. தடை செய்யப் பட்ட பூச்சிக் கொல்லிகளை இந்தியாவில் விற்பதற்காக இந்திய அதிகார்களுக்கு மீண்டும் லஞ்சம் கொடுத்த டௌ-க்கு பிப்-2007ல் 3,25,000 டாலர் அபராதம் விதித்தது அமெரிக்க கடனீட்டுக் கழகம்.

ஆனால் இந்தியாவில் லஞ்சம் பெற்ற அதிகாரிகள் மீது எந்த நடவடிக்கையும் இந்திய அரசால் எடுக்கப் படவில்லை.

### இந்த டௌ நிறுவனத்துக்கு காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் அபிசேக் மனு சிங்விதான் வழக்குரைஞர்.

நன்றி: புதிய ஜனநாயகம்

9 விவாதங்கள்:

Unknown said...

Nothing to say. very sad and angry after reading this details...

ttpian said...

as long as we have italian mafia team,well,it is booming time for UK/USA pimps

கை.க.சோழன் said...

nalla makkal thondarkal - uyirai vangum companikku udhavum congress vakkeel - avamaanam

Anonymous said...

இந்த பொறுக்கி கும்பல் தயாரிக்கும் பொருட்களை விளக்கியிருந்தால் இன்னும் உபயோகமாயிருந்திருக்கும்.

வெண்ணிற இரவுகள்....! said...

நல்ல பதிவுகளை பரிந்துரையில் இருக்கும் படி செய்யுங்கள் நண்பர்களே .நல்ல பதிவு நண்பா

வெண்ணிற இரவுகள்....! said...

நல்ல பதிவுகளை பரிந்துரையில் இருக்கும் படி செய்யுங்கள் நண்பர்களே .நல்ல பதிவு நண்பா

Jayadev Das said...

உலக மஹா அயோக்கியப் பசங்களா இருப்பானுங்க போலிருக்கே. நம்ம இந்திய அரசாங்கம் தர்மத்துக்கு நடக்குது, மக்கள் அனாதைகள் மாதிரி, கேட்பாரே இல்லை. இருந்தும் இல்லாத அரசு. வெத்து வெட்டுப் பயல்கள்.

வவ்வால் said...

Dow chems indian partner reliance ena paditha ninaivu, is it true?

Appadiyanal avargalum koottu kalavanigale.

Mahindra motors khesub mahindra pathi avvalava media kurai sollamal iruppathum periya comedy.

புலவன் புலிகேசி said...

டௌ கெமிக்கல்ஸுக்கு ஆரம்பத்திலிருந்தே ஆதரவுக் கொடுத்த பெருமை ரத்தன் டடாவையே சேரும். ரிலையன்ஸின் நிலை நான் தெரிந்து கொண்ட பிறகு சொல்கிறேன்.