கடவுளை மற..மனிதனை நினை..

11 January 2010

மறுமணம்

6:29:00 AM Posted by புலவன் புலிகேசி 46 comments
தேன்மொழி, வயது 20 பூங்காவூர் கிராமம். பத்தாம் வகுப்பு வரை படித்து விட்டு வீட்டிலேயே இருந்தாள். அதற்குமேல் படித்தால் கெட்டு போய்டுவாளாம். அப்புடின்னு தாய்மாமன் சபாநாயகம் சொன்னதால் படிப்பை நிறுத்தி விட்டனர் அவளது பெற்றோர்.

சபாநாயகம், வயது 35. ஊருக்குள் கட்ட பஞ்சாயத்து செய்து கொண்டு திரியும் முரடன். ஆனால் நல்லவன். தேன்மொழி என்றால் அவனுக்கு உயிர். ஆனால் தேன்மொழிக்கு இவனை பிடிக்காது. காரணம் அவனது முரட்டுத்தனம்.

பக்கத்து வீட்டு பங்கஜம் அம்மாள். இவர் வீடுதான் படிப்பை நிறுத்திய பிறகு தேன்மொழியின் சரணாலயம். பங்கஜம் அம்மாளின் தம்பி ரமேஷ் பொறியியல் முடித்து ஒரு கட்டுமான நிறுவனத்தில் பணி புரிபவன். எப்போதாவது விடுப்பு எடுத்து பங்கஜம் அம்மாள் வீட்டில் வந்து தங்குவது அவனது வழக்கம்.

அப்படி ஒரு நாளில் ரமேஷ் தொலைக்காட்சியை மேய்ந்து கொண்டிருந்த சமயம் சப்தம் கேட்டு வெளியில் ஓடி வந்தான். தேன்மொழிதான் சப்தம் போட்டு கொண்டிருந்தாள். ஆட்டுக்குட்டியை கல்லால் அடித்து விட்டானாம் காக்கையன்.அவளுக்கு ஆடு, நாய், கோழி என்றால் உயிர். அதுகளுக்கும் தேன்மொழி என்றால் உயிர்.

காக்கையனைப் பிடித்து அடித்து அழவைத்து விட்டு அமைதியானாள். அனைத்தையும் வேடிக்கை பார்த்து கொண்டிருத ரமேஷ் புன்னகைத்தான். அவனை பார்த்ததும் ஆட்டு குட்டியை தூக்கி கொண்டு வீட்டுக்கு ஓடி விட்டாள். ரமேசுக்கு அவளை பிடித்திருந்தது. அவளுக்கும்தான். ஆனால் ஜாதி அவளை தடுத்தது. ஆனால் ரமேஷின் ஒவ்வொரு வருகையையும் எதிர்பார்த்து காத்திருப்பாள்.

ஒரு நாள் திடீரென தேன்மொழியின் பாட்டி வீட்டிற்கு வந்து "எலேய் ராசு(தேன்மொழியின் அப்பா) என் பேத்திய என் மொவன் சபாநாயகத்துக்கு குடுத்துடுடா" என்ற வார்த்தை கேட்டு ஆடிப் போனாள் தேன்மொழி. ஆனால் அவளின் பெற்றோர் கொஞ்சமு யோசிக்காமல் சம்மதம் சொன்ன போது, "மாமா எதுக்கும் தென்மொழிய ஒரு வார்த்தை கேட்டுருங்களேன்" என்றான் சபாநாயகம்.

அதுக்கு ராசு "என்னடா கேக்குறது பொட்டக் கழுதய" என்றான். தேன்மொழி கலங்கி போனாள். திருமணம் நிச்சயித்தவாறு நடந்து முடிந்தது. அதன் பின் ஒரு நாள் மீண்டும் ஊருக்கு வந்த ரமேஷ் தேன்மொழியை பக்கத்து வீட்டில் காணாமல் தவித்தான். பங்கஜத்திடம் கேட்டே விட்டான்.

"அக்கா உன்னையே சுத்தி சுத்தி வருமே பக்கத்து வீட்டு பொண்ணு எங்க காணும்?"

"அவ மாமனை கல்யாணம் பண்ணி பக்கத்து தெருவுக்கு போய்ட்டா" என்றதும் ஆடிப்போனான். உடனே புறப்பட்டு ஊருக்கு சென்று விட்டான்.

6 மாதத்திற்கு பின்னால்

அக்கா வீட்டில் ரமேஷ்.அப்போதுதான் தேன்மொழி அங்கு வந்தாள். வெள்ளை புடவையில் வந்தவளை பார்த்து திடுக்கிட்டு எழுந்தான். இவனை பார்த்ததும் கண்ணை கசக்கி கொண்டு ஓடி விட்டள். அக்காவிடம்

"என்ன ஆச்சு?"

"அவனுக்கு எதோ கேன்சர் வியாதியாம் அத மறச்சி கல்யாணம் பண்ணி வச்சி இவ வாழ்க்கைய கெடுத்து புட்டானுங்க" என்றாள்.

ஒரு முடிவுக்கு வந்தவனாய் அக்காவை அழைத்து கொண்டு தேன்மொழி வீட்டுக்கு சென்றவன் ராசுவிடம் பேசினான்

"உங்க பொண்ண நான் கல்யாணம் பண்ணிக்கிறேன்" என்றதும் கோபத்தில் கொதித்தெழுந்த ராசு

"ஏண்டா நாய என்ன தைரியம் இருந்தா வேத்து சாதிக்கார பய நீ ஒரு முன்டச்சிய பொண்ணு கேட்டு வந்துருப்ப" என்று ரமேஷை அடித்தே விட்டான்.

"அய்யய்யோ சாமிக்குத்தமாயிப் போச்சே என் பேத்திய கட்டிக்கிறேன்னு சொல்லி புட்டானே" என கத்தி கொண்டிருந்தாள் பாட்டி. இதை எல்லாம் கேட்டு கொண்டிருந்த தேன்மொழி திடீரென ஒரு இரும்பு பெட்டியை தூக்கி கொண்டு வந்து அவர்கள் முன் நின்றாள் மஞ்சள் நிற புடவை நெற்றி நிறைய குங்குமம்.

"அப்பா நான் ரமேஷ் கூட போறேன் என்ன ஆசிர்வாதம் பன்னுங்க" என்றவளுக்கும் இரண்டு அடி விழுந்தது. அப்பாவை பிடித்து தள்ளி விட்டு பேசினாள்.

"பொட்ட கழுத பொட்ட கழுதன்னு சொல்லியே என்னய படிக்க விடாம பண்ணி ஒரு வியாதி காரனுக்கு கட்டி குடுத்து என் வாழ்க்கைய சீரழிச்சு புட்டீங்க. நான் ஒன்னும் பொட்ட கழுத இல்ல சாதாரண மனுஷி. எனக்கும் ஆசாபாசங்கள் இருக்கு" எனக் கத்தியவளை பார்த்து வியப்பில் வாயடைத்து போனான் ராசு.

தேன்மொழி ஒரு புதுமைப் பெண்ணாய் தெரிந்தாள் ரமேசுக்கு. அவளை கைபிடித்து அழைத்து செல்லும் போது பாட்டி கத்தினாள் "எலே ராசு இனிமே உனக்கு அவ மவ கெடையாது. அவள தல முழுகிடு. சிறுக்கி நம்ம குடும்ப மானத்த கப்பலேத்திட்டு போறா. நல்லாவே இருக்க மாட்டா" என்றாள்.

இதுதான் தேன்மொழியின் மறுமணத்திற்கு கிடைத்த வாழ்த்து.

46 விவாதங்கள்:

பிரபாகர் said...

மறுமணத்தை எவ்வளவு அழகாய் இக்கதையில் சொல்லிடிருக்கிறீர்கள்? உங்களின் இடுகைகளில் மிகக் கவர்ந்தவைகளில் இதுவும் ஒன்று.... வாழ்த்துக்கள்.

பிரபாகர்.

Anonymous said...

Very Nice story

சைவகொத்துப்பரோட்டா said...

நல்ல விஷயம் சொன்னீர்கள்.

என் நடை பாதையில்(ராம்) said...

சூப்பர் தல...

Chitra said...

நான் ஒன்னும் பொட்ட கழுத இல்ல சாதாரண மனுஷி. எனக்கும் ஆசாபாசங்கள் இருக்கு" ...........இதை பல பெண்களே இன்னும் சரியாக புரிந்து கொண்டு மறுமணத்துக்கு ஆதரவு கொடுப்பதில்லை. இந்த விழிப்புணர்வு எல்லோருக்கும் தேவை. கதையில் அருமையாக சொல்லி இருக்கிறீர்கள்.

ஜெட்லி... said...

நல்லா narrate பண்ணி இருக்கீங்க புலிகேசி ....

திருவாரூர் சரவணா said...

கதை நல்ல கருத்துடன் உள்ளது .

வாழ்த்துக்கள்.
கதை நல்ல கருத்துடன் உள்ளது .

வாழ்த்துக்கள்.

ரோஸ்விக் said...

மறுமணம் ஆதரிக்கப்பட வேண்டும்... எந்த சூழ்நிலையிலும்...
இது உண்மை சம்பவமா தல?

அகல்விளக்கு said...

சமூகம் தன்னை மாற்றிக்கொற்வதற்கு நிறைய காலம் ஆகிவிடுகிறது.

நல்ல பகிர்வு தல...

தொடருங்கள்...

அகல்விளக்கு said...

சமூகம் தன்னை மாற்றிக்கொற்வதற்கு நிறைய காலம் ஆகிவிடுகிறது.

நல்ல பகிர்வு தல...

தொடருங்கள்...

Narmada said...

wow!!!!!!!!!
இந்த கதைய படிச்சுட்டு comments எழுதாம போக முடியுமா ya....

ரொம்ப நல்லா இருந்தது பா....


Inspiring Story!!!!!!!!!!

Keep up the good work

மதார் said...

gud story

Rajeswari said...

கதை கரு நன்று..

இன்னும் உணர்வுகள் மேலிட ,அழுத்தமாய் இருந்திருந்தால் இன்னும் அருமையாக இருந்திருக்கும்..

வாழ்த்துக்கள்...

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

நல்ல கருத்து எளிமையான நடை.பாராட்டுகள்.

அண்ணாமலையான் said...

உங்களின் விழிப்பணர்வு முயற்ச்சிக்கு என் பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்... தொடரட்டும் உம் பணி...

அன்புடன் மலிக்கா said...

அருமையிலும் அருமை நான் கவிவடிவில் எழுதிவைத்திருக்கிறேன் மறுமணத்தைப்பற்றி.

விழிப்புணவை செய்துக்கொண்டேயிருப்போம் நிச்சயம் நல்லது நடக்கும் என்ற நம்பிக்கையில்..

வாழ்த்துக்கள் தோழமையே

ஸ்ரீராம். said...

ரெண்டு வருஷம் போகட்டும் ஆரம்ப எதிர்ப்புகள் கரைந்து எல்லோரும் ஒன்றாகி விடுவார்கள்..!

vasu balaji said...

good story

சிவாஜி சங்கர் said...

சமுதாய கருத்துக்கள் எவ்வித்தத்திலும் சொல்லபட்டாலும் நன்றே..
கதைவடிவம் கூடுதல் அழுத்தம் பெறல் முக்கியம் தோழரே..
உங்களுக்கு வளமான எதிகாலம் இருக்கு :)

Paleo God said...

புலவரே....ஸூப்பர் விஷயம்..

வாழ்த்துக்கள்.:)

க.பாலாசி said...

சமுதாயத்திற்கு தேவையான கருத்துள்ள பதிவு நண்பா... மறுமணம் கணவனை இழந்த பெண்களுக்கு அவசியமான ஒன்று.

balavasakan said...

நண்பா வழமை போல அசத்தி இருக்கிறீர்கள்

ராஜவம்சம் said...

ஹலோ புலவரே கை குடுங்க

நல்லா இருக்கு

திவ்யாஹரி said...

நல்ல பதிவு.. கதை அல்ல..
பதிவு.. மக்கள் மனதில் பதிய வேண்டிய பதிவு..


பெண் உரிமை பற்றியும், மறுமணம் பற்றியும் எழுதி அசத்துறீங்க..
உங்க குரலால் பெண்கள் மனம் மாறினால் சந்தோசம்..

வெற்றி said...

அருமையான கருவும் கருத்தும் உள்ள கதை புலவரே!
இறுதியில விரும்புகிறேன் படம் ஞாபகத்துக்கு வந்துச்சுங்க..

பின்னோக்கி said...

நல்ல கதை. கடைசி வரி பஞ்ச்

கலகலப்ரியா said...

நல்லாருக்கு புலிகேசி... :)

நிலாமதி said...

புரட்சிகரமான் கருத்துள்ள கதையை எழு திய உங்களுக்கு......... என் நன்றிகள்.

திவ்யாஹரி said...
This comment has been removed by the author.
திவ்யாஹரி said...

minus vote na enna nanba

ragoths said...

just like tamil cinima. the author should try tamil tv serials

நசரேயன் said...

ரசித்தேன் புலவரே

Priya said...

நல்லா இருக்கு, வாழ்த்துக்கள்!

Thenammai Lakshmanan said...

நல்ல அருமையான மறுமணம் புலிகேசி

பெண்கள் இது போல் துணிந்து முடிவெடுக்க வேண்டும்

புலவன் புலிகேசி said...

நன்றி

@ பிரபாகர்

@ சின்ன அம்மிணி

@ சைவகொத்துப்பரோட்டா

@ Chitra

@ ஜெட்லி

@ சரண்

@ ரோஸ்விக்

@ அகல்விளக்கு

@ Narmada

@ மதார்

@ Rajeswari

@ ஸ்ரீ

@ அண்ணாமலையான்

@ அன்புடன் மலிக்கா
//said...

அருமையிலும் அருமை நான் கவிவடிவில் எழுதிவைத்திருக்கிறேன் மறுமணத்தைப்பற்றி.

விழிப்புணவை செய்துக்கொண்டேயிருப்போம் நிச்சயம் நல்லது நடக்கும் என்ற நம்பிக்கையில்..

வாழ்த்துக்கள் தோழமையே
//

நிச்சயம்...இந்த விழிப்புனர்வு முதலில் பெண்களுக்கு வேண்டும்

புலவன் புலிகேசி said...

நன்றி

@ ஸ்ரீராம்

@ வானம்பாடிகள்

@ Sivaji Sankar

@ பலா பட்டறை

@ க.பாலாசி

@ Balavasakan

@ ராஜவம்சம்

@ திவ்யாஹரி

@ வெற்றி

//வெற்றி said...

அருமையான கருவும் கருத்தும் உள்ள கதை புலவரே!
இறுதியில விரும்புகிறேன் படம் ஞாபகத்துக்கு வந்துச்சுங்க..
//

அப்படியா இன்னும் அந்த படம்பாக்கல நண்பா. பார்க்கிறேன்

@ பின்னோக்கி

@ கலகலப்ரியா

@ நிலாமதி

//திவ்யாஹரி said...

minus vote na enna nanba
//

அது தமிழ்மணத்துல போடுவாங்க. இப்பதான வந்துருக்கீங்க. போக போக தெரியும்

புலவன் புலிகேசி said...

நன்றி

@ abi

//abi said...

just like tamil cinima. the author should try tamil tv serials
//

அந்த ஆசையெல்லாம் இல்லீங்க

@ நசரேயன்

@ Priya

@ thenammailakshmanan

shortfilmindia.com said...

pulikesi.. நல்ல நாட் என்றாலும் இன்னும்..இன்னும் ..இன்னும் எதிர்பார்க்கிறேன்
கேபிளசங்கர்

பனித்துளி சங்கர் said...

சிந்திக்கத்தூண்டும் பதிவு நண்பரே .
வாழ்த்துக்கள் !





வாசகனாய் ஒரு கவிஞன் ,
பனித்துளி சங்கர்
http://wwwrasigancom.blogspot.com

வெற்றி said...

அய்யோ சாரிங்க..அது விரும்புகிறேன் இல்ல பைவ் ஸ்டார்..

அதுல நாயகிய மறுமணம் செய்ய கட்டாயப் படுத்தும் போது அவ வீட்ட விட்டு கிளம்பி கணவனின் நண்பர்களுடன் மீதி வாழ்கையை கழிப்பதாய் கதை முடியும்..

ஹேமா said...

புலவரே நல்ல சமூகச் சிந்தனை தூண்டும் கதை.

உண்மையில் இப்படி ஒரு தைரியமான ரமேஸ் கிடைக்கணும்.
அந்தப் பொண்ணுக்கும் துணிச்சல் வேணும்.அதுதான் முக்கிய பிரச்சன.

priyamudanprabu said...

நான் ஒன்னும் பொட்ட கழுத இல்ல சாதாரண மனுஷி. எனக்கும் ஆசாபாசங்கள் இருக்கு" ...........இதை பல பெண்களே இன்னும் சரியாக புரிந்து கொண்டு மறுமணத்துக்கு ஆதரவு கொடுப்பதில்லை. இந்த விழிப்புணர்வு எல்லோருக்கும் தேவை. கதையில் அருமையாக சொல்லி இருக்கிறீர்கள்.

அதே

திருவாரூர் சரவணா said...

வாழ்த்துக்கள் புலவரே...மறுமணம் கதையோட லிங்க் ராடன் நெட்வொர்க்ல இருக்கு.

angel said...

a very good story though she realised about herself her parents haven't this is the mistake with conservatives

நிகழ்காலத்தில்... said...

கதை நல்லா வந்திருக்கு..

வாழ்த்துகள் நண்பரே

நிகழ்காலத்தில்... said...

கதை நல்லா வந்திருக்கு..

வாழ்த்துகள் நண்பரே