கடவுளை மற..மனிதனை நினை..

27 November 2009

தமிழினத் தலை(வா)...

2:05:00 PM Posted by புலவன் புலிகேசி 19 comments

தமிழினத் தலைவா உனக்கு
நேற்று பிறந்த நாள்

உன் மீது பாசங்கொண்ட
தமிழர் பலர் நீ
இறந்து விட்டாய் என
நினைத்து

கண்ணீர் விட்டு கதறி
கொண்டிருக்கிறார்கள்
அங்கே நீ இல்லை
என்று எண்ணி

புத்தம் (?) தழுவிய சிங்களத்தான்
நம் சகோதரிகளை தழுவி
சகோதரனை கொன்று
குவிக்கிறான்

நீ இல்லை என்று
எண்ணி தமிழக பெரும்(கரும்)புள்ளி
தமிழன் மீது பாசமிருப்பதாய்
நடிக்கின்றான்

வீறு கொண்டு எழுந்து
வருவாய் என என்னை
போன்ற பல தமிழனுக்கு
தெரியும்.

விரைவில் வா....

புகைப்பட உதவி: இளந்தமிழன்

19 விவாதங்கள்:

வெண்ணிற இரவுகள்....! said...

//எண்ணி தமிழக பெரும்(கரும்)புள்ளி
//
ஆம் கரும் புள்ளி கலைஞர்

ஊடகன் said...

தலைவன் திரும்ப வரவேண்டும் என நானும் ஒரு தமிழனாக ஏங்குகிறேன்...........

தலைவா நீ வருவாயா...............?

ஊடகன் said...

ரொம்ப நல்லாருக்குப்பா........

எப்பா நீ இந்த மாதிரிலாம் பேசி பார்த்ததே இல்லப்பா...........?

புலவன் புலிகேசி said...

//எப்பா நீ இந்த மாதிரிலாம் பேசி பார்த்ததே இல்லப்பா...........?//

இயலாத தமிழனாய் ஈழம் பற்றி எழுத எனக்கு தகுதி இல்லை என்றாலும் தலைவன் இறந்தது போல் நம் வலையுலகில் நேற்று நிறைய பதிவுகள் படித்தேன்..அதனால் எழுதினேன்.

க.பாலாசி said...

உங்களது எண்ணம்தான் எல்லோருடையதும்....

vasu balaji said...

எல்லாரும் இதுக்குதான் ஏங்கி நிக்குறோம். நன்று புலிகேசி

அகல்விளக்கு said...

//நீ இல்லை என்று
எண்ணி தமிழக பெரும்(கரும்)புள்ளி
தமிழன் மீது பாசமிருப்பதாய்
நடிக்கின்றான்//

உண்மையைச்சொன்னீங்க தல

ப்ரியமுடன் வசந்த் said...

அருமை சகோதரா...

தலைவர் பிரபாகரன் அவர்களே வாருங்கள் எப்பொழுது வருவீர்கள் என்ற ஏக்க பெருமூச்சு இன்னும் நீண்டு கொண்டே செல்கிறது

ஹேமா said...

கறுப்பு என்று தெரியாமல் வெள்ளையாய் நம்பி ஏமாந்தது எங்கள் ஏமாளித்தனம்.

balavasakan said...

ரெம்பிளேட் நல்லா இருக்கு எங்க title

விஜய் said...

கண்ணீர் வாழ்த்துக்கள்

விஜய்

ரோஸ்விக் said...

வருவார் என்ற நம்பிக்கையுடன்....நானும்.

கலகலப்ரியா said...

:)

thiyaa said...

உண்மையைச்சொன்னீங்க

ஜோதிஜி said...

ஏங்கி நிக்குறோம்

பூங்குன்றன்.வே said...

தலைவரை பற்றிய செய்திகள் உண்மையாக இருப்பின் சந்தோஷப்படும் இளைஞர்கள் நாமாகத்தான் இருப்போம்
புலிகேசி.நல்ல பதிவு.வாழ்த்துக்கள்.

Anonymous said...

annan varuvaar..........
inru thaan ungal pakkam vanthen.kankalil neer thanthuviddeerkal.
thodarnthu niraiya eluthungal.

-raavan rajhkumar-jaffna.

Anonymous said...

mesaiyyaakalai nambi mosam pona thesam

Jackiesekar said...

சூப்பரு...