கடவுளை மற..மனிதனை நினை..

13 February 2010

டரியல் (13-பிப்ரவரி-2010)

6:06:00 AM Posted by புலவன் புலிகேசி 47 comments
இந்த வாரம் அலுவல் சற்று அதிகம். முன்னரே எழுதி வைத்திருந்ததை வெளியிட்டு முடிந்த அளவு மற்றவர்கள் பதிவை படித்து பலருக்கு பின்னூட்டமிட்டும் சிலருக்கு இட முடியாமலும் கடந்து போனது. மக்கா இனித் தொடர்ந்துப் படிச்சிப் பின்னூட்டமிடுறதுதான் முதல் வேலை(பாக்கலாம்னு யாரோ சொல்றது கேக்குது).
-----------------------



"காற்றிலே ஆடும் காகிதம் நான்
நீதான் என்னைக் கடிதமாக்கினாய்"

இது நான் எழுதலைங்க.."விண்ணைத்தாண்டி வருவாயா" படத்தின் மன்னிப்பாயா பாடலுக்காக எனக்குப் பிடித்த தாமரை எழுதிய வரிகள். இசைப்புயலின் குரலில் கேட்கும் போது உலகமே மறந்து போனது போல் இருக்கிறது. இப்பல்லாம் இந்தப் பாடல்தான் மனசுல ஓடிக் கிட்டிருக்கு.

-----------------------

நண்பர் வெள்ளி நிலா பத்திரிகைக்காக ஒருக் கதை எழுதிக் கேட்டிருந்தார். எழுதிக் கொடுத்து அது வெளியிலும் வந்து விட்டது.உங்களில் பலருக்குக் கிடைத்திருக்கலாம். ஆனா எனக்கு இன்னும் கிடைக்கல. ஷர்புதீன் என்னப் பிரச்சினைன்னு தெரியல நீங்க அனுப்புனது இன்னும் கிடைக்கல.

நண்பர்கள் யாராவது படிச்சிருந்தா உங்க கருத்தை சொல்லுங்க.
-----------------------

நம்ம பரிசல் மற்றும் கேபிளாரின் சிறுகதைத் தொகுப்பு வரும் ஞாயிறு வெளி வருது. நான் போறேன். வர்றவங்கல்லாம் கைத் தூக்குங்க பாப்போம்.

நிகழ்ச்சி நிரல்

தேதி : 14.02.10

நேரம் : மாலை 5.30

விருந்தினர்கள் :
பிரமிட் நடராஜன், நடிகர், தயாரிப்பாளர்,
சி.எஸ்.அமுதன் இயக்குனர் தமிழ்ப்படம்
அஜயன் பாலா, எழுத்தாளர்
பொன்.வாசுதேவன், பதிப்பாளர், அகநாழிகை பதிப்பகம்.
இடம் : டிஸ்கவரி புக் பேலஸ்
6.முனுசாமி சாலை
முதல் மாடி, மஹாவீர் காம்ப்ளெக்ஸ்
பாண்டிச்சேரி ஹவுஸ் அருகில்,
மேற்கு கே.கே.நகர்
சென்னை –78

மேலும் விபரங்களுக்கு: கேபிள் பரிசல்
-----------------------
இந்த வாரப் பதிவர்


இந்த வாரப் பதிவர் பதிவுலகில் எனக்குக் கிடைத்த அண்ணன் "பிரபாகர்" அவர்கள்தான். வாழ்க்கை வாழ்வதற்கே என்ற வலைப்பூவில் இவர் எழுதும் அனுபவக் கட்டுரைகள் நம் வாழ்விலும் சந்தித்த ஒன்றாக இருக்கும். அதை சொல்லும் விதத்திலும் எழுத்து நடையிலும் நான் இவரிடம் கற்றுக் கொள்ள நிறைய இருக்கிறது என எண்ண வைக்கிறது.

சமீப நாட்களாக அவருக்கு வேலை பளு அதிகமிருப்பதால் எழுதவில்லை. அண்ணா சீக்கிரம் வந்து எழுதுங்க.

அண்ணனின் வலைப்பூ "வாழ்க்கை வாழ்வதற்கே" "எண்ணத்தை எழுதுகிறேன்"
-----------------------

இந்த வார டரியல் நம்ம நண்பர் அகல் விளக்கு எழுதிய "அவன்….". யதார்த்தமாய் அழகிய நடையில் சொல்லப்பட்ட இக்கதை என்னை மிகவும் கவர்ந்தது. படிக்கலைன்னா படிச்சிப் பாருங்க.
-----------------------

47 விவாதங்கள்:

Paleo God said...

அந்த ஜோஸ்ய கதைதானே நல்லா இருந்தது புலவரே..:)
---

பிரபாகர் கிட்ட நானே பேசனம்னு இருந்தேன்.
--
புத்தக வெளியீட்டில் சந்திப்போம்.:)

ஜெட்லி... said...

சண்டே மீட் பண்ணுவோம்....

சைவகொத்துப்பரோட்டா said...

//உலகமே மறந்து போனது போல் இருக்கிறது.//

மறந்துராதீங்க... :))

ராமலக்ஷ்மி said...

வெள்ளிநிலா வந்ததும் படிச்சிட்டு சொல்றேன். வாழ்த்துக்கள் புலிகேசி!

புலவன் புலிகேசி said...

ஆஹா வெள்ளி நிலா இதழ் கிடைத்து விட்டது..அனைத்தையும் படித்து விட்டு அPPஊறம் ஒரு பதிவே போடுறேன்.

அன்புடன் நான் said...

பதிவுக்கும் பகிர்வுக்கும் நன்றிங்க.

ஸ்ரீராம். said...

நன்று. நீங்க சொன்ன ஒவ்வொரு இடத்துக்கும் போய் வந்துட்டேன்.

வெள்ளிநிலா said...

விமர்சனம்தான் வெள்ளிநிலாவை அடுத்தகட்டத்துக்கு கொண்டுபோக உதவும்.. waiting ..

க.பாலாசி said...

நல்லது. கதைக்கு வாழ்த்துக்கள்...கிடைக்கும்பட்சத்தில் உங்களது வலையிலும் வெளியிடுங்கள்.

Anonymous said...

பதிவு சிருசு தான் ஆனா விசயம் பெருசு.

அகல்விளக்கு said...

டரியல் அருமை தல....

வெள்ளிநிலாவிற்காக நானும் வெயிட்டிங்....

அவனின் அறிமுகத்திற்கு நன்றி தல.

vasu balaji said...

:). nice darial

Chitra said...

as usual, very nice.

வால்பையன் said...

அண்ணன் பிரபாகர் வாழ்க!

Thenammai Lakshmanan said...

டரியல் அருமை புலிகேசி
வெள்ளி நிலா கதையை வலையில் வெளியிடுங்க புலிகேசி வாழ்த்துக்கள்

Unknown said...

உங்கள் கதையை வலையில் எதிர்பாகிரோம்

Unknown said...

உங்கள் கதையை வலையில் எதிர்பாகிரோம்

கமலேஷ் said...

உங்களின் டரியல் பதிவுகளை இப்போதுதான் கவனிக்கிறேன்...நீங்கள் ரசித்தவற்றை அனைவரிடமும் கொண்டு சேர்க்கும் முயற்சியை எப்படி பாராட்டுவது என்று தெரிய வில்லை. பதிவும் மிக சுவையுடன் இருக்கிறது வாழ்த்துக்கள் தொடருங்கள்...

sathishsangkavi.blogspot.com said...

பதிவுக்கும் பகிர்வுக்கும் நன்றி....

தாராபுரத்தான் said...

தகவல்களுக்கு நன்றிங்க.

முனைவர் இரா.குணசீலன் said...

ஆம் நண்பரே..
இந்தப் பதிவர்களை நானும் அறிவேன்..

நல்ல அறிமுகம்.

அத்திரி said...

meet tomorrow

+Ve Anthony Muthu said...

சூப்பருங்கண்ணா!

Romeoboy said...

விருந்தினர்கள்பட்டியலில் எனது பெயர்விடுபட்டு உள்ளது. இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.

புலவன் புலிகேசி said...

//ஷங்கர்.. said...

அந்த ஜோஸ்ய கதைதானே நல்லா இருந்தது புலவரே..:)
---

பிரபாகர் கிட்ட நானே பேசனம்னு இருந்தேன்.
--
புத்தக வெளியீட்டில் சந்திப்போம்.:)
//

வாங்க தல இன்னைக்கு பாக்கலாம்

புலவன் புலிகேசி said...

//ஜெட்லி said...

சண்டே மீட் பண்ணுவோம்....
//

வாங்க வாங்க

புலவன் புலிகேசி said...

//சைவகொத்துப்பரோட்டா said...

//உலகமே மறந்து போனது போல் இருக்கிறது.//

மறந்துராதீங்க... :))
//

ஹி ஹி ஹி...நன்றி நண்பா

புலவன் புலிகேசி said...

//ராமலக்ஷ்மி said...

வெள்ளிநிலா வந்ததும் படிச்சிட்டு சொல்றேன். வாழ்த்துக்கள் புலிகேசி!
//
நன்றி ராமலெஷ்மி

புலவன் புலிகேசி said...

//சி. கருணாகரசு said...

பதிவுக்கும் பகிர்வுக்கும் நன்றிங்க.
//

நன்றி நண்பா கொஞ்ச நாளா நம்மப் பக்கம் ஆளையே காணோம்..

புலவன் புலிகேசி said...

//ஸ்ரீராம். said...

நன்று. நீங்க சொன்ன ஒவ்வொரு இடத்துக்கும் போய் வந்துட்டேன்.
//

நன்றி நண்பா

புலவன் புலிகேசி said...

//வெள்ளிநிலா said...

விமர்சனம்தான் வெள்ளிநிலாவை அடுத்தகட்டத்துக்கு கொண்டுபோக உதவும்.. waiting ..
//

நிச்சயம் டரியலாக்குகிறேன்..

புலவன் புலிகேசி said...

//க.பாலாசி said...

நல்லது. கதைக்கு வாழ்த்துக்கள்...கிடைக்கும்பட்சத்தில் உங்களது வலையிலும் வெளியிடுங்கள்.
//

தல கிடைச்சிருச்சி...விரைவில் போடுறேன்

புலவன் புலிகேசி said...

//ஆர்.கே.சதீஷ்குமார் said...

பதிவு சிருசு தான் ஆனா விசயம் பெருசு.
//

நன்றிங்க

புலவன் புலிகேசி said...

//அகல்விளக்கு said...

டரியல் அருமை தல....

வெள்ளிநிலாவிற்காக நானும் வெயிட்டிங்....

அவனின் அறிமுகத்திற்கு நன்றி தல.
//

நன்றி தல

புலவன் புலிகேசி said...

//வானம்பாடிகள் said...

:). nice darial
//

நன்றி ஐயா..உடல்நிலை இப்போது எப்படி உள்ளது?

புலவன் புலிகேசி said...

//Chitra said...

as usual, very nice.
//

நன்றி தோழி

புலவன் புலிகேசி said...

//வால்பையன் said...

அண்ணன் பிரபாகர் வாழ்க!
//

ஆஹா அடுத்த மந்திரித் தேர்தல்ல நிக்க சொல்வீங்க போல...நன்றி வாலு

புலவன் புலிகேசி said...

//thenammailakshmanan said...

டரியல் அருமை புலிகேசி
வெள்ளி நிலா கதையை வலையில் வெளியிடுங்க புலிகேசி வாழ்த்துக்கள்
//

கண்டிப்பா...

புலவன் புலிகேசி said...

//V.A.S.SANGAR said...

உங்கள் கதையை வலையில் எதிர்பாகிரோம்
//

விரைவில்

புலவன் புலிகேசி said...

//கமலேஷ் said...

உங்களின் டரியல் பதிவுகளை இப்போதுதான் கவனிக்கிறேன்...நீங்கள் ரசித்தவற்றை அனைவரிடமும் கொண்டு சேர்க்கும் முயற்சியை எப்படி பாராட்டுவது என்று தெரிய வில்லை. பதிவும் மிக சுவையுடன் இருக்கிறது வாழ்த்துக்கள் தொடருங்கள்...
//

மிக்க நன்றி கமலேஷ்..

புலவன் புலிகேசி said...

//Sangkavi said...

பதிவுக்கும் பகிர்வுக்கும் நன்றி....
//

நன்றி சங்கவி

புலவன் புலிகேசி said...

//Sangkavi said...

பதிவுக்கும் பகிர்வுக்கும் நன்றி....
//

நன்றிங்க

புலவன் புலிகேசி said...

//முனைவர்.இரா.குணசீலன் said...

ஆம் நண்பரே..
இந்தப் பதிவர்களை நானும் அறிவேன்..

நல்ல அறிமுகம்.
//

ம் நன்றி நண்பரே

புலவன் புலிகேசி said...

//அத்திரி said...

meet tomorrow
//

நிச்சயமா

புலவன் புலிகேசி said...

//+Ve Anthony Muthu said...

சூப்பருங்கண்ணா!
//

நன்றி நண்பா

புலவன் புலிகேசி said...

//||| Romeo ||| said...

விருந்தினர்கள்பட்டியலில் எனது பெயர்விடுபட்டு உள்ளது. இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.
//

நம்ம கூட வெளையாடுரதே இவருக்கு வேலையா போச்சு..

அன்புடன் மலிக்கா said...

ஆக அனைவரும் சந்திக்கிறீங்க ரொம்ப சந்தோஷம்

பிரபாகரண்ணாவைப்பற்றி சொன்னதற்க்கு மிக்க மகிழ்ச்சி.நல்ல அறிமுகங்கள் புலி..