கடவுளை மற..மனிதனை நினை..

14 February 2010

என் காதல் சொல்ல நேரமில்லை

5:15:00 AM Posted by புலவன் புலிகேசி 29 comments


என் காதல் சொல்ல
உண்மையில் நேரமில்லை

இன்றும் சொல்லாமல் காதலித்துக்
கொண்டிருக்கிறேன் இறுதி

வரை என்னால் சொல்லவும்
முடியாது ஆனால்

இது ஒரு தலைக்
காதலும் இல்லை

இது இரு தலைக்
காதலும் இல்லை

எப்படி சொல்வேன்
என் காதலை

அம்மா அப்பா அண்ணன்
நட்பு மனிதம் மிளிரும்

மனிதர்கள் பாசம் மிக்க
விலங்குகள் உணவு தரும்

தாவரங்கள் உயிரற்ற பொருட்கள்
ஒவ்வொன்றாக சென்று

என் காதல்
சொல்ல நேரமில்லை

29 விவாதங்கள்:

balavasakan said...

சரியாய்ச்சொன்னீங்க புலிகேசி !!அன்புதான் காதல் !!

புலவன் புலிகேசி said...

//Balavasakan said...

சரியாய்ச்சொன்னீங்க புலிகேசி !!அன்புதான் காதல் !!
//

ம் நன்றி தல

Chitra said...

அமெரிக்காவில், Valentine's Day என்பது இதை அடிப்படையாக வைத்து தான் கொண்டாடப்படுகிறது. ஆனால் நம்மூரில், காதலன் காதலி வட்டத்தை தாண்டி வரவில்லையோ.

திருவாரூர் சரவணா said...

காதல் என்பதற்கான அர்த்தத்தை நாம் குறுகிய வட்டத்திற்குள் அடைத்துவிட்டோம் என்று உணரவைக்கும் கவிதை. வாழ்த்துக்கள் புலவரே.

சைவகொத்துப்பரோட்டா said...

நான் கூட இதயம் முரளி மாதிரியோன்னு நினைச்சேன், அட இதுகூட நல்லா இருக்கு.

Thenammai Lakshmanan said...

ஒட்டுமொத்தமாக இங்கேயெ எல்லோருக்கும் சொல்லிட்டீங்களே புலிகேசி

தமிழ் உதயம் said...

காதலை தாண்டியும் காதல் உள்ளது என்பது நிஜம் தான். அருமையான கவிதை புலிகேசி.

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

சரி விடுங்க டயம் இல்லன்னா என்ன பண்ண முடியும்?

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

அருமை.:-))))))

புலவன் புலிகேசி said...

//அத்திரி said...

அருமை
February 14, 2010 7:37 AM //

நன்றி...

//ILLUMINATI said...

பாஸ் .முத முதல்ல தமிழ்ல போஸ்ட் போட்டு இருக்கேன்.
வந்து பாத்துட்டு, புடிச்சு இருந்தா,வோட்டு குத்திட்டு போங்க.
உங்க கருத்துக்களையும் சொல்லுங்க.

http://illuminati8.blogspot.com/2010/02/blog-post.html
//

பாத்துட்டு சொல்றேன்

புலவன் புலிகேசி said...

//Chitra said...

அமெரிக்காவில், Valentine's Day என்பது இதை அடிப்படையாக வைத்து தான் கொண்டாடப்படுகிறது. ஆனால் நம்மூரில், காதலன் காதலி வட்டத்தை தாண்டி வரவில்லையோ.
//

இங்கல்லாம் அந்த மாதிரி பாக்க மாட்டேங்கறாங்க..நன்றி சித்ரா

புலவன் புலிகேசி said...

//திருவாரூரிலிருந்து சரவணன் said...

காதல் என்பதற்கான அர்த்தத்தை நாம் குறுகிய வட்டத்திற்குள் அடைத்துவிட்டோம் என்று உணரவைக்கும் கவிதை. வாழ்த்துக்கள் புலவரே.
//

நன்றி நண்பா

புலவன் புலிகேசி said...

//சைவகொத்துப்பரோட்டா said...

நான் கூட இதயம் முரளி மாதிரியோன்னு நினைச்சேன், அட இதுகூட நல்லா இருக்கு.
//

ஹா ஹா ஹா..நன்றி..

புலவன் புலிகேசி said...

//thenammailakshmanan said...

ஒட்டுமொத்தமாக இங்கேயெ எல்லோருக்கும் சொல்லிட்டீங்களே புலிகேசி
//

ம் ஆனா எல்லாருக்கும் போகாதே...

புலவன் புலிகேசி said...

//தமிழ் உதயம் said...

காதலை தாண்டியும் காதல் உள்ளது என்பது நிஜம் தான். அருமையான கவிதை புலிகேசி.
//

நன்றி தமிழ் உதயம்..

புலவன் புலிகேசி said...

//ஸ்ரீ said...

சரி விடுங்க டயம் இல்லன்னா என்ன பண்ண முடியும்?
February 14, 2010 11:51 AM
ஸ்ரீ said...

அருமை.:-))))))
//

நன்றி ஸ்ரீ..

vasu balaji said...

அருமை கவிதை. அழகு படம்:)

malarvizhi said...

கவிதை நன்றாக உள்ளது

புலவன் புலிகேசி said...

// வானம்பாடிகள் said...
அருமை கவிதை. அழகு படம்:)

//

நன்றி ஐயா...

புலவன் புலிகேசி said...

// malarvizhi said...
கவிதை நன்றாக உள்ளது
//

நன்றி தோழி

விஜய் said...

புதிய கோணத்தில் சிந்தித்து காதலித்த தம்பிக்கு வாழ்த்துக்கள்

விஜய்

ஸ்ரீராம். said...

படத்தில் உள்வட்டம் 'ஆட்டினை' காட்டுகிறதே, வெளி வட்டம் எதைக் காட்டுகிறது என்று கொஞ்ச நேரம் பார்த்தேன். கவிதையில் அந்த சந்தேகமே இல்லை. எல்லா வட்டங்களுக்கும் வெளியில் நின்று யோசித்திருக்கிறீர்கள்.

ஹேமா said...

வாவ்....சூப்பர் புலவரே !

கலகலப்ரியா said...

வித்தியாசமாதான் இருக்கு கேசி... ... நேரமில்லைன்னு சொல்லிட்டிருந்த நேரத்துக்கு சொல்லி இருக்கலாமில்ல... =))..

கண்மணி/kanmani said...

//நேரமில்லைன்னு சொல்லிட்டிருந்த நேரத்துக்கு சொல்லி இருக்கலாமில்ல...//

அதானே....

thiyaa said...

அருமை நல்வாழ்த்துகள்

திவ்யாஹரி said...

நல்ல கவிதை.. இப்படித்தான் இருக்கும்னு நெனச்சேன் புலவரே..

சுசி said...

ரொம்ப வித்யாசமா இருக்கு புலவரே..

தாராபுரத்தான் said...

கையிலேயே கலை வண்ணம்.அருமை போங்க.